India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரசித்தி பெட்ரா சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு இன்று நடிகர் சிவகார்த்திகேயன் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு விநாயகர், உற்சகாம்பாள், கொடிமரம் வணங்கினார். இதில் அறங்காவலர் குழு உறுப்பினர் பிச்சைமணி, சேது லட்சுமணன் மற்றும் கோயில் பணியாளர்கள் சுதாகர் உடனிருந்தனர். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் பார்ப்பதற்கு கோவில் வட்டாரங்களில் கூட்டம் கூடியது.
திருச்சி அங்காடி பகுதிகளான மணச்சநல்லூர், லால்குடி, திருச்சி, புள்ளம்பாடி, துவரங்குறிச்சி, துறையூர், மணப்பாறை, தொட்டியம் தா.பேட்டை, காட்டுப்புத்தூர் ஆகிய 10 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் “கண்வலி கிழங்கு” விதை விற்பனையை முறைப்படுத்தி அரசாணை வெளியாகி உள்ளது. எனவே இந்த விதை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள விற்பனை கூடங்களை அணுகி பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHAREIT
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டி.ஐ.ஜி வருண் குமார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் டிஐஜி வருண் குமார் தரப்பில் இரண்டு சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு வரும் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடை சேர்ந்த செல்வராஜ் என்பவர் அன்னதான திட்டத்திற்கு ரூ.5,001 பணம் வழங்கியுள்ளார். இதற்கு உரிய ரசீது வழங்காமல், போலி ரசீது ஒன்றினை பணியில் இருந்த ஊழியர்கள் வழங்கியுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 2 பேரை பணிநீக்கமும், ஒருவரை பணியிடை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது.
திருச்சி ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீர்நிலைகளை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் செய்தவருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் “நீர்நிலை பாதுகாவலர்” விருதும், ரூ.3 லட்சம் ரொக்க பரிசம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்<
மணப்பாறையில் இம்மாத இறுதியில் சிறப்பான முறையில் பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா நடைபெறவுள்ளது. இதற்கான பாடலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டார். மேலும் பெருந்திரளணி நிகழ்விற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக இணைய தளத்தின் பயன்பாட்டையும் துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனிருந்தார்.
திருச்சி மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் இன்று பொறுப்பேற்ற முதல் நாளிலேயே எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், திருச்சியில் பொதுமக்களுக்கு எவ்வித இடர்பாடும் இல்லாமல், சட்டம், ஒழுங்கை நல்ல முறையில் பேணிக் காக்கப்படும் எனவும், ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காவல்துறையினரின் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்டத்தில் 47வது நிகழ்ச்சியாக மாவட்ட மற்றும் கிழக்கு மாநகர கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் விழா காட்டூர் பகுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புது பானையில் பொங்கலுக்கு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
திருச்சியில் இருந்து சவுதியின் தம்மாமிற்கான நேரடி விமான சேவை இன்று முதல் துவங்கியது. திருச்சியிலிருந்து தம்மாமிற்கான நேரடி விமானம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இன்று புறப்பட்டு, சவுதி உள்ளுர் நேரப்படி காலை 08:55க்கு தம்மாம் கிங் ஃபஹத் விமான நிலையத்தில் தரையிறங்கும். மீண்டும் காலை 10:10க்கு புறப்பட்டு இந்திய நேரம் மாலை 05:40க்கு திருச்சி விமான நிலையம் வந்தடையும் என விமான நிலைய அதிகாரி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு புவியியல் துறை 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி மக்கள்தொகை அதிகமாக உள்ள மாவட்டங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்சி மாவட்ட மக்கள்தொகை 28.8 லட்சமாக உயர்ந்து, தமிழக அளவில் 5 ஆம் இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் திருச்சியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.