Tirunelveli

News March 12, 2025

நெல்லை: பிஷப் கால்டுவெல் வாழ்ந்த ஊர்

image

திசையன்விளை அருகே இடையன்குடியில் கால்டுவெல் நினைவு இல்லம் அமைந்துள்ளது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என கண்டுபிடித்து திராவிட மொழிகளுக்கு ஒப்பிலக்கணம் எழுதியவர் இவரே. அயர்லாந்திருந்து தன்னுடைய 24வது வயதில் இந்தியா வந்து 50 ஆண்டுகள் தங்கியிருந்து மொழி குறித்து ஆய்வு செய்து புத்தகங்களையும் எழுதியுள்ளார். SHARE IT

News March 12, 2025

நெல்லை: இன்னமும் திருமணம் ஆகவில்லையா? இங்க போங்க

image

நெல்லை மாவட்டம் சிங்கிகுளம் சமண மலையில் சப்த கன்னியர், சப்தரிஷி ஆலயம் அமைந்துள்ளது. திருமணம் ஆகாத ஆண்கள் சப்த கன்னியையும், பெண்கள் சப்தரிஷியையும் தொடர்ந்து வணங்கினால் திருமணம் ஆகும் என்பது ஐதீகம். ஆகவே திருமணம் தள்ளிப் போகுதே என கவலைப்படாமல் சிங்கிகுளம் சமண மலையில் உள்ள சப்தரிஷியை பெண்களும், சப்த கன்னியரை ஆண்களும் சென்று வணங்குங்கள் விரைவில் திருமணம் நடக்கும். *மற்றவர்களுக்கும் பகிரவும்*

News March 12, 2025

150 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

image

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா பாளை கோபாலன் மஹாலில் இன்று நடைபெற்றது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜொலிந்தாள் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியினை பாளை எம்.எல்.ஏ. அப்துல் வஹாப் துவக்கி வைத்தார்.இதில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

News March 12, 2025

நெல்லையில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி திருநெல்வேலி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர்

News March 12, 2025

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் நிலவரம்

image

நெல்லை மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.40 அடியாகவும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 90.50 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 103.51 அடியாகவும் உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு 487 கனஅடி நீரும், பாபநாசம் அணைக்கு 912 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 50 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணை பகுதியில் 15.8 மில்லி மீட்டர், பாபநாசம் அணைப்பகுதியில் 18 மிமீ மழை பெய்துள்ளது.

News March 12, 2025

ஆவணங்கள் பராமரிக்கப்படாததால் 197 கிலோ விதைகள் விற்பனை செய்ய தடை

image

நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா பாய் தெரிவிக்கையில், விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குனர் தலைமையில் விதை ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு குழு நெல்லை மாவட்டதில் செயல்படும் விதை விற்பனை நிலையங்களில் கடந்த 3,4ம் தேதிகளில் அரசு வேளாண் மையங்கள், தனியார் என 25 விற்பனை நிலையங்களை ஆய்வு செய்ததில் உரிய ஆவணங்கள் பராமரிக்கப்படாததால் ரூ.13, 94, 795 மதிப்பிலான 197 கிலோ விதைகள் விற்பனை செய்ய தடை விதிப்பு.

News March 12, 2025

ரூ.1 கோடி பரிசு அறிவித்த பாஜக

image

பாரதிய ஜனதா கட்சியினர் மும்மொழி கொள்கையை ஆதரித்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மோடி அரசின் மும்மொழி கொள்கையில் இந்தி திணிப்பை கண்டுபிடித்தால் ரூ.1 கோடி பரிசு எ அறிவித்துள்ளனர். மேலும் அதில் சிபிஎஸ்இ பள்ளியில் கிடைக்கும் கல்வி அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க கூடாதா ?என கேள்வி எழுப்பியுள்ளனர்.

News March 12, 2025

இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 காவல் உட்கோட்டங்களில், இன்று (மார்ச் 04] இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர், அவர்களின் உட்கோட்டம் மற்றும் செல் நம்பர் ஆகியவற்றை, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் மேற்பார்வையில், இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவர்! என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு எண் 100ஐ டயல் செய்யவும்

News March 11, 2025

100 தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

image

100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம் வருகிற 22ஆம் தேதி பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஐந்தாம் வகுப்பு முதல் +2 டிகிரி டிப்ளமோ பட்டதாரிகள் பங்கேற்கலாம். வேலை நாடுபவர்கள் அரசு தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.privatejob.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News March 11, 2025

செவ்வாய்க்கு செயற்கைகோள் ஏவியவர் யார் தெரியுமா.?

image

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே கோதைசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அருணன். திருக்குறுங்குடி பள்ளியிலும் பயின்ற இவர் 1984ல் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார். 2013ல் மங்கள்யான் செயற்கைக்கோளை உருவாக்கி முதல் முயற்சியிலேயே விண்கலத்தை நிலைநிறுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றதற்கு சொந்தக்காரர். அவரின் சாதனை தமிழ்நாடு பாடப்புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. SHARE IT

error: Content is protected !!