India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான பதிவுகளை போலீசார் கண்காணிப்பதோ கண்டு கொள்வதோ கிடையாது என்று இன்றைய (டிச.22) நாளிதழ் ஒன்றில் வெளியான செய்திக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன் வெளியிட்டுள்ள மறுப்பு செய்தியில், மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து தவறான பதிவுகளை பதிவு செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி இரவு நேர பொதுமக்களின் உதவிக்காக இன்று (டிச.22) இரவு ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களின் தொடர்பு எண், பெயர் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அட்டவணையை வெளியிட்டுள்ளனர். இரவு நேர உதவிக்கு பொதுமக்கள் இந்த காவலர்களை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
நெல்லையில் நேற்று முன்தினம் நீதிமன்றம் முன்பு மாயாண்டி என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நீதிமன்றம் முன்பு நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கோர்ட்டுகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நெல்லையில் அடுத்தடுத்து கொலை அரங்கேறி வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஜாதி பெயரோடு வீடியோ பதிவேற்றம் செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் எச்சரித்துள்ளார். போலீசார் அனைத்து வகையான சமூக வலைத்தளங்களையும் கவனமாக கண்காணித்து வருவதாக இன்று வெளியான செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நாளை(டிச.23) காலை 9 மணி அளவில் மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மணிமுத்தாறு அணை திறக்கப்படுகிறது.
நெல்லையில் கொட்டப்பட்டுள்ள கேரளா மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே எடுத்து செல்லும் நடவடிக்கை இன்று(டிச.22) நடைபெற்று வருகின்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். அதில் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சியால் கேரளா மருத்துவக் கழிவுகள் முழுமையாக எடுத்து செல்லப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகிலுள்ள ஆழ்வார் துலுக்கப்பட்டியில் இன்று (டிச.22) கபடி போட்டி நடைபெற்றது. இந்த கபடி போட்டியை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன், பாப்பாக்குடி ஒன்றிய திமுக செயலாளர் மாரி வண்ணமுத்து, மாவட்ட கவுன்சிலர் சுதா சின்னத்தம்பி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வள்ளியூர் புறவழிச் சாலையில் குளிர் சாதன ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் உட்பட இரண்டு பேர் படுகாயமடைந்தனர். பத்திற்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் தப்பினர். சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற பேருந்து டயர் வெடித்தத்தில் சாலையோரத்தில் இருந்த மரத்தை இடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஏர்வாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கீழநத்தம் மேலூரை சேர்ந்த மாயாண்டி(25) என்பவர் நேற்று முன்தினம்(டிச.20) நீதிமன்றம் அருகே கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கைதான கீழநத்தம் வடக்கூர் மனோராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரது வாக்குமூலத்தில், தனது சகோதரனை கொலை செய்ததால் பழிக்கு பழியாக நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார் என போலீசார் கூறினர்.
சமூக வலைதளங்களை நெல்லை மாவட்ட போலீசார் கண்காணித்து வருகின்றனர். பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுவருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். போலீசார் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.