India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மும்பையில் இருந்து தென் தமிழகத்திற்கு வாரத்தில் ஆறு நாட்கள் மும்பை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களை 4 மாநில மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயிலில் தற்போது 9 சாதாரண ஸ்லீப்பர் பெட்டிகள், 5 மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள் உள்ளிட்ட இறுதி பெட்டிகள் உள்ளன. வரும் 14ஆம் தேதி முதல் இந்த ரயிலில் இரண்டு மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள் குறைக்கப்படுகின்றன.
செங்கோட்டையில் இருந்து தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பை, கல்லிடை, சேரன்மகாதேவி, நெல்லை, மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், மதுரை வழியாக ஈரோடு வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயில் பராமரிப்பு காரணமாக சில வாரங்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த ரயில் தற்போது மீண்டும் இயங்க தொடங்கியுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. SHARE IT.
பாளையங்கோட்டையில் 3 மைதானங்களில் மாநில மகளிர் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது 2 ஆம் நாளான நேற்று(நவ.,10) கால் இறுதி போட்டிகள் நடைபெற்றன. பரபரப்பாக நடைபெற்ற போட்டிகளில் திருவண்ணாமலை, ஈரோடு, புதுக்கோட்டை, வேலூர் வேலூர், அரை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. பெற்றன இன்று(நவ.,11) இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டியில் மற்றும் விழா
நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி பிள்ளையார் குளத்தை சேர்ந்த சுடலையாண்டி மகன்கள் சொத்து பிரச்னைக்காக நேற்று முன்தினம் இரவு சண்டையிட்டுக் கொண்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, கிளின்டன்(29), மணிகண்டன்(28) சேர்ந்து விசாரணைக்கு வந்த SI மற்றும் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நேற்று(நவ.,10) இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இரவு நேர பணியில் டிஎஸ்பி ரகு தலைமையில் திருநெல்வேலி ஊடகம், நாங்குநேரி, வள்ளியூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய உட்கோட்ட பகுதிகளில் காவல் நிலைய அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். அவசர தேவைக்கு இவர்களது தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டை பகுதிகளில் நாய்களின் தொல்லையால் நாளுக்கு நாள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று ஒரே நாளில் 10 பேரை நாய்கள் கடித்துள்ளன. பேட்டை அரசு மருத்துவமனையில் தினமும் 10 க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்கு ஊசி போட்டு வருகின்றனர். இந்த வருடம் மற்றும் பேட்டை அரசு மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்டோர் நாய் கடித்தால் பாதிக்கப்பட்டு நாய் கடி ஊசி போட்டுள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களை நீதிபரிசர்கள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் இன்று (நவம்பர் 10) ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே நான்கு சாலைகள் சந்திக்கும் பகுதியில் சிக்னல் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.இந்த சூழ்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அங்கு சிக்னல்கள் நேற்று இரவு முதல் அகற்றப்பட்டு ரவுண்டானாக அமைக்கப்பட்டது. இன்று (நவ.10) சோதனை ஓட்டம் நடைபெற்றது.
தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்தி குறிப்பில் மாதா வைஷ்ணோ தேவி கத்ராவில் இருந்து நவ.14 இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் விரைவு ரெயில் (16788), கரூர், திண்டுக்கல் வழியாக மாற்று பாதையில் நெல்லை வரும். திருச்சி சந்திப்பு ரெயில் நிலையம் செல்லாது. காச்சிகுடாவில் இருந்து நவ.17 மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் வரும் வாரந்திர ரெயில் (16353), கரூர், திண்டுக்கல் வழியாக செல்லும்.
நெல்லை மாவட்டம் வி.கே.புரம் பொதிகை வாசகர் வட்டம் சார்பில் 57வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மாணவர்களுக்கான இலக்கிய போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் கவிதை போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி ஆகியவை நடைபெற உள்ளன. கலந்து கொள்பவர்கள் 99522 99784 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என வாசகர் வட்ட தலைவர் மைதீன் பிச்சை இன்று கேட்டுக்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.