Tirunelveli

News November 5, 2024

திருநெல்வேலி மாவட்ட இரவு ரோந்து போலீசார் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு நேரங்களில் நடைபெறும் அசம்பாவிதங்களைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர் பொன்ரகு தலைமையில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று இரவு முழுவதும் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் காவல்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News November 5, 2024

100 கைப்பேசிகள் பறிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைப்பு

image

நெல்லை மாவட்டத்தில் 100 கைப்பேசிகள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களின்படி அவற்றை போலீசார் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து எஸ்பி சிலம்பரசன் கைப்பேசிகளை உரிய நபர்களிடம் நேரில் ஒப்படைத்தார். இவற்றின் மதிப்பு ரூபாய் 18 லட்சத்து 58 ஆயிரத்து 649 ஆகும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 5, 2024

நெல்லை எம் பி -யின் முக்கிய நிகழ்ச்சிகள் அறிவிப்பு

image

நெல்லை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நாளை (நவம்பர் 5ஆம் தேதி) பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி காலை 9 மணிக்கு பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் நடைபெறும் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். காலை 10 மணிக்கு டக்கரம்மாள்புரத்தில் பல்நோக்கு மிஷன் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.

News November 5, 2024

நெல்லையில் 17 வயது சிறுவனுக்கு அரிவாள் வெட்டு

image

நெல்லை, மேலப்பாட்டம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவனை இன்று திருமலை கொழுந்துபுரத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது. இதில், சிறுவன் படுகாயம் அடைந்தார். பீர் பாட்டிலாலும் தாக்கியதில் தலையில் படுகாயம் ஏற்பட்டது. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 4, 2024

வடகிழக்கு பருவமழை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (04.11.2024) வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து மக்களை மீட்பது தொடர்பான ஒத்திகை பயிற்சிகள் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

News November 4, 2024

நெல்லை மாவட்ட மழை நிலவரம்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ.4) காலை 8:00 மணி முதல் மாலை 4 மணி வரை மொத்தம் 69.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அம்பாசமுத்திரம் பகுதியில் 25.40 மில்லி மீட்டர் மழை பதிவானது. மணிமுத்தாறு, ராதாபுரம் பகுதியில் தலா 11 மில்லி மீட்டர் மழை பெய்தது. பாளையங்கோட்டையில் 6மி.மீ, சேரன்மகாதேவியில் 5 மில்லி மீட்டர் மழை பெய்தது.

News November 4, 2024

மலேசிய துணை அமைச்சருடன் சபாநாயகர் சந்திப்பு

image

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் ஆறாம் தேதி நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மலேசிய நாட்டின் துணை அமைச்சர் குணசேகரனை மரியாதை நிமித்தமாக கோலாலம்பூரில் இன்று (நவம்பர் 4) சந்தித்து பேசினார். அவருடன் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News November 4, 2024

நெல்லையில் பயணியை தாக்கிய கன்டக்டர் சஸ்பெண்ட்

image

நெல்லை மூலைக்கரைப்பட்டியில் இன்று அரசு பஸ்சில் லக்கேஜ் உடன் ஏற சென்ற பயணி ஒருவரை நடத்துநர் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதையடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பயணியை தாக்கிய நடத்துநர் பெயர் சேதுராமலிங்கம் என்பது தெரியவந்துள்ளது. எனவே சேதுராமலிங்கத்தை சஸ்பெண்ட் செய்து நெல்லை போக்குவரத்து கழக பொதுமேலாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

News November 4, 2024

மனித உரிமை மீறல் – கலெக்டர் விளக்கம் அளிக்க உத்தரவு

image

நெல்லை ஜல் நீட் அகாடமியில் அரங்கேறிய மனித உரிமை மீறல் தொடர்பான விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையத்தில் தற்போது வழக்கு பதிவானது. நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளருக்கு மாநில மனித உரிமை ஆணையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையர் விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News November 4, 2024

மலேசியா சபாநாயகருடன் தமிழ்நாடு சபாநாயகர் சந்திப்பு

image

மலேசியா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஜோஹார் அப்துல் அவர்களை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு மரியாதை நிமித்தமாக இன்று  கோலாலம்பூரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மலேசியா நாட்டின் துணை அமைச்சர் குலசேகரன், மலேசியா நாட்டிற்கான இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!