India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை எம்.பியாக கடந்த முறை ஞானதிரவியம் இருந்தபோது மும்பை குர்லாவில் இருந்து புறப்படும் எல்.டி.டி- மதுரை ( வ.எண்.22101) வாராந்திர ரயிலை நெல்லை வழியாக திருச்செந்தூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தி இருந்தார். ஆனால் அந்த கோரிக்கையை தற்போது வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே அந்த ரயிலை திருச்செந்தூர் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக விட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்களை களையும் விதமாக விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 முதல் மார்ச் 22 வரை 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.
தமிழகத்தில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 22 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் நெல்லையில் இன்று மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முனஞ்சிபட்டியை சேர்ந்தவர் மூக்காண்டி மகன் சுந்தர். ஆடுகள் மேய்க்கும் தொழிலாளியான இவர் 100 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று குட்டி ஆடுகளை கிடையில் அடைத்து சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது கிடையில் இருந்த 18 ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். விசாரணையில் நாய்கள் கடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
முனைஞ்சிப்பட்டி சந்தை தெருவை சேர்ந்த பால இசக்கி, சேரன்மகாதேவியை சேர்ந்த சுப்பிரமணியன், செல்வகுமார் ஆகிய 3 பேர் மீது கொலை முயற்சி, அடிதடி, அச்சுறுத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சிலம்பரசன் பரிந்துரை நிலையில் கலெக்டர் சுகுமார் உத்தரவின் படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பேரையும் நேற்று கைது செய்து பாளை மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 காவல் உட்கோட்டங்களில், இன்று (மார்ச்-16] இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர், அவர்களின் உட்கோட்டம் மற்றும் செல் நம்பர் ஆகியவற்றை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி (SJHR) துணை காவல் கண்காணிப்பாளர் சம்பத் மேற்பார்வையில், இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, அம்பாசமுத்திரத்தில் புருஷோத்தம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பெருமாள் ஒரு தாயாருடன் காட்சி தருவதால் ‘புருஷோத்தமர்’ என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு ‘ஏகபத்தினி விரதர்’ என்றும் பெயருண்டு. மூலவர் புருஷோத்தம பெருமாள் கைகளில் 2 சங்கு 2 சக்கரம் ஏந்தி அருள் பாலிக்கிறார். கடன் தொல்லை உள்ளவர்கள் இப்பெருமாளை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *ஷேர் பண்ணுங்க*
களக்காடு பகுதியை சேர்ந்த மாணவி அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வரும் மாவடி புதுரை சேர்ந்த மோகன் (54) என்பவர் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் மோகன் நேற்று கைது (மார்ச்-15) செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரூ.10 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருவாய் உள்ள கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்ய மாவட்ட குழு அரசால் நியமிக்கப்பட்டுள்ளது. அறங்காவலர் குழு நியமன உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்களை உதவி ஆணையர் இந்து சமய அறநிலை துறை அலுவலகம் 24பி, 26வது குறுக்கு தெரு மகாராஜா நகர் நெல்லை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவரும் பிரபல எழுத்தாளரும், தமிழ் ஆர்வலருமான நாறும்பூ நாதன் உடல்நலக் குறைவால் இன்று(மார்ச்.16) காலமானார். அவருடைய மறைவு எழுத்தாளர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் பாளையங்கோட்டை சாந்தி நகரில் குடியிருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.