India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மாவட்டம், சமுகரெங்கபுரத்தில் பந்தல் அமைக்கும் பணியில் வள்ளியூரை சேர்ந்த பந்தல் உரிமையாளர் சுரேஷ் மற்றும் அவரது மகன் ஸ்டீபன் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் இருவரும் மீதும் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக பலியாகினர். இது குறித்து ராதாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட் சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து கல்வி உதவித் தொகை தருவதாகக் கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் எனவும், மோசடியில் ஈடுபடுவோர் மீது புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே சுற்றுலா கழக ஐ ஆர் டி எஸ் குழு பொது மேலாளர் ராஜலிங்கம் பாசு நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், நெல்லையிலிருந்து ஜோதிர்லிங்கம் மற்றும் சீரடி யாத்திரை சிறப்பு சுற்றுலா ரயில் நவம்பர் 9ஆம் தேதி புறப்பட்டு 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாசிக், சீரடி, ஷனி சிங்நாபூர், பண்டரிபுரம், மந்திராலயம் போன்ற பகுதிகளுக்கு சென்று வரும் என்றார். *ஷேர் பண்ணுங்க

இந்தியா ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35(SC/ST-5, OBC-3)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக நெல்லை கோட்டத்தில் 500 சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் நெல்லையிலிருந்து சென்னை, கோவை பகுதிகளுக்கு அரசு சிறப்பு பஸ்கள் புறப்பட்டு சென்றன. இன்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ் நிலையத்தில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நெல்லை மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

நெல்லை டவுன் சுந்தரர் தெருவில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவா, பரமேஸ்வரன் என 2 மனநிலை பாதிக்கப்பட்ட மகன்கள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக இவருடைய வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீபாவளிக்கு தென்காசிக்கு கிளம்பிட்டீங்களா? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம், டிக்கெட் உறுதி போன்றவைகளை பார்க்க செயலிகள் இன்னும் பதிவிறக்கம் செய்யுறீங்களா ?? இனி அது தேவையில்லை! அரசின் RAILOFY (+91 9881193322) வாட்ஸ் ஆப் எண்ணில் ரயில் எந்த பிளாட்பார்ம், எப்போ வரும், டிக்கெட் முன்பதிவு போன்றவைகளை இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவது மூலம் தெரிஞ்சுக்கலாம். ஊர்க்கு வர மக்களுக்கு SHAREபண்ணுங்க.

நெல்லை, பாளை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பில்டிங் செக்ஷனில் விஜிலென்ஸ் ADSP ராபின் DSP மெக்லரின் எஸ்கால் மற்றும் போலீசார் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 3 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த அலுவலகத்தில் செயற் பொறியாளராக இருக்கும் ஜோசப் ரன் ஸ்டண்ட் பிரீஸ் – ஐ பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளுக்கான அக்டோபர் மாத குறைதீர்க்கும் கூட்ட நிகழ்ச்சி வருகிற 24ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில் நடைபெற உள்ளது. காலை 10.30 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கும். அதிகாரிகள் பங்கேற்று விவசாயிகள் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிப்பார்கள். எனவே அனைத்து விவசாயிகளும் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.