India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்ட கலெக்டர் நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்; உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த ஆண்டைப் போல தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதை கருத்தில் கொண்டு குறைந்த ஒலியுடன் வெடிக்க வேண்டும்.
நெல்லை மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் பாளை மு.ந. அப்துர் ரஹ்மான் மேல்நிலைப் பள்ளி மாணவர் யஷ்வந்த்ராஜ் 3000 மீட்டர், மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு மற்றும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2ம் பரிசு வென்றுள்ளார். மேலும் தனிநபர் சாம்பியன் விருதும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற இவரை சபாநாயகர் அப்பாவு இன்று (அக்.22) பாராட்டினார்.
தீபாவளி பண்டிகை முடிந்து வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி சென்னைக்கு செல்ல கல்லிடைக்குறிச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் இயங்கவுள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கல்லிடைக்குறிச்சி இரயில் பயணிகள் நலச்சங்கம் இன்று (அக்.22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (அக்.22) லேசான சாரல் மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடையாத காரணத்தினால் மாவட்டத்தில் உள்ள 1200 குளங்களில் சுமார் 800 குளங்கள் வறண்ட நிலையில் காட்சியளிக்கிறது. மீதமுள்ள குளங்களில் பெயரளவுக்கு தண்ணீர் இருக்கிறது. களக்காடு வட்டம் அதன் சுற்றுவட்டார விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் திருக்குறுங்குடி பெரியகுளம் வறண்டு காணப்படுகிறது.
தீபாவளி பண்டிகை முடிந்து செல்பவர்கள் வசதிக்காக திருநெல்வேலியில் இருந்து நவம்பர் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம், தென்காசி வழியாக விருதுநகர், மதுரை, திருச்சி சென்று அதிகாலை நான்கு பத்து மணி அளவில் தாம்பரத்தை சென்றடையும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா வருகிற 26 ஆம் தேதி சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று பட்டம் அளிக்க உள்ளார். இதற்காக அவர் நெல்லைக்கு வருகை தர உள்ளார். விழா ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் உள்ள குடோனில் இருந்து லாரி மூலம் கேரளாவுக்கு கடத்த இருந்த 12.5 டன் மதிப்புள்ள 300 மூட்டை ரேஷன் அரிசி இன்று (அக்.22) பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதன் ஓட்டுநர் கேரளாவைச் சேர்ந்த சோஜி என்பவரை கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் திருட்டு வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தினம்தோறும் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் பணிபுரிய சிறப்பு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இரவு முழுவதும் காவலர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர். அதன்படி இன்று (அக்.22) இரவு ரோந்து காவலர்கள் பெயர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் இன்று (அக்.22) மகளிர் உதவி எண் 181 அறிவிக்கப்பட்டுள்ளது. 24 x 7 மணி நேரமும் செயல்படும் இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தி மகளிர் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (அக்.22) விடுத்துள்ள அறிக்கையில்; தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வருகிற 5ம் தேதி காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சு போட்டியும், 7ம் தேதி நேரு பிறந்தநாள் பேச்சுப் போட்டியும் நெல்லை சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படும்.விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி துறை அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.