India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டம் இடிந்தகரையை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்தபோது பக்ரைன் நாட்டு கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில் வரும் 10 ஆம் தேதி நெல்லை மீனவர்கள் விடுவிக்கப்பட இருப்பதாக இன்று எம்.பி.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் நேற்று லோடு ஆட்டோ டிரைவர் உலகநாதன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைப் பிடிக்க எஸ்.பி சிலம்பரசன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் உலகநாதன் கொலை வழக்கில் முருகேசன், வாஞ்சிநாதன் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரை தற்போது கைது செய்துள்ளனர்.
நெல்லை மாநகர காவல்துறை இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் வாகனத்தை இயக்கம் முன்பு வாகனத்தில் பிரேக், கண்ணாடி, டயர் காற்று, விளக்கு, எரிபொருள் ஆகியவற்றை சரிபார்த்த பின்பு இயங்குவது நல்லது .இதன் மூலம் பல்வேறு இடர்பாடுகள் மற்றும் விபத்துக்கள் தவிர்க்க முடியும். இதை அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ரயில்களில் முன்பதிவற்ற பெட்டிகளில் காணப்படும் அதிக கூட்டத்தை கணக்கில் கொண்டு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஏற்கனவே 3 பொது பெட்டியுடன் இயங்கி வரும் நெல்லை & பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு முன்பதிவற்ற பொதுப்பெட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் இணைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மொத்தம் 22 பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதால், அந்தப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் பஸ் ரயில் நிலையம் மற்றும் வழிபாட்டு தளங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் வழக்கமான தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக நாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை வழியாக மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்:16352) வருகிற டிசம்பர் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
நெல்லை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், ஆன்லைன் லோன் மோசடி நடைபெறுவதால் உங்கள் போனில் உள்ள whatsapp privacysettings ஐ மாற்றி கொண்டும், சமூக வலைதளங்களில் வரும்அங்கீகரிக்கப்படாத LOAN APP களில் loan எடுப்பதை தவிர்க்க வேண்டும். மோசடி நடைபெற்றால் இணையதளத்தில் cybercrime.gov.in அல்லது 1930 எண்ணை தொடர்புகொண்டு உடனடியாக புகார் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
நெல்லை தெற்கு வீரவநல்லூரை சேர்ந்த சக்திவேல்முருகனை கடந்த 2017ல் முன்விரோதம் காரணமாக விஜய், விகாஷ், ரகுபதி, பார்த்திபன், கண்ணன், மகாராணி ஆகியோர் சேர்ந்து அரிவாளால் கொலை செய்தனர். இந்த வழக்கில் நெல்லை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிபதி இன்று விகாஷ், ரகுபதி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை பார்த்திபன், கண்ணன், மகாராணி, விஜய் ஆகிய 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளனர்.
தமிழ்நாடு மாநில அரசு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நெல்லை இளைஞர்களின் திறனை மேம்படுத்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒருங்கிணைத்து வண்ணாரப்பேட்டையில் உள்ள எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழா டிச.7 அன்று நடைபெற உள்ளது. இதில் 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் இன்று அறிவித்துள்ளார்.
நெல்லை மாநகர காவல்துறை இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் வங்கிகள், கொரியர் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்யும் சைபர் குற்றவாளிகளின் ஆடியோ, வீடியோ அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இவர்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதாக அச்சுறுத்துவார்கள் அல்லது உடனடியாக பணப்பரிமாற்றம் செய்ய சொல்வார்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.
Sorry, no posts matched your criteria.