India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லையில் நேற்று அதிகாலை ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் கொலை செய்யப்படார். இதற்கு இபிஎஸ் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையில் இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்றும், பாரபட்சமின்றி விசாரனை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் 1.1.2020 முதல் 31.12.24 வரை திருநெல்வேலி புறநகரில் 211, திருநெல்வேலி மாநகரில் 74 கொலைகளும் பதிவாகியுள்ளது. இந்த கொலை சம்பவங்களில் தொடர்புடையவர்களில் 60 இளம் சிறார்கள்,1045 பேர் கைது செய்யப்பட்டு 392 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் உள்ளனர் என ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் ஜாதி ரீதியான கொலைகளே அதிகம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெல்லையில் நேற்று அதிகாலை ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் கொலை செய்யப்படார். ஜாகிர் உசேன் தனக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கும் என கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இபிஎஸ் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுந்தர பரிபூரண பெருமாள் திருக்கோவில் பழுது பார்த்தல், சீரமைத்தல் பணிக்கு ஏப்.15 அன்று ஏலம் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. மார்ச்.27 முதல் மர்ச்.14 வரை https://tntenders.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கோவில் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
பாளை தூய யோவான் கல்லூரியில் மண்டல அளவிலான தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நேற்று நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் இணையதளத்தில் பொருள்களின் தகவல்களை தெரிந்து கொண்டு பொருட்கள் வாங்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறைந்த பொருட்களை பல்வேறு போலி நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன . எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
நெல்லையில் நேற்று அதிகாலை முன்னாள் காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கார்த்திக், அல்பர்ஷா அகியோர் நேற்று சரணடைந்த நிலையில் இதில் தொடர்புடைய கிருஷ்ணமூர்த்தி, நூருண்ணிஷா ஆகியோரை பிடிக்க விமலன் எஸ்ஐ, அருணாச்சலம் எஸ்ஐ மற்றும் துணை கமிஷனர் கீதா தலைமையில் கீழ் ஒரு தனிப்படை என மொத்தம் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சந்திரனின் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்கு விண்கலத்தை செலுத்தி ராக்கெட் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ராக்கெட்டின் மூன்றாவது நிலையில் பொருத்தக்கூடிய இந்த கிரயோஜனிக் என்ஜின் சோதனை திட்டமிட்டபடி 100 வினாடிகளில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் நேற்று தெரிவித்துள்ளார்.
நெல்லை போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தற்போது மொபைல் போன் மூலமாக வாட்ஸ்அப் குரூப்களில் உங்களது வங்கி செயலி போல் போலியான செயலி அனுப்பி அதன் மூலம் பண மோசடி நடைபெறுகிறது.வங்கி கணக்கு முடக்கம் செய்யப்படும் என வங்கி லோகோ உடன் வரும் மெசேஜை நம்பி கிளிக் செய்யக்கூடாது. இது போன்ற மோசடி நடைபெற்றால் சைபர் க்ரைம் இணையதளம் அல்லது 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
நெல்லை சேர்ந்த காமராஜ் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரிடம் நேற்று விமல் என்பவர் திருமணத்திற்கு போட்டோ எடுக்க வேண்டும் என கோவை அழைத்து சென்றுள்ளார். அவர்கள் பஸ்ஸில் செல்லும் வழியில் பஸ் நின்றபோது அங்குள்ள கடையில் காபி குடிப்பதற்காக இவர் இறங்கி சென்றுள்ளார். அப்பொழுது விமல் அவரது கேமரா மற்றும் உபகரணங்களை திருடி சென்று தப்பியுள்ளார். இது குறித்து காமராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
தென்காசி மாவட்டத்தில் பணிபுரிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் திருநெல்வேலி மாவட்ட முதல் முதல் பெண் மாவட்ட அலுவலர் ஆவார். இந்நிலையில் இன்று அவர் பாளையங்கோட்டை அலுவலகத்தில் பொறுப்பேற்றார். முதல் பெண் அதிகாரியான அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.