India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர், காவலூரில் உள்ளது வைணு பாப்பு வானாய்வகம்
இந்திய வானியற்பியல் நிலையத்தின் முதன்மை வானாய்வகம் ஆகும். இது இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் நிறுவப்பட்டுள்ளது. இது அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியால் திறந்துவைக்கபட்டது. இந்திய வானியல் முன்னோடியான வைணு பாப்பு அவர்களின் வானியல் பங்களிப்புக்காக இப்பெயர் சூட்டப்பட்டது.1968ஆம் ஆண்டு 38 செ.மீ. விட்டமுடைய ஒரு தொலைநோக்கியுடன் இது துவக்கப்பட்டது.
திருப்பத்தூர் அடுத்த கெஜ்ஜிநாயக்கன்பட்டி சேர்ந்த முருகன் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கு நிலத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்ய திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். நேற்று பத்திர பதிவு செய்து கொடுத்து வெளியே வந்த போது ஏற்பட்ட தகராறில் ஏற்பட்டு கோவிந்தன் மகன் அரிஷ் என்பவர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் விநாயகமூர்த்தி என்ற இளைஞரை குத்தினார்.
வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாபாரதம் சொற்பொழிவு மகாபாரத கடந்த 39 ஆம் நாட்களாக நடைபெற்றது. இதில் அர்ச்சுனன் தபசு, துரியோதனன் படுகளம், பாஞ்சாலி துயில் உள்ளிட்டவை வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஆம்பூர் வாணியம்பாடி திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜோலார்பேட்டை அருகே ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திலீப்குமார் (வயது 41). இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை எழுந்து பார்த்தபோது தனது வீட்டின் மற்றொரு அறையில் ஜன்னல் கம்பி உடைத்து ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் வைத்திருந்த 2 சவரன் தங்க நகை, 150 கிராம் வெள்ளி நகைகள் திருடுப் போனது. இது குறித்து போலிசார் விசாரிக்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 97.52 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 79.70 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்
வாணியம்பாடி சவுக்குதோப்பை சேர்ந்தவர் காயத்ரி. இவர் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டதாக கூறி காவல் கண்காணிப்பாளர் அலுவககத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் புகார் அளிக்க வந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் 4 பேர் தற்கொலை செய்த நிலையில் கந்து வட்டி கொடுமையால் மண்ணெண்ணெயுடன் புகார் அளிக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்றம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளான கொத்தூர் தகரகுப்பம் சொரக்கல் நத்தம் மல்லானூர் ஆகிய பகுதிகளில் இன்று ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக குப்பம் காவல்துறையினர் மாவட்ட பறக்கும் படையினர் தனி வட்டாட்சியர் நாட்றம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் இணைந்து இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா ஊராட்சிக்கு உட்பட்ட கோயான் கொல்லை பகுதியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதை தொடர்பாக இடம் தேர்வு செய்யும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வந்த நிலையில் சம்பந்தப்பட்ட பகுதியில் நேற்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தாசில்தார் சம்பத் விஏஓ சந்திரமோகன் இருந்தனர்.
காவிரி கூட்டுக் குடிநீர் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பொதுமக்கள் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி வரும் 4ம் தேதி வரை நடைபெறுவதால் குடிநீர் குறைவாக விநியோகம் செய்யப்படும். இதனால் சிக்கனமாக குடிநீர் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
ஆம்பூர் அரங்கல்துருகம் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் வனப்பகுதி எல்லையோரம் அமைந்துள்ளன. கிராமங்களுக்கு இரண்டு காட்டு யானைகள் வந்து பயிர்களை சேதப்படுத்திவிட்டு செல்கின்றன. யானை நடமாட்டம் தெரிந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கிராம மக்கள் தன்னிச்சையாக யானையை விரட்ட முயற்சிக்காமல், வனத்துறையினருக்கு தெரிவித்தால் பணியாளர்கள் மூலம் அவற்றை விரட்ட முடியும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.