India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே பகிரவும்.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகை என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற மக்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து செங்கல்பட்டிற்கு இன்று (அக்.13) மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு நாளை அதிகாலை 3.30 மணிக்கு செங்கல்பட்டை அடையும். மறுமார்க்கமாக இதே ரயில் 14ஆம் தேதி புறப்பட்டு 15ஆம் தேதி நெல்லையை வந்தடையும் என தெற்கு ரயில்வே நேற்று (அக்.12) அறிவித்துள்ளது.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மின் தடம் மாற்றி அமைக்கும் பணிகள் காரணமாக பாலக்காடு – திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 15ஆம் தேதி முதல் நவம்பர் 22ஆம் தேதி வரை திங்கள் கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் அக்டோபர் 31 தவிர மற்ற நாட்களில் தாழையூத்து – திருச்செந்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என நேற்று (அக்.12) அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
பனகுடியை சேர்ந்த பால ரதீஷ் என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும் வகைக்கு ஒரு லட்ச ரூபாய் பணத்தை விஜிலகுமார் என்பவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தை ஏமாற்றி உள்ளார். இதனால் பாலரதிஷ் நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசனிடம் புகார் அளித்தார். இந்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார்பணத்தை ஏமாற்றிய விஜிலகுமாரை இன்று கைது செய்தனர்.
நெல்லை மாவட்ட காவல்துறை உங்கள் வீட்டை வாடகைக்கு கொடுக்கும்போது அந்த வீட்டில்அந்த நபர்கள் தான் குடியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வீட்டு உரிமையாளரின் அனுமதி இன்றி குத்தகைக்கு அல்லது வாடகைக்கு பெற்ற நபர் அவ்வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பது சட்டப்படி குற்றமாகும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இன்று தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று(அக்.12) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு திருநெல்வேலி ஊரகம், நாங்குநேரி, வள்ளியூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய உட்கோட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்திற்கு பொதுமக்கள் அவர்களை தொலைபேசியில் அழைக்கலாம் அல்லது 100 ஐ தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மாவட்டம் காவல்துறை அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு நாளை காலை 10:30 மணிக்கு நெல்லைக்கு வருகிறார். அவருக்கு கே.டி.சி. நகர் பாலம் அருகே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளதால், கட்சியின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் பாதை மின் தடம் மாற்றி அமைக்கும் பணி நடைபெறுவதால் சில ரயில்களின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி செங்கோட்டை முன்பதிவு இல்லாத ரயில் திருநெல்வேலியில் இருந்து அக்.15, நவ.17, 20, 21, 22 ஆகிய நாட்களில் மதியம் 1.50 மணிக்கு பதில் 2.40 மணிக்கு தாமதமாக புறப்படும் என தென்னக ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஆவின் நிறுவனம் சார்பில் வழங்கப்படும் பால் பாக்கெட்டுகளை லட்சக்கணக்கான மக்கள் தினமும் வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழாக்களை முன்னிட்டு ஆவின் பால் பாக்கெட்டுகளை ஆவின் நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்து செய்தியை பதிவிட்டு வழங்கி வருகின்றனர். இது பால் வாங்கும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்று(அக்.,12) காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாபநாசத்தில் 14 மி.மீ, சேர்வலாறி 27 மி.மீ, மணிமுத்தாற்றில் 0.60 மி.மீ, கொடுமுடியாற்றில் 17 மி.மீ, நம்பியாற்றில் 4 மி.மீ, மாஞ்சோலை 12 மி.மீ, காக்காச்சி 19 மி.மீ, நாலுமுக்கு 29 மி.மீ ஊத்து 26 மி.மீ, சேரை., 2.20 மி.மீ, நாங்குநேரி1 மி.மீ, களக்காட்டில் 27 மி.மீ மழை பெய்துள்ளது.
Sorry, no posts matched your criteria.