Tirunelveli

News August 8, 2025

இன்றைய இரவு ரோந்து காவல்துறை அதிகாரிகள்

image

நெல்லை மாவட்டத்தில் இன்றிரவு (ஆகஸ்ட் 8) முதல் நாளை காலை 6 மணி வரை உட்கோட்ட வாரியாக ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களுடைய கைபேசி எண்ணுடன் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்மந்தபட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். மேலும், நேரடியாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டு உள்ளது.

News August 8, 2025

நெல்லை போலீசார் சாதனை – கமிஷனர் பாராட்டு

image

தமிழ்நாடு காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் 23.07.2025 முதல் 26.07.2025 வரை சென்னை ஒத்திவாக்கத்திலுள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகர காவல் துறையை சேர்ந்த காவலர்கள் பதக்கங்களை வெற்று சாதனை படைத்தனர். அவர்களை போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதி மணி இன்று (ஆகஸ்ட் 8) நேரில் அழைத்து பாராட்டினார். போலீஸ் துணை கமிஷனர்கள் உடன் இருந்தனர்.

News August 8, 2025

நெல்லை இளைஞர்களே அரசு வேலை – ரூ.68,000 வரை சம்பளம்!

image

நெல்லை இளைஞர்களே, தமிழக சுற்றுசூழல் துறையில் புராஜக்ட் அசோசியேட், கணக்கு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு என பணிக்கேற்ற தகுதியுடையோர் <>இங்கே க்ளிக்<<>> விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.28,500 – 68,400 வரை வழங்கப்படும். ஆகஸ்ட் 15க்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேடும் நபர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News August 8, 2025

நெல்லை: சுதந்திர தின சிறப்பு ரயில் – முன்பதிவு தொடக்கம்

image

நெல்லை ரயில் பயணிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளது. இதில் வண்டி எண் 06089, 06090 ஆகிய ரயில்கள் நெல்லை வழியாக வந்து செல்கின்றது. இதற்கான முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 8) காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News August 8, 2025

நெல்லை முதியவர் வீட்டில் பிள்ளையார் சிலை திருட்டு

image

நெல்லை, வண்ணார்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம் (65) தனது வீட்டு முன்பாக கடந்த 18 ஆண்டுகளாக 3/4 அடியில் பிள்ளையார் சிலை வைத்து பூஜை செய்து வந்தார். இன்று அதிகாலை 1 மணி அளவில் பார்த்தபோது பிள்ளையாரை காணவில்லை. மின்தடையை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலையை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை.

News August 8, 2025

BREAKING: நெல்லை வாலிபர் கொலை – 4 குற்றவாளிகள் கைது

image

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே சங்கநேரியை சேர்ந்த பிரபுதாஸ் (27) என்பவரை வேலைக்கு அழைத்து சென்ற கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்தது. இச்சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபுதாஸ் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், போலீசார் கொலை செய்த 4 குற்றவாளிகளை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News August 8, 2025

நெல்லை மக்களே இதை SAVE பண்ணிக்கோங்க!

image

நெல்லை மாவட்டத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் யார் ? அவர்களை தொடர்பு கொள்ளும் எண்கள் . மாவட்ட ஆட்சியர் – சுகுமார் – 0462-2501035
காவல்துறை கண்காணிப்பாளர் – சிலம்பரசன் – 0462-2568020
மாநகராட்சி ஆணையர் – சுகபுத்ரா – 0462-2329329
மாவட்ட வருவாய் அலுவலர் – சுகன்யா – 0462-2500466
ஊரகவளர்ச்சிதுறை இணை இயக்குநர் – சரவணன் – 0462-2500611
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!

News August 8, 2025

நெல்லை: கூகுள் மேப் மூலம் வந்தவர்களுக்கு அபராதம்

image

பாளையங்கோட்டையில் முதலாம் ஆண்டு பயிலும் மூன்று கிராமப்புற மாணவர்கள், நெல்லை சந்திப்பில் புத்தக கடைக்கு செல்ல கூகுள் மேப் உதவியுடன் பயணித்தனர். ஆனால், வழிதவறி ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். டிக்கெட் இல்லாததால், ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி, தலா 150 ரூபாய் அபராதம் விதித்தனர். கூகுள் மேப்பை நம்பாமல், விசாரித்து செல்ல அறிவுறுத்தி, மாணவர்களை அனுப்பினர்.

News August 8, 2025

11ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்க முகாம் கலெக்டர் தகவல்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், “நடப்பு ஆண்டில் 2ஆம் சுற்று குடற்புழு நீக்க முகாம் 11ஆம் தேதி மற்றும் விடுபட்டவர்களுக்கு 18ஆம் தேதி செயல்படுத்தப்பட உள்ளது. அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடி மையங்களில் குடற்புழு தடுப்பு மாத்திரை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

News August 8, 2025

மாவட்டத்தில் இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்ட் 7) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விவரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!