India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே இளைஞர் சேதுபதி நேற்று முன்தினம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில், சேதுபதியை கொலை செய்த வெனிஸ் குமார், அவரது நண்பர்கள் வினோத், மனோஜ் ஆகிய 3 பேரை நேற்று(ஜன.18) கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக சேதுபதி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
#இன்று(ஜன.19) காலை 10 மணிக்கு மேலப்பாளையம் முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் உங்கள் நண்பன் மாத இதழின் சார்பில் சாதனையாளர்கள் கௌரவிக்கும் விழா நடக்கிறது. #பிற்பகல் 3 மணிக்கு பாஜக மாவட்ட புதிய தலைவர் பொறுப்பேற்பு விழா கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
நெல்லை ரெட்டியார்பட்டியில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி நேற்று முன்தினம்(ஜன.17) நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று(ஜன.18) தனது ‘X’ தள பதிவில் கூறியிருப்பதாவது, “நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது! நான் முன்பு பதிவிட்டதுபோல் எனது கச்சேரி ஒவ்வொரு ஊர்களிலும் கூடிய விரைவில் நடைபெறும். அடுத்து எந்த ஊர்..?” என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு துறையின் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (ஜன.18) வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனமழைக்கு எதிர்பார்க்கலாம் என கருதப்படுகின்றது. மேலும் நெல்லையில் வானிலை காலை முதல் மந்தகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
சென்னை போன்ற வெளியூர்களில் வசிக்கும் நெல்லை மக்கள் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்தனர். தற்போது மக்கள் மீண்டும் சென்னை திரும்பும் நிலையில் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. வழக்கமாக நெல்லையில் இருந்து சென்னைக்கு ரூ.800 உள்ள நிலையில் இன்று ஒரு டிக்கெட் விலை ரூ.2,000 வரை வசூலிக்கப்பட்டது. நாளை சென்னைக்கு செல்ல டிக்கெட் விலை ரூ.4,000 வரை அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் நேற்று(ஜன.17) வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், இந்திய அளவில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு ‘தரமான காற்று முதலிடம்’ என்று சான்று வழங்கப்பட்டுள்ளது. இதனை நாம் பாதுகாக்க வேண்டும். சொந்த வாகனத்தை குறைவாக ஓட்டுங்கள், பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துங்கள். வாகனத்தை அடிக்கடி பராமரித்து மாசு கட்டுப்பாட்டை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
2024-25 ஆம் ஆண்டிற்கான 60 வயதை கடந்தவர்களுக்கான பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் ஒற்றையர் பிரிவில் நெல்லையை சேர்ந்த தேவதாஸ் ஆபிரகாம் 2ஆம் இடம் பிடித்தார். இரட்டை பிரிவில் நெல்லையை சேர்ந்த தேவதாஸ் ஆபிரகாம், திருப்பூர் சேர்ந்த நியமத்துல்லாஹ் இருவரும் முதலிடம் பிடித்து கோவாவில் நடைபெறும் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர். இவரை நெல்லை மக்கள் பாராட்டினர்.
திருவனந்தபுரம் கோட்டத்தில் நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(ஜன.18) மற்றும் ஜன.25 ஆகிய 2 நாட்கள் நெல்லை வழியாக செல்லும் சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி தூரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த ரயில் குருவாயூர் செல்லாமல் எர்ணாகுளம் அடுத்த ஸ்டேஷனான ஆலுவா ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இசை கச்சேரிக்காக முகாமிட்ட இசைஞானி இளையராஜாவை நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேச ராஜா நேற்று(ஜனவரி 17) இரவு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நாதஸ்வர சக்கரவர்த்தி காருக்குறிச்சி அருணாச்சலம் வாரிசையும் சந்தித்து பேசினார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.
கேரளாவில் வேலை செய்து வந்த தேவர்குளம், வடக்கு புளியம்பட்டி பகுதியை சேர்ந்த சேதுபதி(30), பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று(ஜன.17) மாலை இவரும், இன்னோரு நபரும் பைக்கில் சென்றபோது தேவர்குளம் அருகே விலை உயர்ந்த பைக்கில் வந்த 3 பேர் திடீரென சேதுபதியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். சம்பவம் குறித்து போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.