Tiruchirappalli

News April 18, 2025

திருச்சி: இந்த எண்களை மிஸ் பண்ணாதீங்க

image

திருச்சி மாவட்ட பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைபேசி எண்கள்:
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0431-2415031, 2415032, 2415033
▶️குழந்தைகள் உதவி மையம் – 1098
▶️பெண்கள் பாதுகாப்பு உதவி – 181
▶️விபத்து அவசர வாகன உதவி – 102, 108
▶️பேரிடர் கால உதவி – 1077
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.

News April 18, 2025

திருச்சி: கார் மோதி விவசாயி பலி

image

வையம்பட்டியை அடுத்த சேசலூர் முத்தமடைப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சடையன் (50). இவர் நேற்று காலை தனது தோட்டத்தில் பூக்களை பறித்துக் கொண்டு, சேசலூர் அருகே திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சடையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 17, 2025

பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் அறிவிப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே.15 வரை 21 நாட்களுக்கு திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் தடகளம், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி முகாம் நடத்தப்படட உள்ளது. இதில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

திருச்சி: வராக ஜெயந்திக்கு இதை மறக்காதீங்க

image

இரண்யாட்சன் என்ற அசுரனிடம் இருந்த இந்த பூமியை பூமியை காக்க விஷ்ணு பகவான் எடுத்த மூன்றாவது அவதாரம் தான் வராக அவதாரம். நாளை வராக ஜெயந்தி திதி வர உள்ளது. இந்த நாளில் வராகரை வழிபட்டால் பெயர், புகழ், அந்தஸ்து, ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வரியம் இவை எல்லாம் ஒரு சேர கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இல்லையெனில் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். உங்கள் உறவினருக்கும் ஷேர் செய்யுங்கள்..

News April 17, 2025

மாயமான சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

image

திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த சிறுவன் நேற்று கரியமாணிகத்தில் சைக்கிளில் சுற்றிதிருந்தார். இதையறிந்த சமயபுரம் காவல் ஆய்வாளர் வீரமணி நடத்திய விசாரணையில் சிறுவன் திருச்சி கருமண்டபத்தை சேர்ந்தவரும் தாய் திட்டியதால் கோபித்து கொண்டு வீட்டில் டீயூசன் செல்வதாக கூறிவிட்டு கருமண்டபத்திலிருந்து சைக்கிளில் சமயபுரம் பகுதிக்கு வந்ததாக தெரிந்தது. பின்னர் போலிசார் சிறுவனின் பெற்றோரிடம் இன்று ஒப்படைத்தனர்.

News April 17, 2025

திருச்சி: ரூ.56,000 சம்பளத்தில் வேலை?

image

TNPSC குரூப் 1 வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய <><>tnpsc.gov.in<<>><<>> என்ற இணையத்தில் பார்க்கலாம். இதை SHARE செய்யவும்

News April 17, 2025

திருச்சியில் 67.6 மி.மீ மழை பதிவு

image

திருச்சி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தாலும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று துவாக்குடியில் 20 மி.மீ, துறையூரில் 34 மி.மீ, லால்குடியில் 13.6 மி.மீ என திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 67.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 17, 2025

திருச்சி: புனித வெள்ளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

கிறிஸ்தவர்களின் புனித வெள்ளியை முன்னிட்டு திருச்சியிலிருந்து நாகை, வேளாங்கண்ணி மற்றும் பல்வேறு நகரங்களுக்கு ஏப்.18, 19, 20 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. குறிப்பாக திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை, காரைக்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு 175 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

News April 17, 2025

திருச்சி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Agri Research Analyst பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்து தெரியப்படுத்துங்கள்…

News April 17, 2025

திருச்சி தபால் அலுவலகங்களில் சிறப்பு சலுகை

image

சித்திரை விழாவை முன்னிட்டு திருச்சி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தபால் அலுவலகங்களிலும், இந்திய அஞ்சல் துறை சர்வதேச விரைவு தபால் மற்றும் பார்சல் மூலமாக குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் சேவை சிறப்பு கவுண்டர்கள் மூலமாக ஏப்-30 வரை செயல்பட உள்ளது என்று திருச்சி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். திருச்சி மக்களே இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!