India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி சந்திப்பில் இருந்து அக். 23ம் தேதி காலை 7.20க்கு புறப்படவுள்ள 22627 திருச்சி சந்திப்பு – திருவனந்தபுரம் சென்ட்ரல் இன்டர்சிட்டி துரித ரயில், திருச்சி – நெல்லை இடையே மட்டுமே இயங்கும். இந்த ரயில் நெல்லை – திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து அட்டோபர் 23ஆம் தேதி புறப்பட வேண்டிய இன்டர்சிட்டி நெல்லையிலிருந்து 2.30 மணிக்கு புறப்படும்.
திருநெல்வேலி மாநகர மேலப்பாளையம் காவல் நிலையத்தினர் இன்று (அக்.21) ஜல் நீட் மையத்தில் தாக்கப்பட்ட மாணவரிடம் விசாரணை நடத்தினர். அதில் மாணவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்துள்ளதாகவும், ஜல் நீட் அகாடமி உரிமையாளர் ஜலால் அஹமத் முன் ஜாமீன்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பாளையில் உள்ள ஒரு NEET கோச்சிங் மையத்தில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர் பிரம்பால் அடிக்கும் வீடியோ வைரலாகி பரபரப்பானது. இந்நிலையில், இன்று (அக்.21) அந்த மையத்தில் படிக்கும் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் முகாமில் மனு அளித்தனர். அங்கு பயின்ற 16 பேர் மருத்துவமனை கல்லூரியில் சேர்ந்துள்ளனர். தாங்கள் நல்ல முறையில் அங்கு தொடர்ந்து பயின்று வருவதாகவும், தெரிவித்துள்ளனர்.
நெல்லையில் ‘NEET’ பயிற்சி மையம் ஒன்றில் மாணவர்களை அடித்து சித்திரவதை செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், சம்மந்தப்பட்ட ‘NEET’ பயிற்சி மையத்தின் விடுதியை இன்று(அக்.,21) நிர்வாகம் காலி செய்தது. இதனால் மாணவர்கள் அங்கிருந்து வெளியேறினர். அதே நேரத்தில் அப்பயிற்சி மையத்தில், வகுப்புகள் தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருகிறது. வகுப்பில் மாணவர்கள் பங்கேற்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி வாரத்தில் கோவை – நெல்லை இடையே வரும் ரயிலில் முன்பதிவு ஏற்கனவே நிறைவு பெற்றுவிட்டது. தொழில் நகரமான கோவை, திருப்பூர் பகுதியில் பணி செய்யும் நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்தவர்களின் நலன் கருதி தீபாவளிக்காக கரூர்- மதுரை- ராஜபாளையம்- தென்காசி வழியாக நெல்லைக்கு சிறப்பு ரயில் கோவையில் இருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று(அக்.,20) வெளியிட்டுள்ள அறிக்கையில் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். கிராம சபை கூட்டத்தை ஊராட்சியின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி 1ம் தேதி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மும்பையில் வசிக்கும் தமிழர்கள் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு வருவதற்காக தீபாவளி சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். அங்கிருந்து நெல்லை வரும் வழக்கமான ரயில்களில் 3 மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு நிறைவு பெற்று விட்டது. இதுபோல் தீபாவளி முடிந்து திரும்பி செல்லவும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
நெல்லை மாவட்டம் மானூர் பள்ளிக்கோட்டையை சேர்ந்த நில புரோக்கர் செல்லத்துரை வீட்டின் முன் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் திரண்டு தீயை அணைத்தனர். இதுகுறித்து மானூர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் விசாரணையில், ஒருவர் குண்டு வீசிவிட்டு தப்பியது தெரிந்தது. இது தொடர்பாக 5 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாநகர காவல்துறை சார்பில் இன்று (அக்.20) இரவு ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அட்டவணை வெளியிட்டுள்ளனர். அதில் நெல்லை மாநகரத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் இரவு ரோந்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள காவலர்களின் பெயர் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரத்தில் உதவிக்கு இவர்களை பயன்படுத்தி கொள்ளலாம் என மாநகர காவல் துறை சார்பில் கேட்டு கொண்டுள்ளனர்.
மதுரை ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 24ம் தேதி இரவு 11.25க்கு புறப்படவுள்ள 16729 மதுரை – புனலூர் விரைவு ரயில், மதுரை – திருநெல்வேலி இடையே மட்டுமே இயங்கும். இந்த ரயில் திருநெல்வேலி – புனலூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. புனலூர் ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 24ம் தேதி மாலை 5.15க்கு புறப்பட வேண்டிய 16730 ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.