Tirunelveli

News November 13, 2024

விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்ட நெல்லை மின்வாரியம்

image

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டக் கழகத்தின் சார்பில் இன்று(நவ.13) வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் கம்பங்களின் அருகாமையில் கொடியோ பதாகைகளோ அமைக்க வேண்டாம். இதன் மூலம் மின் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கவனமுடன் இருக்கவும் மின்விபத்தை தவிர்த்து இன்னுயிரை காப்போம் என விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டனர்.

News November 13, 2024

நெல்லையில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்!

image

#இன்று(நவ.,13) காலை 10 மணிக்கு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. #காலை 10 மணிக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் முகம் நடக்கிறது.#நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் முதுகலை முதலாண்டு மாணவ மாணவிகளுக்கு முதல் நாள் அறிமுக வகுப்பு தொடக்க விழா நடைபெறுகிறது.

News November 13, 2024

நெல்லையில் 2 நாள் கனமழை எச்சரிக்கை!

image

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த நிலையில், தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாளை முதல் 2 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

News November 13, 2024

நெல்லை: அம்பேத்கர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

image

தமிழ்நாட்டில் ஆதிதிராவிட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டவர்களுக்கு அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெற விரும்புவோர் தங்களது முழு விவரங்களை நவ.,22 ஆம் தேதிக்குள் நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு சமர்ப்பிக்கலாம. விண்ணப்பங்களை tn.gov.in தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என கலெக்டர் கார்த்திகேயன் நேற்று தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

மாநகராட்சிக்கு எதிராக அதிமுக போராட்ட அறிவிப்பு

image

நெல்லை மாநகராட்சியில் பணியாற்றும் சுய உதவிக் குழு தூய்மை பணியாளர்களுக்கு சரிவர சம்பளம் வழங்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில் மாவட்டச் செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் வைரலாக்கி வருகின்றனர்.

News November 13, 2024

நெல்லை: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களை தடுக்க நாள்தோறும் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (நவ.12) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் காவல் உதவிக்கு இவர்களை அணுகலாம்.

News November 12, 2024

நெல்லை: காவலர்களுக்கு நற்சான்று வழங்கிய டிஐஜி

image

நெல்லை காவல் சரக டிஐஜி அலுவலகத்தில் இன்று (நவ.12) டிஐஜி மூர்த்தி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நெல்லை தென்காசி உள்ளிட்ட நான்கு மாவட்ட எஸ்பிக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்த காவலர்கள் மற்றும் அதிகாரிகளை டிஐஜி மூர்த்தி பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.

News November 12, 2024

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் பெட்டிகளை அதிகரிக்க பரிந்துரை

image

திருநெல்வேலி – சென்னை, சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் [T.NO.20665/ 20666] பெட்டிகளின் எண்ணிக்கையை 8 லிருந்து 16 ஆக உயர்த்திட பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சென்னை தென்னக ரயில்வே போக்குவரத்து பிரிவு வர்த்தக துணை மேலாளர் பிரபாகர் குணசீல பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News November 12, 2024

BE படித்த பெண்களுக்கு கலெக்டர் முக்கிய தகவல்

image

நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இளங்கலை பொறியியல் மற்றும் தொழிற்கல்வி படித்து முடித்த மகளிர்கள் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக சேர்ந்து அரசு ஒப்பந்தப் பணியினை செய்வதற்கு விருப்பம் இருந்தால் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (நவ.12) தெரிவித்துள்ளார்.

News November 12, 2024

நெல்லை பள்ளியில் திரைப்படம் ஒளிபரப்பு – சிஇஓ விசாரணை

image

நெல்லை மாவட்டம் விகேபுரத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் கடந்த சனிக்கிழமை மாணவர்களுக்கு வேட்டையன் திரைப்படம் ஒளி பரப்பப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் அதிரடி விசாரணை நடத்தினார். மாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக திரையிடப்பட்டதாக தலைமை ஆசிரியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!