Tirunelveli

News March 21, 2025

நெல்லையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 

image

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம். சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை 22 ஆம் தேதி காலை 9 மணி முதல் பாளையங்கோட்டை ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். *ஷேர் பண்ணுங்க

News March 21, 2025

நெல்லை மாவட்டத்திற்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்,நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.நெல்லை கோட்டத்தில் 362 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். மார்ச்.21-ஏப்ரல்.21 வரை விண்ணப்பிக்கலாம். <>லிங்க்<<>> *ஷேர் பண்ணுங்க*

News March 21, 2025

நெல்லை: இரவு ரோந்துப்பணியில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [மார்ச்.20] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News March 20, 2025

நெல்லை ESIC மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

image

நெல்லை வண்ணார்பேட்டை இஎஸ்ஐ மருத்துவமனையில் வரும் 28-ம் தேதி வேலைக்கான நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கிறது. மருத்துவ புற்று நோயியல் பகுதி நேர வேலை வாய்ப்பும், முழு நேர வேலை வாய்ப்பான எமர்ஜென்சி, விபத்து பிரிவு, ரேடியோலாஜி பிரிவு,மற்றும் பொது மருத்துவத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 09/30 மணி முதல் 10.30 வரை நடக்கிறது. *ஷேர் பண்ணுங்க*

News March 20, 2025

ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

image

நெல்லை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பணியில் நின்று ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து காவல்துறை தரப்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டும் தொடர்ச்சியாக உள்ளது. இன்று முனஞ்சிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் கல்லூரி மாணவர் ஒருவர் படியில் நின்று ஆபத்தான பயணம் மேற்கொண்டார். நடவடிக்கை எடுக்க கோரிக்கை

News March 20, 2025

நெல்லை அஞ்சலக கூட்டத்தில் குறைதீர் கூட்டம்

image

நெல்லை அஞ்சலக முதுநிலைக்கோட்ட கண்காணிப்பாளர் முருகன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் மார்ச் 24 அன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், திருநெல்வேலி கோட்டத்திற்குட்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி  வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 20, 2025

நெல்லை வழியாக கோடைகால சிறப்பு ரயில்

image

நெல்லை வழியாக நலகொண்டா, குண்டூர், திருத்தணி, காட்பாடி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், விருதுநகர் வழியாக கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சார்லப்பள்ளி – கன்னியாகுமரிக்கு புதன்கிழமையும், கன்னியாகுமரி – சாரலப்பள்ளிக்கு வெள்ளிக்கிழமையும் ஏப்ரல் மாதம் முதல் வாரம் முதல் ஜூன் மாதம் இறுதி வரை இயக்க ரயில்வே நிர்வாகம் நேற்று பரிந்துரைத்துள்ளது.

News March 19, 2025

நெல்லை: இரவு ரோந்துப்பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [மார்ச்.19] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News March 19, 2025

நெல்லை: கொலை வழக்கில் தேடப்பட்டவர் மீது துப்பாக்கிச்சூடு

image

நெல்லையில் நடந்த முன்னாள் காவல் அதிகாரி கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி முகமது டௌபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. நெல்லை ரெட்டியார்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளியை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது, தலைமை காவலர் ஆனந்தை அரிவாளால் தாக்க முற்பட்ட போது கொலை குற்றவாளி முகமது தவுபிக் (எ ) கிருஷ்ணமூர்த்தியை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.

News March 19, 2025

BREAKING நெல்லை கொலையில் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

image

நெல்லையில் நேற்று முன்னாள் காவலர் ஜாகிர் உசேன் பிஜிலி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று அவரது உறவினர்கள் ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் சம்பந்தம் ஏற்பட்டு உடலை பெற்று கொள்ள சம்மதம் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் நடவடிக்கை மேற்கொள்ளாத டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தற்காலிக பணியிட நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!