Tirupathur

News April 12, 2025

ரயில்வேயில் வேலை இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு இன்று (ஏப்ரல் 12) முதல் 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 30 வயது வரை. கல்வித்தகுதி – 10ஆம் வகுப்பு, ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பொறியியல் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 12, 2025

6 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியை சேர்ந்த 1ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி பள்ளிக்கு செல்லும் போது தின்பண்டங்களை வாங்கி கொடுத்து பாலியல் சீண்டல் செய்ததாக, குழந்தைகள் நல அலுவலர் சுகப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் ஆலங்காயம் காவல் துறையினர் இன்று (ஏப்.12) காலை விஜயகுமார் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 12, 2025

காட்பாடி அருகே ரயில் மோதி வாலிபர் பலி

image

காவனூர் லத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 40 வயது வாலிபர் நேற்று தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News April 11, 2025

தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய எண்கள்

image

▶மாவட்ட ஆட்சியர் – 04179222111 ▶மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 04179-221105 ▶மாவட்ட வருவாய் அலுவலர் – 04179290391 ▶மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 9789419589 ▶திருப்பத்தூர் வருவாய் கோட்டாச்சியர் – 9445000418 ▶துணை வேளாண் இயக்குனர் – 9443099945 ▶வட்டார போக்குவரத்து அலுவலர் – 9894779636 ▶மாவட்ட துணை ஆட்சியர் – 9443513123 ▶திருப்பத்தூர் வட்டாட்சியர் – 9445000511 ▶தீயணைப்பு துறை-9629516900

News April 11, 2025

மாணவியிடம் அதிமுக பிரமுகர் பாலியல் அத்துமீறல்

image

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள வெங்கடசமுத்திரம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் சீகன்பால். அதிமுக-வைச் சேர்ந்த இவர் மாதனூர் மேற்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் முன்னாள் நிர்வாகி. நர்ஸிங் கல்லூரிக்குள்ள் மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற வழக்கில், ஒன்றரை மாதமாக தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் கல்லூரி நிர்வாகியான இவர் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

News April 11, 2025

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?

image

நாளை ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, திருப்பத்தூர் மண்டல உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நடத்தபட உள்ளன. பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்றவற்றை செய்து கொள்ளலாம். இலவசமாகவே ரேஷன் கார்டில் அப்டேட் செய்துகொள்ளலாம். இந்த அறிவிப்பால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஷேர் பண்ணுங்க

News April 10, 2025

ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம் 

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அதிகாரிகள் விவரங்களை மாவட்ட‌ எஸ்.பி அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். 

News April 10, 2025

LOAN APP மூலம் கடன் பெறுவதை தவிர்ப்போம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பு துறை, சமூக வலைதள பக்கத்தில் LOAN APP மூலம் பரிவத்தனை செய்ய வேண்டாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற லோன் ஆப்பில் நம்முடைய தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டு, மிரட்டப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, LOAN APP மூலம் கடன் பெறுவதை தவிர்ப்போம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள். 

News April 10, 2025

மருத்துவமனை ஓனர் மீது மாணவிகள் பாலியல் புகார்

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் நிஷா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மருத்துவமனைக்கு செவிலியர் பயிற்சிக்காக வரும் மாணவிகளுக்கு, மருத்துவமனை ஓனர் ஜாவித் என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக இன்று அம்பலூர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் ஜாவித்திடம் காவல்துறையினர் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 10, 2025

மணிமேகலை விருதுக்கான அறிவிப்பு வெளியானது

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2024,2025 ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் வட்டார அமைப்புகளில் சிறந்து விளங்கிய குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. நேற்று (ஏப்-09) வெளியிடப்பட்ட அறிவிப்பில் 15-04-25 முதல் விண்ணப்பம் தொடங்கவுள்ளது. 30-04-25 கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!