Tirunelveli

News August 11, 2025

நெல்லை: ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்!

image

அக்டோபர் 13 முதல் 26 வரை ரயில் பயணம் செய்பவர்கள் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 வரை ரிட்டன் பயணம் 2ம் வகுப்பு டிக்கெட் எடுத்தால் அவர்களுக்கு 20% பயண கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நெல்லையிலிருந்து சென்னை, மும்பை, பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு இது பொருந்தும். SHARE பண்ணுங்க!

News August 11, 2025

நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் அழைப்பு

image

இன்று (11.08.2025) காலை 11:00 மணியளவில் மாநகராட்சி மைய அலுவலக இராஜாஜி மண்டப கூட்ட அரங்கில் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆணையாளர் மற்றும் துணை மேயர் ராஜி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் விவாதிக்கப்பட உள்ளதால் கவுன்சிலர்கள் பங்கேற்க வேண்டும் என மேயர் அழைப்பு கொடுத்துள்ளார்.

News August 10, 2025

ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழப்பு

image

கருங்குளம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் பாளை திருச்செந்தூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரே வந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக பைக் மோதியதில் பாலமுருகன் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த பாலமுருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து சிவந்திப்பட்டி போலீசார் விசாரணை.

News August 10, 2025

நெல்லை: ரேஷன் கார்டு ONLINEல விண்ணப்பிப்பது எப்படி?

image

நெல்லை மக்களே!
1. இங்கு <>க்ளிக்<<>> செய்து ரேஷன் கார்டு படிவத்தை DOWNLOAD பண்ணுங்க.
2. படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
3. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
4.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
5. விண்ணப்ப நிலையை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்க கையில…
ரேஷன் கார்டு பெயர் நீக்கம், சேர்த்தல் தொடர்ச்சி வேணுமா COMMENT.. SHARE பண்ணுங்க!

News August 10, 2025

ரக்ஷா பந்தன் சகோதரிகளுக்கு பாஜக தலைவர் நன்றி தெரிவிப்பு

image

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் திருவிழா நேற்று நாடு முழுவதும் வட இந்தியர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பெண்கள் ரக்ஷா பந்தன் கயிறு கட்டி இனிப்பு வழங்கி வாழ்த்து பெற்றனர். இதற்கு அவர் நன்றி தெரிவித்து தனது வலைதளத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

News August 10, 2025

நெல்லை சமூக நலத்துறை அதிகாரி மீது பாலியல் வழக்கு

image

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டாரத்தில் பெண் ஊழியருக்கு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் நெல்லை மாவட்ட மகளிர் திட்ட சமூக நலத்துறை அதிகாரி இலக்குவன் மீது நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 10, 2025

ஆயுதங்கள் தயாரிக்க தடை – மாவட்ட காவல்துறை உத்தரவு

image

நெல்லை இரும்பு பட்டறைகளில் விவசாய பயன்பாட்டு ஆயுதங்களை தவிர அரிவாள், கத்தி உள்ளிட்ட அபாயகரமான ஆயுதங்களை தயாரிக்க நேற்று (ஆகஸ்ட் 9) திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தும் ஆயுதங்கள் தயாரிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

News August 10, 2025

திருநெல்வேலி : IOB வங்கியில் வேலை..! Apply..

image

நெல்லை மக்களே.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எதாவது ஒரு பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். சம்பளம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இன்று (ஆக.10) முதல் விண்ணப்பிக்கலாம். இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து வரும் ஆக.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

News August 10, 2025

ஆயுதங்கள் தயாரிக்க தடை – மாவட்ட காவல்துறை உத்தரவு

image

நெல்லை இரும்பு பட்டறைகளில் விவசாய பயன்பாட்டு ஆயுதங்களை தவிர அரிவாள், கத்தி உள்ளிட்ட அபாயகரமான ஆயுதங்களை தயாரிக்க நேற்று (ஆகஸ்ட் 9) திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தும் ஆயுதங்கள் தயாரிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

News August 10, 2025

நெல்லை: காதலர்களை சேர்த்து வைக்கும் கோயில்…

image

நெல்லை, அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள பாடக பிள்ளையார் கோயில், பாடகலிங்கசுவாமி மற்றும் மகாலிங்கத்தை மூலவராகக் கொண்டுள்ளது. இந்தக் கோயிலுக்கு வரும் காதலர்கள் ஒன்றிணைவார்கள் என்பதால், இது பாடக பிள்ளையார் கோயில் என அழைக்கப்படுகிறது. ஒரு முறை இங்கு வந்து சென்றால் காதல் நிறைவேறும் என்பதாலும், காதல் திருமணம் கை கூடும் என்பதாலும் இளைஞர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். * ஷேர் பண்ணுங்க மக்களே*

error: Content is protected !!