India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டத்தில் விடிய, விடிய தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று(நவ.,20) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்படும் சூழல் உள்ளதால் பாதுகாப்பாக இருக்கவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் அடிஉரம் மற்றும் பிற உரங்கள் பெற அடங்கல் சான்று கட்டாயம் என்ற தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. உரங்கள் பெற ஆதார் கார்டு மட்டுமே போதுமானது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் வேளாண்மை துறை அலுவலர்களை 04622572514 என்ற தொலைபேசி எண்ணில் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என வேளாண்மை இணை இயக்குநர்(பொ) கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவுப்படி நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் மற்றும் கைப்பேசி எண் விவரம் அறிவிக்கப்பட்டது. இரவு காவல்துறை சேவை தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள தனியார் திரையரங்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த ரஹீம் என்பவரை இன்று கைது செய்துள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா உத்தரவின்படி பொதுமக்களுக்கு தினம்தோறும் பல்வேறு குற்ற செயல்கள் குறித்தும், மோசடிகள் குறித்தும், சாலை விதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று(நவ.19) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் வாகனம் ஓட்டும் போது கைபேசியை தவிர்க்க வேண்டும் என புகைப்படத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று(நவ.18) பரவலாக மழை காணப்பட்டது குறிப்பாக சேரன்மகாதேவி பகுதியில் 9.40 மில்லி மீட்டர், ராதாபுரத்தில் 4 மில்லி மீட்டர், திருநெல்வேலியில் 3 மில்லி மீட்டர், களக்காடு பகுதியில் 6.20 மில்லி மீட்டர், கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் 5.80 மில்லி மீட்டர், மூலக்கரைப்பட்டியில் 2 மில்லி மீட்டர் என மொத்தம் 55 இன்று காலை 7 மணி நிலவரப்படி 54.60மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் (வ.எண்.06030) வரும் பிப்ரவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது என நேற்று மாலை (நவ.18) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கரன்கோவில், விருதுநகர், மதுரை வழியாக செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லையில் வரும் 20ஆம் தேதி சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு செய்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை தலைமையில் இந்த ஆய்வு கூட்டம் நடக்கிறது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர் என இவ்வாறு கலெக்டர் கார்த்திகேயன் நேற்று (நவ 18) தெரிவித்தார்.
#இன்று(நவ.,19) காலை 10:30 மணிக்கு மாநகராட்சியில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. #10 மணிக்கு வண்ணார்பேட்டை செல்ல பாண்டியன் மேம்பாலம் அருகே விஸ்வகர்மா சமுதாயத்திற்கு 5 சதவீத உள் ஒதுக்கீடு கோரி விஷ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.