Tirunelveli

News April 11, 2025

நெல்லை: 15 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் Business Development & Marketing Executive பணிக்கு 35 காலி பணியிடங்கள் உள்ளது. தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. ஏதாவது ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். *வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் செய்யவும்*

News April 11, 2025

நெல்லை: 8 வயது சிறுவனிடம் அத்துமீறிய 3 சிறுவர்கள்

image

மானூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனை அதே கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுள்ள 3 சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து 8 வயது சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரில் பேரில் 15 வயது சிறுவர்கள் 3 பேரும் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டு நெல்லை சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி எச்சரித்து 3 பேரையும் ஜாமீனில் நேற்று (ஏப்ரல்-10) விடுவித்தார்.

News April 11, 2025

சோகத்தில் உயிரிழந்த கன்றை வலம் வந்த பசுமாடு

image

கொண்டாநகரம் விசாலாட்சி நகரில் நேற்று (ஏப்ரல் 10) பிற்பகலில் பசுமாடு ஒன்று கன்று ஈன்றுள்ளது. சிறிது நேரத்தில் அந்த கன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பசுமாடு தனது இறந்த கன்றை சுற்றிசுற்றி வலம் வந்தது. இச்சம்பவம் அங்கு செல்வோரை கண்கலங்க வைத்தது. மேலும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

News April 11, 2025

நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராவதில் சிக்கல்

image

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அண்ணாமலைக்கு பின்னர் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. தற்போது பாஜக மாநில தலைவருக்கு புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பத்தாண்டுகள் பாஜக உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற நிலையில் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்து 7 ஆண்டுகள் ஆவதால் மாநிலத் தலைவராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

News April 10, 2025

119 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள்

image

நெல்லை மாவட்டத்தில் இயங்கி வரும் சத்துணவு மையங்களில், 119 சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு தகுதியான பெண்கள், வரும் 15ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். இதற்கான மாதிரி விண்ணப்ப படிவம் www.tirunelveli.nic.in மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News April 10, 2025

நெல்லை: ம.சு பல்கலைக்கழக பேராசிரியர் மீது பாலியல் புகார்

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதிலிருந்து தற்போது கல்லூரியில் வேலை செய்யும் வரை தொடர்ந்து பாலியல் ரீதியான துன்புறுத்தலை வேதியியல் துறை பேராசிரியர் கொடுப்பதாக தற்காலிக பேராசிரியர் ஒருவர் மாநில மகளிர் ஆணையத்திற்கும் உயர்கல்வி துறைக்கும் மனு அனுப்பியுள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து பல்கலைக்கழகம் விசாரிக்க தமிழக உயர் கல்வி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

News April 10, 2025

12ஆம் தேதி ரேஷன் அட்டை குறைதீர்க்கும் முகாம்

image

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் நேற்று (ஏப்ரல் 9) விடுத்துள்ள செய்தி குறிப்பு: வரும் 12ஆம் தேதி சனிக்கிழமை குடும்ப அட்டை குறைதீர்க்கும் முகாம் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற உள்ளன. புதிய குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் மனு அளித்து பலனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.

News April 10, 2025

அறிவியல் மையத்தில் கோடைக்கால பயிற்சி முகாம்

image

பள்ளி மாணவ- மாணவிகள் கோடைக்கால விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் கோடைக்கால அறிவியல் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. வரும் 28ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை மின்னணுவியல் என்ற பிரிவு 8-9மாணவ மாணவிகளுக்ககவும். STEM Activity என்ற பிரிவில் 5-8 மாணவ- மாணவிகளுக்கும் நெல்லை அறிவியல் மையத்தில் நடக்கிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 10, 2025

சிறுமியின் நிர்வாண படம் கேட்டு டார்ச்சர் – போக்சோவில் கைது

image

திருநெல்வேலி சிறுமி ஒருவரிடம் அவரது நிர்வாண படம் கேட்ட கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். வள்ளியூர் கல்லூரி மாணவர் ஒருவர்14 வயது நெல்லை சிறுமியை காதலிப்பதாக கூறி செல் போனில் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமியிடம் அவரது நிர்வாணப் படத்தை அனுப்பக் கோரி தொடர்ந்து தொல்லை கொடுத்தாராம். இதனை அடுத்து நேற்று (ஏப்9)சேரன்மகாதேவி போலீசார் கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News April 10, 2025

நெல்லையில் அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

image

நெல்லை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் அக்னி வீரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது.

error: Content is protected !!