India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவுப்படி நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை இரவு காவல் பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பெயர் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது கைப்பேசி எண்ணும் மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு காவல் பணி சேவை பெறும் நபர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை மாற்றத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் டிச.14 அன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிச.8 முதல் டிச.12 ஆம் தேதி வரை தென்கிழக்கு வங்கக் கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
நெல்லையில் ஆண்டுதோறும் பொருநை புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் வரும் ஜனவரி 2025 புத்தக திருவிழா பிரமாண்டமாக நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதோடு சேர்த்து இளைஞர் இலக்கிய திருவிழா & கலை திருவிழா நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர்களின் நூல் வெளியிடவும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. எழுத்தாளர்கள் நூல் பிரதிகளை டிச.31க்குள் கலெக்டர் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் அவர்களது குடும்பத்தினருடன் கணினி திரை வாயிலாக வீடியோ அழைப்பில் பேசும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கைதிகள் 3 நாட்களுக்கு ஒரு முறை 12 நிமிடங்கள் தங்கள் குடும்பத்துடன் பேசலாம். இதற்கு பேசும் நிமிடத்திற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கைதிகள் குடும்பத்தினர் மத்தியில் வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட மக்களின் நலனுக்காக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி பல்வேறு வகையில் போராடி வருகிறார். இந்நிலையில், நேற்று(டிச.07) டெல்லியில் 2006 வனச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், மாஞ்சோலை மக்களை வெளியேற்றக் கூடாது, மக்களின் உரிமைகளை பறிக்கும் மாவட்ட நிர்வாகத்தை கட்டுப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை காவல் சரகத்தில் 269 கல்லூரிகளில் போதைக்கு எதிரான சங்கங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுகின்றன. கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் அடங்கிய கிளப்புகள் மூலம் 4 மாவட்டங்களில் 10 லட்சம் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதுபோல் தொடர்ந்து பள்ளிகளிலும் சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் டிஐஜி மூர்த்தி தெரிவித்தார்.
நெல்லையில் ஆண்டுதோறும் பொருநை புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் வரும் ஜனவரி 2025-புத்தக திருவிழா பிரமாண்டமாக நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதோடு சேர்த்து இளைஞர் இலக்கிய திருவிழா & கலை திருவிழா நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர்களின் நூல் வெளியிடவும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. எழுத்தாளர்கள் நூல் பிரதிகளை டிச.31க்குள் கலெக்டர் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று(டிச.07) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலக மகளிர் தின விழாவினை முன்னிட்டு வருகிற மார்ச் 8ம் தேதி சிறந்த சேவை புரிந்த பெண்களுக்கு அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது. இத்துடன் ரொக்கப் பரிசு ரூ.1 லட்சம், தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. சாதனை புரிந்த பெண்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் டிச.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.
ஊட்டி நகராட்சி ஆணையராக இருந்த ஜகாங்கீர் பாஷா சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கினார். அவரிடம் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் குறுகிய நாளில் அவர் மீண்டும் நெல்லை மாநகராட்சி உதவி ஆணையராக நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜகாங்கிர் பாஷாவை இன்று பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட நபர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் ஔவையார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று சென்னையில் முதலமைச்சரால் இந்த விருது வழங்கப்பட உள்ளது . ஆர்வமுள்ளவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.