Tirunelveli

News October 27, 2025

நெல்லை: லைன்மேனை தேடி அலையாதீங்க!

image

நெல்லை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 27, 2025

நெல்லை மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

image

நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு நில உடமை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வேளாண்மை அடுக்ககம் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தனி குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. பிஎம் கிஷான் திட்டத்தில் பயன் பெற்று வரும் அனைத்து விவசாயிகளும் தங்களது அடுத்த அடுத்த தவணைகளை பெற நில உடமை ஆவணங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வலைதளத்தில் இதுவரை பதிவு செய்யாத 6868 விவசாயிகள் அருகில் உள்ள இ- சேவை மையத்தை அணுகலாம்.

News October 27, 2025

நெல்லையில் இருவர் மீது குண்டர்

image

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் திருட்டு வழக்கில் கைதான தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ஜாபர் சாதிக் (20), நெல்லை அருகன்குளத்தை சேர்ந்த கந்தசாமி என்ற கார்த்திக் (21) ஆகியோரை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமணி உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

News October 27, 2025

நெல்லையப்பர் கோயில் கந்த சஷ்டி விழா 5ஆம் நாள் பூஜை

image

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில் தற்போது ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐந்தாம் திருநாளில் இன்று சுவாமி ஆறுமுகர் மற்றும் வள்ளி தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

News October 27, 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம் நாளை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. தங்கள் வார்டு பகுதியில் எப்போது நடைபெறுகிறது என்பதை அந்த பகுதி கவுன்சிலரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தங்கள் பகுதியில் முன்னுரிமை அடிப்படையில் செய்ய வேண்டிய பணி குறித்து தெரிவிக்கலாம்.

News October 26, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.26] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சுரேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News October 26, 2025

பாளை சிறையில் கைதிகள் மோதலா?

image

பாளை சிறை கண்காணிப்பாளர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், பாளை சிறையில் இன்று கைதிகளுக்கு இடையே சாதிய அடிப்படையில் மோதல்கள் ஏற்பட்டதாகவும் அதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தவறான செய்தி பரவுகிறது.சாதிய அடிப்படையில் மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. சிறை தீவிர கண்காணிப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

News October 26, 2025

நெல்லை: B.Eக்கு அரசு வேலை தயார்!

image

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Degree
3. சம்பளம்: ரூ.40,000 – 1,40,000/-
4. வயது வரம்பு: 21-25
5. கடைசி தேதி : 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [C<>LICK HERE<<>>]
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!

News October 26, 2025

நெல்லை: இனி தாலுகா ஆபிஸ் அலையாதீங்க!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <>க்ளிக்<<>> பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு.
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.

News October 26, 2025

நெல்லை: சூரசம்ஹார பக்தர்ளுக்கு சிறப்பு ரயில்

image

சூரசம்கார விழாவை காண்பதற்காக தமிழக முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 09.35 மணிக்கு சென்னை தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில் புறப்படுகிறது. இந்த ரயில் மதுரை வழியாக மறுநாள் காலை அதாவது கந்த சஷ்டி அன்று காலை 8 மணிக்கு நெல்லைக்கு வந்து சேரும். அதே நாள் இரவு 10:30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாக தாம்பரம் செல்லும்.

error: Content is protected !!