Tirunelveli

News October 11, 2025

நெல்லை: அரசு மருத்துவமனையில் இவை இலவசம்!

image

நெல்லை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0462-2573129 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News October 11, 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் 24 செ.மீ மழை பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் மாநகர் மட்டுமல்லாத புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. அதிகபட்சமாக மணிமுத்தாறில் 69 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோன்று சேர்வலாறு அணை பகுதியில் 85 மில்லி மீட்டர் மழை கண்ணாடியின் கால்வாய் பகுதியில் 44 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 248 மில்லி மீட்டர் மழை அதாவது 24 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பதிவு.

News October 11, 2025

கவின் கொலை வழக்கு. எஸ்ஐ ஜாமீன் மனு தள்ளுபடி

image

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த பொறியாளர் கவின் செல்வ கணேஷ் கடந்த ஜூலை 27ம் தேதி பாளையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் KTC நகர் சுர்ஜித் அவரது தந்தை எஸ்ஐ சரவணன், சுர்ஜித் பெரியம்மா மகன் ஜெயபாலை கைது செய்தனர். எஸ்ஐ சரவணன் 2வது முறையாக ஜாமின் கேட்டு மாவட்ட 2வது கூடுதல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி ஹேமா விசாரணை நடத்தி சரவணன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

News October 11, 2025

7வது முறையாக விருது பெறும் நெல்லை ரயில்

image

தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ஏழாவது முறையாக சிறந்த பராமரிப்பு ரயில் என்ற விருதை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் இதற்கான விருது இன்று (அக்.11) மதுரையில் மதுரை கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது, மேற்கண்ட தகவலை தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

News October 11, 2025

திருநெல்வேலி தீபாவளி சிறப்பு ரயில்

image

திருநெல்வேலி – செங்கல்பட்டு திருநெல்வேலி இடையே தீபாவளி பண்டிகைக்கு அடுத்த 2 நாட்கள் சிறப்பு ரயில் அறிவித்தது. தென்னக ரயில்வே அக்டோபர் 21,22 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை வழியாக மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில் சென்று சேருகிறது. *ஷேர் பண்ணுங்க

News October 11, 2025

நெல்லை: 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

image

மேலப்பாளையத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு கடந்த ஆண்டு முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நெல்லை போக்சோ கோர்ட்டில் நடந்தது. நீதிபதி சுரேஷ்குமார் குற்றம் சாட்டப்பட்ட முகமது அலிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று விதித்தார்.

News October 11, 2025

நெல்லை: உங்க பகுதியில் கரண்ட் இல்லையா?

image

நெல்லை மாவட்டத்தில் மழை சீசன் தொடங்கியுள்ளது. மாலை நேரங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்வதால் மின் சேவை பாதிப்பு, மரக்கிளைகள் முறிந்து விழுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இது போன்ற நேரங்களில் அவசர மின் சேவைக்கு 9498794987 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மின் கம்பங்கள், கம்பிகள் சேதம் அடைந்து இருந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என நெல்லை மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

News October 11, 2025

திருநெல்வேலி கிராம ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்கள்

image

திருநெல்வேலி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் இனசுழற்சி மூலம் பூர்த்தி செய்ய 24 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான விவரங்கள் www.tnrd.gov.in என்ற இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது. இணையதள முகவரியில் இன்று முதல் (அக்.10) விண்ணப்பிக்கலாம். (விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 09.11.2025) *ஷேர் பண்ணுங்க

News October 11, 2025

நெல்லை: பைக் விபத்தில் பள்ளி மாணவர் பலி

image

பேட்டை செந்தில் நகர் அசோக் நகரை சேர்ந்த பள்ளி மாணவன் ஹரிஷ். நேற்று மாலை தனது நண்பர்கள் இருவருடன் பைக்கில் தெற்கு பைபாஸ் ரோட்டில் சென்றார். அந்த பைக்கும், எதிரில் வந்த பைக்கும், மோதியதில் ஹரிஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 11, 2025

பாளையங்கோட்டை சாலைக்கு புதிய பெயர் சூட்டல்

image

தமிழ் பேராசிரியர், தமிழறிஞர், எழுத்தாளர் தொ.பரமசிவன் அவர்களை சிறப்பு செய்யும் வகையில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் முதல் மரியா கேண்டீன் வரை அவர் பயின்ற பள்ளி கல்லூரி அமைந்துள்ள ஒரு கிலோமீட்டர் நெடுஞ்சாலைக்கு பேராசிரியர் தொ.பரமசிவன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசிடம் இதற்கான ஒப்புதல் பெற்று திருநெல்வேலி மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

error: Content is protected !!