India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க இந்த <
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

கலியாவூரை சேர்ந்த செய்யது இப்ராஹிம் ஷா, குறிச்சியை சேர்ந்த முத்துக்குமார் ஆகியோர் ஆகிய 2 பேரும் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போக்சோ மற்றும் அடிதடி வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் இரண்டு பேரையும் எஸ்பி சிலம்பரசன் பரிந்துரைப்படி கலெக்டர் சுகுமார் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

தாட்கோ மூலம் பலதுறைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அவ்வகையில், தற்போது ஜெர்மனி வேலைக்கான பயிற்சியை அறிவித்துள்ளது. இதற்கு B.Sc, EEE, B.Tech IT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க<

தாட்கோ மூலம் பலதுறைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அவ்வகையில், தற்போது ஜெர்மனி வேலைக்கான பயிற்சியை அறிவித்துள்ளது. இதற்கு B.Sc, EEE, B.Tech IT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.<

தமிழகத்தின் முதல் அரசு சித்த மருத்துவ கல்லூரியான பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி 60 ஆண்டு பாரம்பரியமிக்கது. இக்கல்லூரியில் இளங்கலை சித்த மருத்துவம் (பிஎஸ்எம்எஸ்) பயில்வதற்கு 100 இருக்கைகள் உள்ளன. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் புலிகள் காப்பகத் துணை இயக்குனர் இளையராஜா தூத்துக்குடி மாவட்ட வனத்துறை அதிகாரியாக இடமாற்றம். அதே போல் களக்காடு துணை இயக்குனர் ராமேஸ்வரன் பதவி உயர்வு பெற்று சென்னை முதன்மை தலைமை வன பாதுகாவலராக நியமனம். திருவாரூர் வன அதிகாரி ஸ்ரீகாந்த் பதவி உயர்வு பெற்று அம்பாசமுத்திரம் புலிகள் காப்பக துணை இயக்குனராக பொறுப்பேற்க உள்ளார்.

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளத்தில் இன்று நடந்த 108 பணியாளர்களுக்கான ஆள்சேர்ப்பு நேர்காணல் முகாமில் மேல புது குடியைச் சேர்ந்த விசுவாச மேரி என்பவர் 108 ஆம்புலன்ஸ் (ஓட்டுநர்) பைலட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம் ஏ ஆங்கில இலக்கியம் பயின்றவர். ஹெவி வெஹிக்கில் லைசென்ஸ் எடுத்துள்ளார். தமிழகத்தின் 3வது 108 ஆம்புலன்ஸ் பெண் ஓட்டுநராக பயிற்சிக்கு பின் பணி செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு சந்திர கிரகணம் (செப்.7) தோன்றும் நிலையில் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நாளை இரவு 8.50 மணி முதல் அதிகாலை 2:25 மணி வரை சந்திர கிரகணத்தை நேரில் பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவீன டெலஸ்கோப் பதவியுடன் துல்லியமாக பார்க்க முடியும். இதற்கான நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது. இலவசமாக பார்வையிடலாம் என அறிவியல் மைய அதிகாரி குமார் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.06] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அசோக்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

திருநெல்வேலியில் காங்கிரஸ் மாநாடு நாளை நடைபெற உள்ளது. மாநாட்டுக்கு செல்லும் வாகனங்களை போக, வர டோல்கேட்டில் ஃப்ரீயா அனுமதிக்க கோரி தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி கடிதம் கடிதம் எழுதி உள்ளது. நாங்குநேரி டோல்கேட் வாகைகுளம் டோல்கேட் கயத்தார் டோல்கேட் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் வந்து செல்ல இலவச அனுமதி கோரி தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.