Tiruchirappalli

News January 17, 2025

திருச்சி: ஜல்லிக்கட்டு போட்டி முன்னேற்பாடுகள் தீவிரம்

image

திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டில் நாளை (ஜன.18) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதற்கான வாடிவாசல், தடுப்புகள் அமைத்தல், தேங்காய் நார் மூலம் மைதானத்தை நிரப்புதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை நவலூர் குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு கம்மிட்டி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

News January 17, 2025

புதிய உச்சம் தொட்ட திருச்சி விமான நிலையம்

image

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இங்கிருந்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 11-ந் தேதி மட்டும் 5,424 வெளிநாட்டு பயணிகள், 1,959 உள்நாட்டு பயணிகள் என மொத்தம் 7,383 பயணிகளை கையாண்டு திருச்சி விமான நிலையம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

News January 16, 2025

திருச்சி மாவட்ட எஸ்.பி முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட எஸ்.பி செ.செல்வநாகரத்தினம் இன்று முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளார். இதில் திருச்சி உள்ள பொதுமக்கள் தங்களது பிரச்சனைகள், பாலியல் தொடர்பான குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்குவரத்து இடையூறு பிரச்சனைகள் குறித்து திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் பொதுக்களின் உதவி மையத்தை 8939146100என்ற எண்ணில் தெரிவிக்க கூறியுள்ளார்.

News January 16, 2025

குடும்பச் சண்டையால் பெண் தற்கொலை – போலீசார் விசாரணை

image

வையம்பட்டியைச் சேர்ந்த மனோகரன் மனைவி கலைவாணி என்பவர் நேற்று அவரது கணவர் மற்றும் மகனுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியவர் இன்று காலை அருகாமையில் உள்ள தனி நபருக்கு சொந்தமான கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வையம்பட்டி போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 16, 2025

திருச்சி-மதுரை நெடுஞ்சாலை ரூ.1,692 கோடிக்கு ஏலம்

image

திருச்சியில் இருந்து மதுரைக்கு 124 கி.மீ நீளத்தில் 4 வழிச்சாலை (NH .38) அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் நேரடியாக பராமரிக்கப்பட்ட இந்த சாலையானது மத்திய அரசின் டோல்- ஆப்பரேட்- டிரான்ஸ்பர் (டி.ஓ.டி) திட்டத்தின் கீழ் ஏலம் விடப்பட்டு, ரூ.1,629 கோடிக்கு அதானி போக்குவரத்து நிறுவனம் வசம் சென்றது. தமிழகத்தில் முதன் முதலாக தனியார் வசம் சென்ற நெடுஞ்சாலை இதுவே ஆகும். இதைப் பற்றிய உங்கள் கருத்து?

News January 15, 2025

திடல் அமைக்க “3 கோடி” அரசாணை வெளியீடு

image

தைப்பொங்கல் – தமிழர் திருநாளையொட்டி புகழ்பெற்ற சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று விமரிசையாக நடைபெற்றது.அங்கு ஜல்லிக்கட்டு போட்டிக்கான நிரந்தர திடலுடன் கூடிய பல்வகை விளையாட்டுகளுக்கான அரங்கத்தை ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைத்திட திமுக அரசால் அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. அந்த அரசாணையை இன்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுமக்களிடம் காண்பித்து மகிழ்ந்தார்.

News January 15, 2025

திருச்சி: காவல் வாகனத்தை தள்ளிச்சென்ற காவலர்கள்

image

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு விழா சிறப்புடன் நிறைவு பெற்றது. இந்த விழாவிற்கு பெரும் உதவியாக இருந்த காவல்துறையினர் பாதுகாப்பு பணி முடிந்து புறப்பட்டபோது காவல்துறையின் வாகனம் பள்ளத்தில் சிக்கி நகர முடியாமல் திணறியது. அதனை அந்த காவலர்களே வாகனத்தை தள்ளிவிட்டு கடந்து சென்றனர். சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு விழா குழு சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

News January 15, 2025

13 காளைகளை அடக்கிய காளையருக்கு பரிசு

image

திருச்சி திருவெறும்பூரை அடுத்துள்ள பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 13 காளைகளை அடக்கிய நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரஞ்சித்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசாக இருசக்கர வாகனத்தை வழங்கி சிறப்பித்தார். ஜல்லிக்கட்டு வீரர்களும் பொதுமக்களும் அவரை பாராட்டினர்.

News January 15, 2025

காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயன்றவர்கள் கைது

image

துறையூர் அருகே உப்பிலியபுரத்தில் நேற்று இரவு சுமார் 12 மணியளவில் பொங்கலை முன்னிட்டு டிராஃபிக் சப் இன்ஸ்பெக்டர் அப்துல்லா சாகிப் (56) இரவு ரோந்து பணியில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அண்ணா சிலை அருகே சுமார் 7 பேர் கொண்ட கும்பல் மது போதையில் போலீசை பணி செய்வதை தடுத்து ஆபாசமாக திட்டி தாக்க முயன்றதாக தெரிகிறது. உடனே சப் இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் பேரில் 7 பேரையும் பிடித்து போலீசார் கைது செய்தனர்.

News January 15, 2025

அமைச்சரை சந்தித்த நீலகிரி எம்.பி

image

பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சர்ருமான கே.என்.நேருவின்  அலுவலகத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.பி. ராசாவை வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் நேருவின் இந்த சந்திப்பின் போது மேயர் அன்பழகன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோருடன் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!