Tirunelveli

News November 15, 2024

 துப்பட்டா சிக்கியதில் பெண் உயிரிழப்பு

image

நெல்லையில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு கணவர் ரமேஷ் அவரது மனைவி கார்த்திகாவை பைக்கில் அழைத்துச் சென்றார். அப்போது துப்பட்டா  சக்கரத்தில் சிக்கியதில் கார்த்திகா உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியநிலையில் போலீசார் அவரது உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 15, 2024

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட வட்டாட்சியர் 

image

நெல்லை மாவட்ட நில எடுப்பு வட்டாட்சியராக பணிபுரிந்த அரசு அதிகாரி ஒருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் அரசு அதிகாரியாக இருந்து கொண்டு நாம் தமிழர் கட்சியில் கட்சிப் பணிகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

News November 15, 2024

மின்வாரிய கிராமப்புற கோட்ட குறைதீர் கூட்டம்

image

திருநெல்வேலி மின்வாரிய கிராமப்புற கோட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று பாளையில் நடைபெற்றது. மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தலைமை தாங்கினார். பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க உத்தரவிட்டார். கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம், திருநெல்வேலி கிராமப்புற கோட்ட பொறியாளர்கள், கணக்கு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News November 15, 2024

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

image

தமிழக அரசின் சிறப்பு திட்டமான ‘ஊட்டச்சத்தை உறுதி செய்வோம்’ திட்டத்தின் கீழ் நாங்குநேரியில் கர்ப்பிணி பெண்களுக்கும், கருவுற்ற தாய்மார்களுக்கும் உயர் ஊட்டச்சத்து பெட்டகத்தை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர், ஆர்பித் செயின் ஆகியோர் இன்று வழங்கினர். நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

News November 15, 2024

மாவட்டத்தில் 559 மில்லி மீட்டர் மழை பதிவு

image

நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனை அடுத்து நேற்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஊத்து பகுதியில் 101 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் 559 மில்லிமீட்டர் பதிவாகிருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

News November 15, 2024

நெல்லையில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் விபரம்

image

இன்று(நவ.15) காலை 09.30 மணிக்கு பாளையங்கோட்டை விக்னேஷ் கான்வென்ட் பள்ளியில் கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா நடைபெறுகிறது. காலை 10:30 மணிக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள குழந்தைகள் மையத்தில் தாய்மார்களுக்கு குழந்தைகள் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெறுகிறது.

News November 15, 2024

நெல்லை-சென்னை சிறப்பு ரயில் இன்று ரத்து

image

இணை இரயில் வருகை தாமதம் காரணமாக சென்னை – நெல்லை சிறப்பு ரயில் இன்று(நவ.15) ரத்து செய்யப்படுகிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை நெல்லை சிறப்பு ரயில் எண்-06069 முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே இந்த ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் தங்கள் பயணத்திற்கு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

News November 15, 2024

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் முகாம் அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் கூட்டரங்கில் வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்கு தேவையான உதவிகள் பெற கோரிக்கை மனு அளிக்கலாம். நலத்திட்டங்கள் பெற தேசிய அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News November 14, 2024

நெல்லையில் 21 மிமீ மழை பதிவு

image

நெல்லை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது .அதன்படி இன்று மாலை நான்கு மணி நிலவரப்படி அம்பையில் 3 மிமீ, மணிமுத்தாறு 5.60 மிமீ, பாளையம் கோட்டையில் 3.40 மிமீ, பாபநாசத்தில் 3 மிமீ, திருநெல்வேலியில் 6 மிமீ என மொத்தம் மாவட்டத்தில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது .

News November 14, 2024

66,000 மாணவர்களுக்கு கடிதம் எழுதிய சிஇஓ

image

நெல்லையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் மாணவர்களுக்கு 2 பக்க கடிதத்தை எழுதியுள்ளார். அதில் சக மாணவர்களிடமும் உங்கள் ஆசிரியர்களிடமும் அன்பை விதையுங்கள், போதைப் பொருள்களுக்கு வாழ்க்கையை அழித்துக்கொள்ளாதீர் என அறிவுரைகள் கடிதத்தில் இடம்பெற்றுள்ளன. நெல்லையில் 10, 11, 12ஆம் வகுப்பைச் சேர்ந்த 66,000 மாணவர்களுக்கும் இந்தக் கடிதம் இன்று நேரடியாக வழங்கப்படுகிறது.

error: Content is protected !!