India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லையில் கடைகள்,வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழில் நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்பதை கண்காணிக்க நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமாரை தலைவராகக் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மே 2ஆவது வாரத்திற்குள் 100% பெயர் பலகை வைக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் 25 உற்பத்தியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 10-ம் வகுப்பிற்கு கீழ் படித்த 3 வருடம் அனுபவம் உள்ள 18 – 50 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <

கடைகள் வணிக நிறுவனங்கள் உணவகங்கள் தொழில் நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்ற அரசு செயல்படுத்தி கண்காணிக்க நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமாரை தலைவராகக் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மே 2ஆவது வாரத்திற்குள் 100% பெயர் பலகை வைக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் இருந்து நெல்லை வழியாக சென்னைக்கு தற்போது ஒரு ரயில் மட்டுமே 1994 ஆம் ஆண்டு முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் அதிக அளவில் பயணிகள் செல்கின்றனர். பலர் காத்திருப்பு பட்டியலில் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர். முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும் தினமும் கூட்டம் அலைமோதுகிறது. எனவே இந்த வழிதடத்தில் இரண்டாவது விரைவு ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

சமூக ஊடகங்களில் தற்போது Ghibli-பாணி படங்கள், உருவாக்குவதே ட்ரெண்ட்டாக உள்ளது. இந்நிலையில் புகைப்படத்தை கார்டூன் போல் மாற்றும் கிப்லி தளம் போலியாக பல உருவாக்கப்பட்டு வேகமாக செயல்படுகின்றன. இதை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபர்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே இதில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நெல்லை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் புகைப்படத்தை கார்டூன் போல் மற்றும் கிப்லி தளம் போலியாக பல உருவாக்கப்பட்டு வேகமாக செயல்படுகின்றன. இதை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபர்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தும் நிலை உள்ளது எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசுக்கு புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் அமைக்கப்பட்ட குழந்தைகள் நலக்குழுவினர் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், அவர்களை இன்று (08.04.2025) சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

நெல்லை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணபிக்கலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். இந்த விருது தொடர்பாக தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 15 வயது முதல் 35 வரை உள்ள ஆண் மற்றும் பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ராகு பகவானுக்கு செய்யப்படும் எல்லா அபிஷேகங்களையும் பக்தர்கள் வரிசையில் நின்று தாங்களாவே செய்கின்றனர். இங்குள்ள அம்மனுக்கு பொங்கல் நெய் வைத்தியம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இந்த ஆலயத்தில் வேண்டினால் விபத்து, மற்றும் நோய் நொடிகள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். *ஷேர் பண்ணனுங்க*

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக நெல்லை துணை மண்டலம் சார்பில் இ.எஸ்.ஐ. திட்ட பயனாளிகளுக்கு குறைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம் நாளை 9-ஆம் தேதி மாலை 4 மணிக்கு இ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கண்காணிப்பாளர், துணை மண்டல அலுவலக குறைதீர்க்கும் அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பயனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.