India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி நதிக்கரையில் நேற்று உலக ஆறுகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட இயற்கை ஆர்வலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நெல்லை இயற்கை கழகம் ஆசிரியர் பிரபு ரஞ்சித் எடிசன், சித்தா கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் மற்றும் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், ஆராச்சியாளர்கள் ஆறுகளை பாதுகாப்பது குறித்து விளக்கம் அளித்தனர்.
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், குமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க அக்.,1ல் திட்டமிட்டுள்ள கருத்துக் கேட்புக் கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டி வருகிற செப்.,28,29 தேதிகளில் பழைய பேட்டையில் நடைபெறுகிறது. இதில் அனைவரும் கலந்து கொண்டு பரிசுகள் வெல்லுமாறு பாளை., சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் ராமயன்பட்டியில் சீனிவாசன் என்ற இளைஞர் இன்று(செப்.,22) இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தகவலறிந்தத மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையானவரின் உடலை கைப்பற்றி பாளை., அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்க்காக அனுப்பி வைத்துள்ளனர். கொலையாளி போலீசில் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதி கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கண்ணன்(40), ஆண்டாள்(60), மாரீஸ்வரி(14), சமீரா(7) ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். இதை அறிந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது மகன் பிரபு ராஜகணப்பனை இன்று(செப்.,22) அனுப்பி வைத்தார். அவர் நேரில் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் அளித்து நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்வில் துணை மேயர் & திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று(செப்.,22) மதியம் தெரிவித்ததாவது, அம்பாசமுத்திரம் பகுதியில் பொதுமக்களால் உணரப்பட்ட நில அதிர்வு குறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் மற்றும் கடலியல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலான நில அதிர்வுகள் ஏதும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வை உணர்ந்த பொதுமக்கள் ஏற்ப்பட்டது. வீடுகள் பயங்கர சப்தத்துடன் குலுங்கியதால் பரபரப்பு.குறிப்பாக 11. 45 மணியளவில் அனைத்து வீடுகளிலும் நிலநடுக்கம் வந்ததாக பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் யாதவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கந்தன் (28) கூலி வேலை செய்து வந்தார். இவர் வீட்டில் இருந்த குத்து விளக்கை எடுத்துச் சென்று விற்று விட்டார். இதனை அவரது தாய் கண்டித்ததால் நேற்று இரவு மனமுடிந்த கந்தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
மணிமுத்தாறு அருவி பகுதியில் சூழல் சுற்றுலா வரும் பொதுமக்களின் வசதிக்காக அருவி பகுதிக்கு அருகில் உள்ள பெண்கள் உடை மாற்றும் அறை மற்றும் பொது கழிப்பறைகள் ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனால் நாளை(செப்.,22) முதல் சூழல் சுற்றுலாவுக்காக பொதுமக்கள் மணிமுத்தாறு அருவிக்கு அனுமதி வழங்கப்படுகிறது என துணை இயக்குநர் நேற்று(செப்.,21)தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜாதி மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதை கண்டித்து பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வரும் 26ஆம் தேதி ஜங்ஷன் ரயில்வே முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொள்ள பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.