Tirunelveli

News August 8, 2025

11ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்க முகாம் கலெக்டர் தகவல்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், “நடப்பு ஆண்டில் 2ஆம் சுற்று குடற்புழு நீக்க முகாம் 11ஆம் தேதி மற்றும் விடுபட்டவர்களுக்கு 18ஆம் தேதி செயல்படுத்தப்பட உள்ளது. அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடி மையங்களில் குடற்புழு தடுப்பு மாத்திரை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

News August 8, 2025

மாவட்டத்தில் இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்ட் 7) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விவரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News August 8, 2025

தமிழ் ஆர்வலர்கள் தமிழ் செம்மல் விருது பெற வாய்ப்பு

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: 2025ம் ஆண்டிற்கான “தமிழ் செம்மல்” விருதுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சித் துறையின் tamilvalarchithuraiin..gov.in வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மண்டல தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அலுவலகத்தில் 28ம் தேதிக்குள் வழங்க வேண்டும். விருது பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.

News August 8, 2025

நெல்லை வழியாக சுதந்திர தின சிறப்பு ரயில் அறிவிப்பு

image

சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே திருநெல்வேலி வழியாக சுதந்திர தின விடுமுறை சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை – செங்கோட்டை சிறப்பு ரயில் ரயில் ஆகஸ்ட் 14 வியாழன் இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு நெல்லை வழியாக மறுநாள் காலை 11:30 மணிக்கு செங்கோட்டையை அடையும். செங்கோட்டை – சென்னை: ஆகஸ்ட் 17 ஞாயிறு இரவு 7.45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னையை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 7, 2025

இளம் வில்லுப்பாட்டு கலைஞரை கௌரவித்த கலெக்டர்

image

நெல்லை பிரபல வில்லுப்பாட்டு கலைஞர் மாதவி பல்வேறு கோயில்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் ஆன்மீக வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தி பிரபலமாகி வருகிறார். சிறு வயது முதலே வில்லுப்பாட்டு கலையை ஆர்வமாக மேற்கொண்டு வரும் கலைஞர் மாதவியை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று அலுவலகத்திற்கு அழைத்து பொன்னாடை அணிவித்து கௌரவித்து கலையை சிறப்பாக மேற்கொண்டு வருவதற்கு பாராட்டினார்.

News August 7, 2025

நெல்லையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

திருநெல்வேலி மாவட்டத்தின் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரியில் வரும் 23ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதில் 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்த மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

நெல்லை: கேஸ் DELIVERY அப்போ இதை பண்ணுங்க!

image

நெல்லை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News August 7, 2025

நெல்லை: 10th PASSக்கு.. ரயில்வே வேலை! Apply…

image

நெல்லை மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.19,900 – ரூ.29,200 வரை வழங்கப்படும். கடைசி வாய்ப்பை தவற விடாதீர்கள். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News August 7, 2025

நெல்லையில் இன்று கைத்தறி தின கண்காட்சி

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள அறிக்கை: பதினோராவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை 7ம் தேதி சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கபட உள்ளது. நெசவாளர் கூட்டுறவு சங்க கைத்தறி ஜவுளிகள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்படுவதால் பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

News August 6, 2025

நாரணம்மாள்புரம் பகுதியில் குவாரிக்கு தடையில்லா சான்று

image

தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், திருநெல்வேலியைச் சேர்ந்த முகமது சலீம் பாதுஷாவுக்கு நாரணம்மாள்புரம் பகுதியில் ஸ்டோன் மற்றும் கிராவல் குவாரி நடத்துவதற்கு சுற்றுச்சூழல் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://parivesh.nic.in இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஆணையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!