Tiruchirappalli

News August 12, 2025

திருச்சி: B.E முடித்தவர்களுக்கு ரூ.90,000 சம்பளத்தில் வேலை

image

பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து வரும் ஆக.30-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News August 12, 2025

திருச்சி டிஐஜி வருண்குமார் பணியிட மாற்றம்

image

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி திருச்சி மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றி, பதவி உயர்வு பெற்று திருச்சி சரக டி.ஐ.ஜி-யாக பொறுப்பு வகித்து வந்த வருண்குமார், சென்னை சிபிசிஐடி டி.ஐ.ஜி-யாக பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். SHARE NOW !

News August 12, 2025

திருச்சி: காவல் செயலி குறித்து விளக்கும் நிகழ்ச்சி

image

திருச்சி மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு “காவல் உதவி செயலி” குறித்து விளக்கும் நிகழ்ச்சி தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலைய குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் வனிதா கலந்துகொண்டு, காவல் உதவி செயலியை பயன்படுத்துவது குறித்து விளக்கி பேசினார். இதில் தபால் நிலைய அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News August 11, 2025

திருச்சி: மனநல மையங்கள் பதிவு செய்ய காலக்கெடு

image

திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் அனைத்தும் மனநல பராமரிப்புச் சட்டம் 2017-ன் படி முறையான உரிமம் பெற்று இயங்க வேண்டும். உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள், சென்னை கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில மன நல ஆணையத்தில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 11, 2025

திருச்சியில் பிறந்த பிரபலங்களை பற்றி தெரியுமா?

image

திருச்சியில் பிறந்த பிரபலங்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க!

✅ பாடலாசிரியர் வாலி,
✅ எழுத்தாளர் சுஜாதா
✅ நடிகர் நெப்போலியன்,
✅நடிகர் சிவகார்த்திகேயன்,
✅ நடிகர் பிரசன்னா,
✅நடிகர் கவின்,
✅இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
✅ இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்
✅ நடிகை ரேணுகா
✅அனு ஹாசன்
✅கிரிஷ்
✅கல்கி சதாசிவம்

நம்ம திருச்சிக்கு பெருமை சேர்ந்த இவர்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்கள்

News August 11, 2025

திருச்சி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை! Apply Now

image

TNPSC குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் Rs.22,800 முதல் Rs.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE செய்து பயனடைய செயுங்கள்

News August 11, 2025

திருச்சி: BHEL நிறுவனத்தில் வேலை.. கடைசி வாய்ப்பு

image

BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள ‘515’ கைத்திறத் தொழிலாளர் (Artisans) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு 10th மற்றும் ITI/NAC முடித்த, விருப்பம் <>இங்கே க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளை (ஆக.,12) கடைசி தேதியாகும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

News August 11, 2025

திருச்சியில் மின்தடை அறிவிப்பு

image

திருச்சி மெயின்கார்ட் மற்றும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.,12) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி, கரூர் பைபாஸ்ரோடு, சிந்தாமணி, ஓடத்துறை, சிங்காரத்தோப்பு, உறையூர் ஹவுசிங் யூனிட், சத்திரம் பஸ் ஸ்டாண்ட், மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், சீராத்தோப்பு, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், பழூர், ஜீயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.

News August 11, 2025

திருச்சி: உறுதிமொழி எடுத்து சான்றிதழ் பெறுங்க

image

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை திருச்சி காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன் என்ற உறுதிமொழியை எடுத்து https://drugfreetamilnadu.tn.gov.in/en#pledgeஇல் சான்றிதழை டவுன்லோடு செய்யலாம்.

News August 10, 2025

திருச்சியில் 896 வழக்குகள் பதிவு

image

திருச்சியில் நடப்பாண்டில் போதை விற்பனை செய்பவர்கள், பதுக்கி வைப்பவர்கள் (ம) கடத்துபவர்கள் மீது 896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 939 நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களிடமிருந்து 5005.6 கிலோ புகையிலை பொருட்களும்,12 இருசக்கர வாகனம், 8 நான்கு சக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் 5 நபர்கள் மீது குண்டர் தடுப்பு பதியப்பட்டுள்ளதாக திருச்சி எஸ்.பி தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!