India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மழைக்காலம் தொடங்கியுள்ளதை அடுத்து திருநெல்வேலி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், தினமும் ஒரு விழிப்புணர்வு வாசகத்தை மின் நுகர்வோர், பொதுமக்களுக்கு வெளியிட்டு வருகிறது. இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் ஈரக்கையால் ஒருபோதும் மின் சாதனங்களை கையாளக் கூடாது. அது ஆபத்தை விளைவிக்கும் அபாயம் உள்ளது. எனவே கைகளில் ஈரம் இன்றி எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மக்களே, கனரா வங்கி (Canara Bank) 3500 அப்ரண்டிஸ் (Graduate Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

நெல்லை மாவட்டம், வடக்கன்குளம் அண்ணாநகர் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மயில் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது குறித்து மகேஷ் என்பவர் தெரிவித்த தகவலின் படி பணகுடி போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அங்கே வீட்டின் பக்கவாட்டுக்கு சுவரிலும் குண்டு பாய்ந்த தடம் இருந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

நெல்லை மக்களே; உங்களது 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது
<

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் இன்று (அக்.12) நடைபெறுகிறது. நாளை காலை 9.15 மணிக்கு பாளையங்கோட்டை காவலர் ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் பார்வையிட்டு தொடங்கி வைக்க உள்ளார். இதில் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். *ஷேர் பண்ணுங்க

நெல்லை மாநகர எல்லைப் பகுதியில் மாசு ஏற்படுவதை தடுக்கவும் சுத்தமான காற்று கிடைப்பதை உறுதி செய்யவும் இனி புதிய வீட்டுமனைகள் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் பெற விண்ணப்பிக்கும் போது அந்த இடத்தில் மரக்கன்று ஒன்றை நடவு செய்து அதற்கான புகைப்படத்தையும் எடுத்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் நெல்லை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் டிஆர்பி தேர்வு நாளை நெல்லையில் 18 மையங்களில் நடைபெற இருக்கிறது. 70 மாற்றுத் திறனாளிகள் உட்பட 5527 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்துக்கு காலை 9. 30 மணிக்குள் சென்று விட வேண்டும். காலை 9.30 மணிக்கு மேல் செல்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று அறிவித்துள்ளார்.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நாளை (அக் 12) நடைபெறுகிறது. நாளை காலை 9.15 மணிக்கு பாளையங்கோட்டை காவலர் ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் பார்வையிட்டு தொடங்கி வைக்க உள்ளார். இதில் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (அக்.11) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் டிஆர்பி தேர்வு நாளை நெல்லையில் 18 மையங்களில் நடைபெற இருக்கிறது. 70 மாற்றுத் திறனாளிகள் உட்பட 5527 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்துக்கு காலை 9. 30 மணிக்குள் சென்று விட வேண்டும். காலை 9.30 மணிக்கு மேல் செல்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.