India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக பிரமுகர் ஆர்.எம்.பாபு முருகவேல் தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று(செப்.26) எம்.பி. எம்.எல்.ஏ.க்கான சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் இந்த வழக்கு தொடர்பாக வருகின்ற அக்.18ஆம் தேதி ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சபாநாயகருமான அப்பாவு நேரில் கட்டாயம் ஆஜராக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி டவுன் கீழக்கு ரத வீதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கவர்மெண்ட் பிசினஸ் பெசிலிடேட்டர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வருகின்ற 30ஆம் தேதிக்குள் டவுன் வங்கி அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என மண்டல மேலாளர் இன்று(செப்.,26) கேட்டுக் கொண்டுள்ளார். SHARE IT.
டென்மார்க்கில் நடந்த உலக நாடுகளின் தீயணைப்பு துறை வீரர்களுக்கான 200, 400, 800, 1500 மீட்டர் தடகளப் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை வாங்கி நெல்லை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த நாஞ்சான்குளம் மாரியப்பனுக்கு நேற்று(செப்.25) இரவு பாராட்டு விழா நடந்தது. கீழநத்தம் ஊராட்சி தலைவரும் மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளருமான அனுராதா ரவி முருகன் உட்பட பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வரைவு வாக்காளர் பட்டியல் அக்.,29ஆம் தேதி வெளியிடப்படுகிறது. நவ.,28ஆம் தேதி வரை புதிய வாக்காளர்கள் சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் செய்யவும் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்கள், இடம் மாறிய வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றுள்ளார்.
இடிந்தகரை, வடக்கு தெருவை சேர்ந்த ஜவஹர்(46) என்பவர் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கெளரி மனோகரி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து ஜவஹரை இன்று(செப்25) கைது செய்தார்.
நெல்லை மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் நவதிருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்குகிறது. கடந்த சனிக்கிழமை 3 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வருகிற சனிக்கிழமை 2வது சுற்றுப்பயணம் நவதிருப்பதி கோயில்களுக்கு நடைபெற உள்ளது. இதற்கான முன்பதிவு புதிய பஸ் நிலையத்தில் தொடங்கியுள்ளது.
வெள்ளை வேளாண்மை இணை இயக்குனர் பொறுப்பு கிருஷ்ணகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, நெல்லை மாவட்டத்தில் மானிய விலையிலான உரங்களுடன் விருப்பத்திற்கு மாறாக இதனை ஈடுபொருட்களான உயிர் ஊக்கிகள அல்லது போலி உரங்களை இணைத்து வழங்குவது உரப்பைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலை விட அதிகமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று(செப்.25) தலைமைச் செயலகத்தில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி சாந்தா சர்மிளா சந்தித்து, 5 நிமிடங்களில் ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் 12 திருக்குறளை எழுதி சாதனை படைத்ததற்காக India Book of Records வழங்கிய சான்றிதழையும், ஒரு நிமிடத்தில் 14 கண்ணாடி பிரதிபலிப்பு தமிழ் எழுத்துக்களை இரண்டு கைகளும் எழுதி சாதனை படைத்ததை காட்டி வாழ்த்து பெற்றார்.
நெல்லை மாநகரப் பகுதியில் இன்று முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை 15 தினங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுக்கூட்டம், பொது இடங்களில் தேவை இன்றி கூடுதல், ஆர்ப்பாட்டம், தர்ணா போன்றவை அனுமதியின்றி நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா அறிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் 104 ஊராட்சிகளில் வரும் அக்.,2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தின் பொருள் குறித்தும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் நெல்லை மாவட்டத்தில் அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் இதற்கான முன் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.