Tirunelveli

News November 24, 2024

வாக்காளர் திருத்த சிறப்பு முகாம்

image

பாளை வடக்கு பகுதி அதிமுக செயலாளர் ஜெனி, 37 வது வார்டு வட்ட செயலாளர் வேல் பாண்டியன், திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அன்பு அங்கப்பன் ஆகியோர் கேடிசி நகர் 37வது வார்டு பகுதியில் உள்ள 7 பூத்துகளுக்கு நடைபெறும் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் பணியினை ரோஸ்மேரி பள்ளியில் இன்று பார்வையிட்டனர். இதில் வட்ட பிரதிநிதி சின்ன பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News November 24, 2024

1490 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் இன்றும் நடைபெறுகிறது

image

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 1490 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த சிறப்பு முகாம் கடந்த 16, 17, நேற்று நடைபெற்றது. தொடர்ந்து இன்றும் நடைபெறுகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

News November 24, 2024

27ஆம் தேதி பிஎஃப் குறைதீர்க்கும் முகாம் அறிவிப்பு

image

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நெல்லை உதவி ஆணையர் குமாரவேல் விடுத்துள்ள செய்தி குறிப்பில், நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் எஸ்ஏவி பாலகிருஷ்ணா பள்ளியில் வரும் 27ஆம் தேதி காலை 9 மணிக்கு வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் இ.எஸ்.ஐ. உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.

News November 23, 2024

இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி இன்று (நவ.23) இரவு பொதுமக்களின் உதவிக்காக ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களின் பெயர், தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அட்டவணையை வெளியிட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இரவு நேர உதவிக்கு இந்த காவலர்களை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

News November 23, 2024

ரயில்களில் கூடுதலாக 6 பெட்டிகள்

image

சென்னை தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு வாரம் 3 முறை இயக்கப்படும் சிலம்பு சூப்பர் பாஸ்ட் ரயிலுக்கும், அதேபோன்று திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலுக்கு வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் ரயிலுக்கும் கூடுதலாக 6 பெட்டிகள் விரைவில் இணைக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. இதனால் இந்த வழித்தட ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News November 23, 2024

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தினத்தை கொண்டாடிய கவுன்சிலர்

image

கடந்த ஆண்டு நவ.23 அன்று திமுக கட்சியில் இருந்து திருநெல்வேலி மாநகராட்சி கவுன்சிலர் பவுல்ராஜ் தற்காலிகமாக நீக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது. திமுக தலைமைக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்தும் கட்சியில் இதுவரை சேர்க்கப்படவில்லை. இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நிரந்தரமாக விலகினார். இதனை நிகழ்வினை பாளை மத்திய சிறை எதிரில் உள்ள காது கேளாதார் பள்ளி மாணவர்களுக்கு இன்று மதிய உணவு வழங்கி கொண்டாடினார்.

News November 23, 2024

மாநகராட்சி புகார் அளிக்க WhatsApp எண் வெளியீடு

image

திருநெல்வேலி மாநகரில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் மழை நீர் தேக்கம், குடிநீர் கசிவு, குப்பை, பாதாள சாக்கடை அடைப்பு உள்ளிட்டவை தொடர்பாக புகார் அளிக்க எண் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் தங்கள் புகார்களை மாநகராட்சி வாட்ஸ்அப் புகார் எண்ணான 9489930261 என்ற எண்ணில் குறைகளை தெரிவிக்கலாம் என மேயர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News November 23, 2024

திருநெல்வேலியில் மழை ‘பூஜ்ஜியம்’

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இந்த நிலையில் நேற்று முதல் நெல்லை மாவட்டத்தில் மழை பெய்யாத நிலையில் இன்று(நவ.23) காலை 8 மணி நிலவரப்படி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மொத்தமாக ஜீரோ அளவு மழை பதிவாகியுள்ளது.

News November 23, 2024

மோசடியாளிடம் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தல்

image

திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட கழகம் சார்பில் இன்று(நவ.23) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், TANGEDCO என்ற பெயரில் தனிப்பட்ட தகவல்களைப் பகிர அல்லது குறுஞ்செய்தியைப் பயன்படுத்தி அல்லது அழைப்பைப் பயன்படுத்தி இணைப்புகளைக் கிளிக் செய்யும் மோசடியாளர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டோர் புகார் அளித்து மோசடி நடவடிக்கைகளைத் தடுக்கவும் என தெரிவிக்கப்பட்டது.

News November 23, 2024

பி.எம். கிசான் உதவித்தொகை 37,144 பயனாளிகளுக்கு வழங்கல்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று(நவ.22) நடந்தது. இதில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசும்போது, நெல்லை மாவட்டத்தில் பயிர் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. மழை வெள்ள பாதிப்பு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 37,144 பயனாளிகளுக்கு பி.எம். கிசான் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

error: Content is protected !!