Tiruchirappalli

News January 20, 2025

திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

திருச்சியில் உள்ள வேலை நாடுபவர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 24 ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே திருச்சியை சேர்ந்த வேலை நாடுபவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்யவும்

News January 20, 2025

திருச்சியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: ரவுடி கைது

image

திருச்சி பொன்மலைப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தங்கமணி என்கிற டேஞ்சா் மணி. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இவர் சில நாட்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் மதுபோதையில் இருந்த தங்கமணி, அவர்களது வீட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் நேற்று தங்கமணியை கைது செய்தனர்.

News January 19, 2025

வளாகத்தில் கடை அமைக்க ஆட்சியர் அழைப்பு

image

மணப்பாறை சிப்காட் வளாகத்தில் அனைத்து மாநிலங்கள், அயல் நாடுகளிலிருந்தும் 20,000 சாரண, சாரணியர் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் தங்கி இருக்கின்றனர். இவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், சிற்றுண்டி போன்ற பொருட்கள் விற்பனை செய்ய ஸ்டால்கள் வாடகைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் 9791439078 என்ற எண்ணை தொடர்பு கொள்ளமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE IT

News January 19, 2025

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற ஆட்சியர் அழைப்பு

image

மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில், 1 வருட கால ஒப்பந்த அடிப்படையில் சமூக பணி, சமூகவியல், குழந்தைகள் மேம்பாடு, மனித உரிமைகள், பொதுசுகாதாரம் ஆகியவற்றில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பதவிகளுக்கான விண்ணப்ப படிவத்தினை <>tiruchirappalli.nic.in<<>> என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News January 19, 2025

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் பறிமுதல்

image

கொழும்பிலிருந்து திருச்சிக்கு இன்று வந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் உடைமையில் வெளிநாட்டு பணத்தாள்கள் அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 4 லட்சத்து 2,697 ரூபாய் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 18, 2025

மது விற்பனையில் திருச்சி மாவட்டம் முதலிடம்

image

தமிழகத்தில் கடந்த ஆண்டு ரூ.678.65 கோடிக்கு பொங்கலை முன்னிட்டு மது விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டில் ரூ.46 கோடி அதிகமாக விற்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகை மது விற்பனையில் ரூ.179 கோடி விற்பனையுடன் திருச்சி மாவட்டம் முதலிடத்திலும், சேலம் மாவட்டம் ரூ.151.50 கோடி விற்பனையுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.142 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. COMMENT IT

News January 18, 2025

திருச்சி டைட்டல் பார்க்குக்கு சுற்றுச்சூழல் அனுமதி

image

திருச்சியில் திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் 5.58 லட்சம் சதுரடியில் ரூ.315 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படுகிறது. மேலும், தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் இந்த டைடல் பார்க் அமைய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக சுமார் 5000 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க.

News January 18, 2025

திருச்சி: வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி

image

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின இளைஞகள் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து மேலும் அவா் தெரிவித்தது: ‘உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்’ எனும் தலைப்பின் கீழ், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி பாலக்கரை பிரசன்ன மஹால் மண்டபத்தில் ஜன.20-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

News January 17, 2025

திருச்சியை சேர்ந்த 4 பேர் பலி

image

திருச்சியை சேர்ந்த 40 பேர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு ரங்கநாதன் தனியார் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை சித்தூர் அருகே நின்ற லாரி மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி நான்கு பேர் பலியாகினர். இந்த நான்கு பேரும் திருச்சி சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. உடல்கள் அடையாளம் காணப்படாததால் போலீசார் திணறி வருகின்றனர்.

News January 17, 2025

திடீரென தீ பிடித்து எரிந்த பேருந்து

image

திருப்பூரிலிருந்து- திருச்சிக்கு வந்த பேருந்து, திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது திடீரென்று இன்ஜின் கீழே தீ பற்றி எரிந்தது. பாதுகாப்பு கருதி உடனடியாக பேருந்தில் இருந்த 70க்கும் மேற்பட்ட பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர்.. பின்னர் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து தீயை அணைத்தனர். அனைவரது முயற்சியாலும் பெறும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

error: Content is protected !!