Tirunelveli

News April 8, 2025

இ எஸ் ஐ குறைதீர் முகாம் தேதி அறிவிப்பு

image

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக நெல்லை துணை மண்டலம் சார்பில் இ.எஸ்.ஐ. திட்ட பயனாளிகளுக்கு குறைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம் நாளை 9-ஆம் தேதி மாலை 4 மணிக்கு இ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கண்காணிப்பாளர், துணை மண்டல அலுவலக குறைதீர்க்கும் அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பயனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News April 8, 2025

தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் தேதி அறிவிப்பு

image

நெல்லை கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள அறிக்கை நெல்லை மாவட்டத்தில் 15.04.25 அன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. ஐடிஐ பயின்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் 10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பயிற்சி பெற்ற கல்வி நிறுவன தேர்ச்சி சான்று, பாஸ்போர்ட் புகைப்படம் ஆதாருடன் பங்கேற்கலாம்.*ஷேர் பண்ணுங்க

News April 8, 2025

நெல்லையில் உருவாகும் பாகுபலி 

image

பாளையங்கோட்டை காது கேளாதோர் பள்ளி மைதானத்தில் பாகுபலி பொருட்காட்சி இந்த மாதம் 15ம் தேதி தொடங்க உள்ளது.கோடை விடுமுறை தொடங்க உள்ள நிலையில் விடுமுறையை சந்தோஷமாக கழிப்பதற்கு ஏற்ற வகையில் இந்த பொருட்காட்சி அமையும் என்பதால் நெல்லை பகுதி மக்களுக்கு மிகவும் இது ஒரு வரப் பிரசாதம் ஆகும். இந்த பாகுபலி பொருட்காட்சியில் பிரம்மாண்டமான அரங்குகளும் கோட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

News April 8, 2025

இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று(ஏப்.7) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அஜித் குமார் ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News April 7, 2025

நெல்லை மாவட்டத்தில் இரவு பணி அதிகாரிகள் விபரம் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஏப்ரல் 7 இரவு முதல் காலை வரை இரவு காவல் இருந்து பணியில் உள்ள அதிகாரிகள் விபரம் உட்கோட்ட காவல் நிலையங்கள் அளவில் தெரிவிக்கப்பட்டுள்ளன .அவர்களது கைபேசி தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர காவல் உதவி தேவைப்படுவார்கள் காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க

News April 7, 2025

இந்தியாவிலேயே அதிக மழை பெய்த பகுதி: முக்கிய தகவல்

image

கடந்த ஜனவரி 1 முதல் இன்று வரையிலான காலத்தில் இந்தியாவிலேயே மிக அதிக மழையை பெற்ற இடமாக திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான ஊத்து மலை கிராமம் உள்ளது. ஊத்துமலையில் 1780 மிமீ மழையை பெற்று தனது முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளது என வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். (நெல்லையில் அதிக அளவு மழை பதிவாகும் இடமாக ஊத்துமலை உள்ளது) *ஷேர் பண்ணுங்க

News April 7, 2025

மழையால் சேதமான மின் வயரை மிதித்த 6 வயது சிறுவன் பலி

image

சீதபற்பநல்லூர் சேர்ந்த முத்து என்பவரது மகன் மாதேஷ் வயது 6. இவர் அங்கன்வாடியில் படித்து வருகிறார். நேற்று சூறைக்காற்றுடன் பெய்த மழையில் மின்கம்பங்கள் விழுந்தன. இன்று காலை அதே பகுதியில் நடந்து சென்ற மாதேஷ் மின் வயரில் மிதித்து விட மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தான். சீதபற்பநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 7, 2025

நெல்லை: ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (INSURANCE) பிஸ்னஸ் டெவலப்மென்ட் பணிக்கு காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000 வரை வழங்கப்படுகிறது. ஏதாவது ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். *வேலை தேடும் நண்பர்கள், உறவினர்களுக்கு இதை ஷேர் செய்யவும்*

News April 6, 2025

இன்று இரவு காவல் அதிகாரிகள் பணி விவரம் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஏப்ரல் 6 இரவு முதல் நாளை காலை வரை, இரவு காவல் பணியில் உள்ள போலீசார் விவரம், உட்கோட்ட காவல் நிலையங்கள் அளவில் தெரிவிக்கப்பட்டுள்ளன .அவர்களது தொடர்பு தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர காவல் உதவி தேவைப்படுவோர்கள் மேலே உள்ள புகைப்பட்டத்தில் இருக்கும் காவல் அதிகாரிகளின் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News April 6, 2025

அங்கன்வாடியில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளில் செயல்படும் குழந்தை மையங்களில் காலியாக உள்ள 95 முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள், 10 குழு வட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 50 அங்கன்வாடி உதவி பணியாளர்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்களை www.icds.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

error: Content is protected !!