Tirunelveli

News April 4, 2025

நாங்குநேரி பெயர் காரணம் தெரியுமா ?

image

நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஒர் பழமையான ஊராகும். இங்குள்ள பெரிய குளத்தில் நடுவே வானமாமலை பெருமாள் தோன்றியதாக ஐதீகம். பெருமாளுக்கு நாங்கன், நாராயணன் என்ற வேறு பெயர்களும் உண்டு. ஏரியில் நாங்கன் உதித்த இடம் என்பதால் இவ்வூர் நாங்கனேரி என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் மருவி நாங்குநேரி என ஆனது. 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான நாங்குநேரி ஊருக்கு சென்று பழமையான நாங்கனை தரிசித்து வாருங்கள்.

News April 4, 2025

மூதாட்டி மீது ஆட்டோ மோதி உயிரிழப்பு

image

பாளையங்கோட்டை டேனியல் தாமஸ் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி காந்திமதி (70). இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை பார்த்து வந்தார். நேற்று பாளை பேருந்து நிலையம் அருகே சென்று விட்டு திரும்பிய போது அவர் மீது ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 3, 2025

நெல்லை: இரவு ரோந்துப்பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஏப்.3) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஆவுடையப்பன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News April 3, 2025

நெல்லை மண்டலத்தில் ரூ.9.10 கோடி வரி பாக்கி – பகீர் தகவல்

image

திருநெல்வேலி மாநகராட்சி திருநெல்வேலி மண்டலத்தில் மட்டும் சொத்து வரி எவ்வளவு பாக்கி இருக்கிறது என்ற தகவல் கேட்டு பாளையங்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு மாநகராட்சி கொடுத்த தகவலில், திருநெல்வேலி மண்டலத்தில் மட்டும் ரூ.9.10 கோடி சொத்து வரி பாக்கி இருப்பதாக தகவல்  இன்று வெளியாகியுள்ளது.

News April 3, 2025

திருநெல்வேலியில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும்(ஏப்.3,4) திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 3, 2025

ஜிப்ளி குறித்து மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் (Ghibli)ஜீப்ளி-யாக மாற்றும் செயலியில் புகைப்படங்களை பதிவேற்றினால் உங்கள் ஒப்புதல் இல்லாமல் AI உங்களுடைய முகத்தை பயன்படுத்தலாம். உங்கள் புகைப்படங்களை பதிவேற்றும் முன் தனியுரிமையை சரிபார்க்கவும். நம்பகமான AI தளங்களை மட்டும் பயன்படுத்தவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2025

5ஜி டவர் மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

image

நெல்லையில் கடந்த சில நாட்களாக பல தனியார் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் என்று தங்களை செல்போன் மூலம் அறிமுகப்படுத்தி 5ஜி டவர் அமைப்பதற்கு இடம் தேவைப்படுகிறது எனக்கூறி மோசடி செய்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் இது போன்ற சைபர் குற்றங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். இதில் யாரேனும் பாதிக்கபட்டால் 1930 இல் புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2025

அம்பை வட்டார விவசாயிகள் கவனத்திற்கு

image

அம்பை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கற்பகராஜ் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் விவசாயிகள் தங்கள் நில உடமை ஆகியவற்றை விண்ணப்பித்து அடையாளம் பெறுவது அவசியம். இதற்கு அடுத்த மாதம் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் நலன் கருதி ஏப்ரல் 15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் கட்டாயம் அடையாளம் பெற வேண்டும் என்றார்.

News April 3, 2025

நெல்லை வழியாக கட்சிக்குடா ரயில் இயக்க வலியுறுத்தல்

image

நெல்லை வழியாக நாகர்கோவில் – கச்சிகுடா இடையே இயக்கப்பட்ட வாராந்திர பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் நெல்லை, குமரி மாவட்டத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் அல்லது ஆந்திர மாநிலம் சரளபள்ளிக்கு நெல்லை வழியாக இயக்கப்படும் ரயிலை இருவழிப் பாதையில் இயக்கி பயண நேரத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் நலச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

News April 3, 2025

நெல்லை இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

image

நெல்லை மக்களே டான்செம் நிறுவனம் சார்பில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் வீரசோழன் அமீன் திருமண மண்டபத்தில் ஏப்.9 அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் விருதுநகர், அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள்,கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு 86818-78889, 95148-38485 இல் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!