Tirunelveli

News October 13, 2025

2115 இடங்களில் சாதி அடையாளம் அழிப்பு – எஸ்பி தகவல்

image

எஸ்பி சிலம்பரசன் இன்று பத்ரிகையாளர்களுடன் கலந்துரையாடினார். அவர் கூறுகையில், கடந்தாண்டை விட இந்தாண்டு நெல்லையில் கொலை குற்றம் 20% குறைந்துள்ளது. சாதி பிரச்னையை தடுக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தாண்டு 21 போக்சோ வழக்கு பதியப்பட்டதில் 22 பேருக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளோம். இதுவரை 2115 இடங்களில் சாதி அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது என்றார்.

News October 13, 2025

கல்லூரி பேராசிரியர்கள் தொடர் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

ஏ யூ டி மற்றும் மோட்டார் அமைப்பின் பொதுச்செயலாளர்கள் சேவியர் செல்வகுமார், செந்தாமரை கண்ணன் ஆகியோர் இன்று நெல்லையில் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில்; கோரிக்கைகளை நிறைவேற்றி வலியுறுத்தி நாளை கருப்பு நிற உடை அணிந்து கல்லூரிகளில் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் 15ஆம் தேதி கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் 16ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

News October 13, 2025

போராட்டத்தை தடுக்க போலீஸ் முயற்சியா? – எஸ்பி பகீர் தகவல்

image

நெல்லை எஸ்பி சிலம்பரசன் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், நாங்குநேரி அருகே மஞ்சங்குளம் கிராமத்தில் பஸ் நிறுத்தாததை கண்டித்து போராட்டம் நடத்த இருந்ததால் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் போராடும் மக்களை போலீஸ் தடுக்க முயல்வதாக நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு கூறி வருகிறது. இது முற்றிலும் தவறானது; சட்டப்படியான போராட்டத்திற்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

News October 13, 2025

நெல்லை மின்வாரியத்தின் மழைக்கால எச்சரிக்கை

image

மழைக்காலம் தொடங்கி விட்டதால் நெல்லை மாவட்ட மின்வாரியம் சார்பில் பொது மக்களுக்கு மின் விபத்து இன்றி செயல்படுவது குறித்த விளக்கங்களை தினமும் அளித்து வருகின்றனர். இன்று விடுத்துள்ள அறிவிப்பில், வீடுகளில் உள்ள பழைய உருகிய மின் இணைப்பு கம்பிகள் இருந்தால் அவை ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. எனவே எலக்ட்ரீசியன் வைத்து பழைய உருகிய மின்கம்பிகளை உடனடியாக மாற்றி அமைப்பது நல்லது என தெரிவித்துள்ளனர்.

News October 13, 2025

BREAKING: சேரை கல்லூரி பேராசிரியர் மீது வழக்கு

image

சேரன்மகாதேவி பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறி பேராசிரியர் ஒருவரை மாணவர்கள் தாக்கினர். எனவே மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்த நிலையில் பேராசியர் மீது புகார் எதுவும் கொடுக்காததால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இந்நிலையில் பேராசிரியர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளதாக எஸ்பி சிலம்பரசன் இன்று தெரிவித்துள்ளார்.

News October 13, 2025

நெல்லை: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <>eportal.incometax.gov.in <<>>என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்க ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News October 13, 2025

நெல்லையில் கோழிகளை வீசி சென்ற மர்ம நபர்கள்

image

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள மதவ குறிச்சி பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நேற்று மாலை ஏராளமான இறந்த கோழிகள் கொட்டி குவிக்கப்பட்டு கிடந்தன. மர்ம நபர்கள் இதைக் கொட்டி சென்றதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருகிறது. இதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் கோழிகளை வீசிச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

News October 13, 2025

BREAKING நெல்லை: 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை

image

கங்கைகொண்டான் அருகே பருத்திகுளத்தை சேர்ந்த முத்தையா மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு முத்தமிழ்(4),சுசிலா(3) என 2 குழந்தைகள் உள்ளது. முத்தையா முத்துலட்சுமி இருவருக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில் இன்று மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு விரக்தி அடைந்த முத்துலட்சுமி தனது இரண்டு பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News October 13, 2025

நெல்லைக்கு கனமழை எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த ஒரு வாரம் தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீபாவளியன்று கனமழை இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளை மறுநாள்(அக்.15) நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 13, 2025

நெல்லை: B.E படித்தவர்களுக்கு ரூ.90,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள்<> இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.90,000 வரை வழங்கப்படும். B.E படித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!