India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு வந்தவர்கள் சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக நெல்லை புதிய பஸ் நிலையத்திலிருந்து இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக சார்பில் தேவைக்குஏற்ப சென்னை கோவை திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு சிறப்பு பரிசுகள் இயக்கப்பட உள்ளன. ஏற்கனவே இயக்கப்படும் பஸ் முன்பதிவுகள் முடிவடைந்தது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள பைசன் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்காக வெளியிடப்பட்டு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது .நெல்லை உடையார்பட்டியில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று பிற்பகல் காட்சியின் போது பைசன் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் நேரடியாக தோன்றி ரசிகர்களை சந்தித்தனர். அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் கலந்துரையாடினர்.

தென்னக ரயில்வே அறிவிப்பில், நெல்லை – சென்னை எழும்பூர் இடையே வரும் 22ம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்; தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்ப ஏதுவாக அறிவிப்பு நெல்லை – சென்னை இடையே வரும் 22, 23 ஆம் தேதிகளில் இரு மார்க்கமாக சிறப்பு ரயில் இயக்கம். நெல்லையிலிருந்து வரும் 22 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், சென்னைக்கு காலை 10.55 சென்றடையும்.

தீபாவளி விடுமுறை முடிந்து வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக நெல்லை, செங்கல்பட்டு மற்றும் செங்கல்பட்டு -நெல்லையிடையே வருகிற 24 மற்றும் 26 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. தற்போது இந்த ரயிலுக்கு போதிய முன்பதிவு நடைபெறாததால் இந்த இரு ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர்மட்டம்; பாபநாசம் ஆணை 143.00 / மொத்தம் 47.54% சேரவலாறு ஆணை 156.00/ மொத்தம் 44.44% மணிமுத்தாறு ஆணை 118.00/ மொத்தம்51.03% வடக்கு பச்சையாறு ஆணை 49.00 /4.46% நம்பியாரு ஆணை 22.96 / மொத்தம் 21.21% கொடுமுடியா ஆணை 52.50 /மொத்தம் 65.91% நீர் இருப்பு உள்ளது.

வங்கக்கடலில் இலங்கை அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று நெல்லை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று நாம் பலரும் சொந்தகாரர்கள் வீடுகள் மற்றும் நாளை பணி திரும்ப செல்வோர் அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவ மருத்துவமனையில் சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கபட்டுள்ளது. இங்கு அவசர சிகிச்சைகள், கவனிப்பு அளிப்பதற்கு ஏதுவாக 20 படுக்கைகள் மற்றும் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் மருத்துவக் குழுவினர் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆக்சிஜன் உள்ளிட்ட நவீன உயிர் காக்கும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லை ரயில் நிலைய யார்டில் இந்த வாரம் மறு சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதற்காக நெல்லை வழியாக செல்லும் பாலக்காடு – திருச்செந்தூர் ரயில் அக்டோபர் 22, 23ம் தேதிகளில் வாஞ்சிமணியாச்சியோடு நிறுத்தப்படும். மறு மார்க்கமாக அதே நாளில் அந்த ரயில் வாஞ்சி மணவாசியில் இருந்து வழக்கமான நேரத்தில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.