India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் செல்வம் மாலை அணிவித்து திறந்து வைத்தார். உடன் செஞ்சிலுவை சங்க திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கிஷோர் பிரசாத் மற்றும் பலர் உள்ளனர்.
திருப்பத்தூர் மக்களே சாதி, குடிமை, குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா, உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம்.அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04179-299100) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
திருப்பத்தூர், ரேஷன் கடைகளில் உரிய அளவு பொருட்கள் வழங்கவில்லை, தரமற்ற பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது, கடை திறக்காமல் இருப்பது, பொருட்களை வழங்க மறுப்பது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அலைய வேண்டாம். <
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஜெர்மன் மொழி பயிற்சி வழங்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி அறிவித்துள்ளார். நர்சிங் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இந்த பயிற்சியில் சேரலாம். விருப்பமுள்ளவர்கள் மாவட்ட இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி அப்ரண்டிஸ் பயிற்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 277 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பயிற்சியின் போது ரூ.15,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு மற்றும் சென்னை,மதுரை, கோவை போன்ற இடங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும். இந்த <
இந்தியன் வங்கியின் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு 20 முதல் 25 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.800, எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.175 செலுத்த வேண்டும். வங்கியில் பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர இது ஒரு நல்ல வாய்ப்பு. வங்கி பணிக்கு செல்லும் கனவோடு தேர்வுக்கு தயாராகி வரும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
திருப்பத்தூர் மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப்படிவத்தினை தமிழ் www.tamilvalarchithuraitn.gov.in என்ற இணையத்திலோ அல்லது தருமபுரி தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ பெற்றுக்கொள்ளலாம். மேலும், தகவலுக்கு 0416 22561 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆணைக்கிணங்க இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இந்த ரோந்து பணியானது நடைபெறுகிறது. இரவு நேரங்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடனடியாக கொடுக்கப்பட்ட எண்ணிற்கு அழைக்கலாம்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளது. அதில், ‘யாராவது வாகனம் வாங்கும் போது ஆன்லைனில் முன்பணம் கட்டினால் தான் வாகனம் தருவோம் என கூறினால் அதை நம்பி பணம் கட்டி ஏமாற வேண்டாம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு பகிரவும்*
திருப்பத்தூர் மக்களே, BC&MBC நலத்துறை சார்பில்
▶️இலவச பட்டா
▶️விலையில்லா சலவை பெட்டி
▶️விலையில்லா தையல் இயந்திரம்
▶️தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன்
▶️கல்வி உதவித்தொகை
▶️தலைசிறந்த தனியார் பள்ளிகளில் மேல்நிலை கல்வி
▶️விருதுகள் (ம) பரிசுகள் ஆகிய திட்டங்கள் செயல்படுகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற திருப்பத்தூர் மாவட்ட BC&MBC நல அலுவலரை (04179-222290) தொடர்பு கொள்ளுங்கள். நண்பர்களுக்கு பகிருங்கள்
Sorry, no posts matched your criteria.