India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் நெல்லை மாநகரில் பொதுமக்கள் புத்தாடைகள் பட்டாசு வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக வண்ணாரப்பேட்டை பகுதியில் ஏராளமான ஜவுளி கடைகள் இருப்பதால் அதிகளவு மக்கள் அங்கு வருகின்றனர். இதன் காரணமாக வண்ணாரப்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று இரவு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

நெல்லை மக்களே, குடும்ப சொத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
1. பதிவு செய்த பத்திரம்.
2. அனைத்து உரிமையாளர்களின் சம்மதமும் கையொப்பம் அவசியம்.
3. சொத்தில் கடன் உள்ளதா என EC மூலம் சரிபார்ப்பு.
4. சொத்தின் அளவுகள், எல்லைகள் சரிபார்ப்பு
5. அசல் தாய் ஆவணம்.
இதை கவனிக்கவில்லையேன்றால் வாரிசுகளுக்கு (அ) விற்கும் போது பிரச்சனை வரலாம். வாங்குறவங்களும் இத சரிபார்த்து வாங்குங்க…SHARE பண்ணுங்க..

ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிமெண்ட் வியாபாரி அருண்செல்வம் (33), தனது அண்ணனுக்கும் இசக்கிமுத்து என்ற போஸ் என்பவருக்கும் இடையே கார் கண்ணாடி உடைப்பு சமந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது . நேற்று நெல்லையில், போஸ் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளை மோதி அருண்செல்வத்தை கீழே தள்ளி, ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்தார். தடுக்க வந்த நண்பருக்கும் வெட்டு. இதுக்குறித்து சிவந்திபட்டி போலீசார் விசாரணை.

நெல்லையில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

குமரி மாவட்டம், தோவாளை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீசார் ஜோசப் ராஜ் (74), 1999ம் ஆண்டு தூத்துக்குடியில் போலீஸ் காவலில் வின்சென்ட் என்பவர் இறந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கபட்டிருந்தார். நெல்லை, பாளையங்கோட்டை சிறையில் இருந்த அவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை.

பேட்டை அரசின் தொழில் பயிற்சி பள்ளி(ஐடிஐ) செயல்பட்டு வருகிறது. இந்த தொழில் பயிற்சி பள்ளியில் பல தரப்பினரும் பயின்று வரும் நிலையில் மாற்றுத்திறன் மாணவர்களின் நலனுக்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, குறிப்பாக பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொழில் பயில்வதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்ற வருகிறது. வருகிற 30ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டு இருக்கும் செய்தி தொகுப்பு தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் மூலமாக பட்டாசு விற்பனைகள் நடைபெற்று வருவதாகவும், அப்படி நடைபெறும் ஆன்லைன் பட்டாசு விற்பனையில் பண மோசடிகள் நடைபெறுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணைய வழியில் பட்டாசு வாங்கும் போது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.17] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் பள்ளிப் பயிலும் அல்லது கல்லூரி பயிலும் மாணவர்களை குறி வைத்து, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள் மாணவர்களின் தர தரவுகளை சரியாக சொல்லி ஆன்லைன் மூலமாக பணம் பெறுவதாக வங்கி கணக்கில் பின் எண்களை கேட்டு மோசடி செய்வதாகவும் மாணவர்களும் பெற்றோரும் எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், சமுகரெங்கபுரத்தில் பந்தல் அமைக்கும் பணியில் வள்ளியூரை சேர்ந்த பந்தல் உரிமையாளர் சுரேஷ் மற்றும் அவரது மகன் ஸ்டீபன் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் இருவரும் மீதும் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக பலியாகினர். இது குறித்து ராதாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.