India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிதம்பரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அகலங்கநல்லூரில் நேற்று புதைக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த லால்குடி போலீசார் சடலத்தை தோண்டி எடுத்து, தடயவியல் குழுவினர் உதவியுடன் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மல்லியம் பத்து பஞ்சாயத்திற்கு உட்பட்ட வாசன் வேலி பகுதிகளில் சாலை வசதி மற்றும் காவிரி குடிநீர் பிரச்சனையால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வந்தனர். அதற்கு தீர்வு காணும் பொருட்டு இன்று நலச்சங்க உறுப்பினர்கள் மற்றும் வாசன் வேலி மக்கள் இணைந்து அமைச்சர் கே.என் நேருவை சந்தித்து சாலை வசதி வேண்டி மனு கொடுத்தனர். அமைச்சரும் பெற்றுக்கொண்டு விரைவில் தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.
ஸ்ரீரங்கம் தொகுதி இனாம்குளத்தூர் பகுதியில் பவர் ரைடர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் மாபெரும் கபாடி போட்டி வரும் பிப்.15 & 16 என இரண்டு நாட்கள், இனாம்குளத்தூர் அல் அமீன் நகரில் நடைபெற உள்ளது. இதில் முதல் பரிசு ரூ.20,000, இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.8,000, நான்காம் பரிசு ரூ.5,000 என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கபாடி வீரர்கள் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தினை முன்னிட்டு வருகின்ற 11ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள், ஹோட்டல் பார்கள் அனைத்தும் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். மேலும் அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மணப்பாறை தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வசந்தகுமார், மாராட்சி, சுதா, செழியன் மற்றும் ஜெயலட்சுமி ஆகிய ஐந்து பேர் திருச்சி மகளிர் நீதிமன்றம் நீதிபதி ஸ்ரீவட்சன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி மாராட்சி, சுதா, செழியன் மற்றும் ஜெயலட்சுமி ஆகிய நான்கு பேருக்கு பிணை வழங்கினார். குற்றவாளியான வசந்தகுமார் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் இருக்க உத்தரவு.
தொட்டியம் திருச்சி நாமக்கல் சாலையில் வாழ்வேல் புத்தூர் அருகே இன்று புள்ளிமான் சென்டர் மீடியனில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட வனத்துறை அலுவலர்கள் எடுத்து சென்று புள்ளிமான் எங்கிருந்து வந்தது, எப்படி இறந்தது உள்ளிட்ட விபரங்கள் குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். புள்ளிமான் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மணப்பாறை தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவியின் பெற்றோர் தங்களது குழந்தைக்கும் பாலியல் தொந்தரவு ஏற்பட்டதாக இன்று புகார் அளித்துள்ளனர். திங்கட்கிழமை முதல் பள்ளி வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில் மீண்டும் ஒரு புகார் பதிவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறை தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை சம்பவத்தில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் முதல்வர் ஆகிய 5 பேர் மீதும் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாளாளரின் கணவர் வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகளான மாராட்சி, செழியன், தாளாளர் சுதா ஆகிய 4 போலீசார் கைது செய்த நிலையில் தலைமறைவாக இருந்த ஜெயலட்சுமி காவல் நிலையத்தில் இன்று சரண் அடைந்தார்.
கே.கே நகர் பகுதியைச் ராமச்சந்திரன் மகன் துரைசிங்கம். திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி ஒவ்வாமை ஏற்படும் காரணமாக, பள்ளிக்கு விடுமுறை எடுத்துள்ளார். இதனால் துரைசிங்கத்தின் தாயார் பள்ளிக்குச் செல்லும்படி கூறினார். பள்ளிக்குச் செல்ல விரும்பாத துரைசிங்கம் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மணப்பாறை தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வழக்கில் விசாரணைக் குழுவினரிடம் மேலும் ஒரு மாணவி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்க எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.