Tirunelveli

News August 16, 2025

நெல்லையில் 35.100 சம்பளத்தில் அரசு வேலை… APPLY NOW!

image

நெல்லை மாவட்ட மக்களே நமது நெல்லையில் 35,100 சம்பளம் வழங்கும் கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்ப தேதி இன்றுடன் கடைசி (ஆகஸ்ட்.16) எனவே 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பணிக்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நெல்லை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுங்க…. நமது நெல்லை மாவட்டத்தில் பணிபுரியும் வேலையை MISS பண்ணிடாதீங்க… மற்ற்வர்களுக்கு SHAREபண்ணி ஞாபகபடுத்துங்க…

News August 15, 2025

மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கி அசத்திய ஆசிரியர்

image

வெள்ளாங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று சுதந்திர தின விழா நடைபெற்றது. அப்போது பத்தாம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டு சமூக அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு சமூக அறிவியல் ஆசிரியர் சங்கரநாராயணன் தனது சொந்த செலவில் தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கி ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து 12ம் வகுப்பிலும் அதிக மதிப்பெண் எடுக்க வாழ்த்து தெரிவித்தார்.

News August 15, 2025

நெல்லை இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News August 15, 2025

நெல்லை பாஜக மாநாடு ஒத்திவைப்பு

image

நாகாலாந்து ஆளுனர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெல்லையில் ஆகஸ்ட் 17ல் நடக்கவிருந்த பூத் பொறுப்பாளர் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாஜக மாநில தலைவரும் உறுப்பினருமான பாஜக சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

News August 15, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News August 15, 2025

நெல்லையில் நீச்சல் பயிற்றுநருக்கு அழைப்பு

image

நெல்லையில் கேலோ இந்தியா நீச்சல் மையம், பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இயங்குகிறது. இங்கு 30 வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் நீச்சல் பயிற்சியாளர் பணியிடம் காலியாக உள்ளது. 40 வயதுக்குட்பட்ட, தேசிய/சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.25,000 கட்டணம், 11 மாதங்களுக்கு வழங்கப்படும். (விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.20) *ஷேர் செய்யுங்கள்

News August 15, 2025

இளைஞர்கள் நீதி குடும்பத்தில் சமூகப் பணியாற்ற வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் இன்று வெளியிட்டிருக்கும் செய்தியில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இளைஞர் நீதி குடும்பத்திற்கு சமூகப் பணி உறுப்பினர் நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துக்கப்பட்டுள்ளது. 35 வயது கடந்தவராகவும் 65 வயதை கடக்காதவராகவும் இருக்க வேண்டும். உரிய கல்வித் தகுதியும் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

News August 15, 2025

நெல்லையில் 633 வன்கொடுமை வழக்குகள் பதிவு

image

2019ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 446 வழக்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 45 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் மொத்தம் 633 வழக்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற தகவலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இசக்கி பாண்டியன் என்பவருக்கு இன்று வழங்கியுள்ளனர்.

News August 15, 2025

நெல்லை: விபத்தில் ஒருவர் பலி; 15 பேருக்கு தீவிர சிகிச்சை

image

பாளை ஆச்சிமடத்தில் இன்று அதிகாலை டெம்போ டிராவலர் வேனும், அரசு பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது. பஸ்சில் இருந்த 15க்கும் மேற்பட்ட நபர்கள் பொதுமக்களால் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேன் ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காயமடைந்த 15 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News August 15, 2025

நெல்லை : VAO லஞ்சம் கேட்டால் இதை செய்ங்க!

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நெல்லை மாவட்ட மக்கள் 0462-2580908 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!