India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காலை 8.30 மணிக்கு காரியாண்டியில் வெள்ளநீர் கால்வாய் கருமேனியாற்றில் அமைந்துள்ள திருப்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார். காலை 9:00 மணி முதல் வடக்கு சங்கன் திருடு பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. நொச்சிகுளத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு இலவச நோய் தடுப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. நெல்லை இஸ்கான் கோயிலில் மாலை ஐந்து முப்பது மணிக்கு பகவத் கீதை வைபவம் நடக்கிறது.
மானூர் வட்டாரம் வாகைகுளம், கட்டாலங்குளம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 9 வட்டாரங்கள் மற்றும் மாநகரில் 11 இடங்களில் இன்று (டிச.15) காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக காய்ச்சல் பரவலைத் தடுக்க பொதுமக்கள் அருகே உள்ள தங்களது மையங்களுக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி – திருவனந்தபுரம் இடையே மெமு ரயில் இயக்க வேண்டும் என்பது நெல்லை மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு. ஆனால் கேரளாவில் சோரனூர் – கண்ணூர், கொல்லம் – எர்ணாகுளம் ஆகிய இரண்டு பாசஞ்சர் ரயில்களை அங்குள்ளவர்கள் பெற்றுக் கொண்டனர். நெல்லை மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான திருநெல்வேலி-திருவனந்தபுரம் இடையே மெமு ரயில் என்னவாயிற்று என பயணிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (டிச.15) காலை 8.30 மணிக்கு நாங்குநேரி வட்டம் காரியாண்டியில் இருந்து தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்ட வெள்ளநீர் கால்வாயில் கருமேனியாற்றில் அமைந்துள்ள திருப்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்க உள்ளார். இதில் அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.
நெல்லை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று (டிச.14) மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் செய்யப்பட்டது. இதுபோல் தென்காசி மாவட்டம் மற்றும் 10 தாலுகா நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணை 37 அமர்வுகளுடன் நடந்தது. ஒரே நாளில் 7,124 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர அவசர கால கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது. இதில் நெல்லை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி தொடங்கிய மழை இன்று வரை பெய்யும் நிலையில் இன்று மாலை 4 மணி வரை 68 புகார்கள் இங்கு பதியப்பட்டன. இதில் 60 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடைசி எட்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவுப்படி, நெல்லை மாவட்ட காவல் சரக பகுதிகளில் இன்று (டிச.14) இரவு முதல் நாளை காலை வரை ஆய்வு பணி மேற்கொள்ளும் அதிகாரிகள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு அவசர காவல் தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை அவர்களது கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மழை நீர் தேங்கியதால் இன்று (டிச.14) மாலை 5:15க்கு புறப்படும் தூத்துக்குடி மைசூர் ரயில் இரவு 8.25க்கு புறப்படும். தூத்துக்குடி சென்னை பியர்ல் சிட்டி ரயில் இரவு 10க்கு புறப்படும். தூத்துக்குடி பாலக்காடு பாலருவி ரயில் தூத்துக்குடிக்கு பதில் மீலவட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.மேலும் தூத்துக்குடி-நெல்லை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்று (டிச.14) மாலை நிலவரப்படி அதிகபட்சமாக பாபநாசத்தில் 106 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அம்பாசமுத்திரத்தில் 18 மில்லி மீட்டர், சேரன்மகாதேவியில் 10.40 மி.மீ, மணிமுத்தாறில் 32.60, பாளையங்கோட்டையில் 12 மில்லி மீட்டர், நெல்லையில் 6.20 மி.மீ, அதிகபட்சமாக பாபநாசத்தில் 106மி.மீ, சேர்வலாறு அணைக்கட்டில் 53 மி.மீ என மழை பதிவாகி இருந்தது.
நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் ஶ்ரீவில்லிப்புத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே அவருக்கு பதில் பொறுப்பு அலுவலராக மோட்டார் வாகன ஆய்வாளர் மோகனப் பிரியா நியமனம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று (டிச.14) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். விரைவில் வட்டார போக்குவரத்து அலுவலர் புதியதாக நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.