Tiruchirappalli

News February 14, 2025

திருச்சி: பைக் மோதிய விபத்தில் போலீஸ்காரர் பலி

image

திருச்சி, பனமங்கலம் அருகே போலீசாரர் ரியாஸ்கான் (35) என்பவர் சாலையை கடக்க முயன்றபோது, திருச்சியில் இருந்து சமயபுரம் நோக்கி ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (31) என்பவர் ஓட்டி வந்த பைக் ரியாஸ்கான் மீது மோதியதில் பலத்த காயமடைந்து ரியாஸ்கான் உயிரிழந்தார். தற்போது இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 13, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>இங்கு<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

கணவர் கொலை: மனைவிக்கும், மாமியாருக்கும் ஆயுள் தண்டனை

image

திருவெறும்பூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரை கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி அவரது மனைவியும், மாமியாரும் வெந்நீர் ஊற்றி கொலை செய்தனர். இந்த வழக்கு முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் நேற்று (பிப்.12) விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு செல்வராஜின் மனைவி மற்றும் மாமியார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

News February 12, 2025

திருச்சி ரயில் நிலையத்தில் ஆர்.பி.எஃப் போலீஸ் சோதனை

image

திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில், ரயில்கள், ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆர்.பி.எஃப் மோப்ப நாய் படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து நேற்று இரவு சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பயணிகள் மற்றும் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து பாதுகாப்பாக பயணம் செய்ய அறிவுரை வழங்கினர்.

News February 12, 2025

துவாக்குடி: தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

துவாக்குடி தேவராயநேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, பள்ளி மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் வந்தது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் துவாக்குடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் மற்றும் மோப்பநாய் படையினரும் வந்து பள்ளி வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர். இது வெறும் புரளியாக இருக்கலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 12, 2025

திருச்சி: தைப்பூச தினத்தில் ரூ.1.17 கோடி பத்திரப்பதிவு

image

தமிழக பத்திரப்பதிவு துறையில் வருவாய் அதிகரிக்கும் வகையில், புனித நாளான தைப்பூசம் அன்று (பிப்.11) பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று (பிப்.11) திருச்சி மாவட்டத்தில் உள்ள 13 பத்திரப்பதிவு அலுவலகங்களில் மொத்தம் 135 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. அந்த வகையில் 13 அலுவலகங்களிலும் நேற்று ஒரே நாளில் ரூ.1.17 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

News February 11, 2025

தைப்பூசம்: ரயில்வே முக்கிய அறிவிப்பு

image

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு திருச்சி ரயில்வே டி ஆர் எம் அலுவலகம் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வழியாக செங்கோட்டை வரை செல்லும் விரைவு ரயிலானது (16847), செங்கோட்டையில் இருந்து திருச்சி வழியாக மயிலாடுதுறை ரயில் (16848) சுவாமிமலை ரயில்வே நிலையத்தில் 11.2.25 மற்றும் 12.2.25 ஆகிய இரண்டு நாட்கள் ஒரு நிமிடம் நிற்கும் என்று கூறப்பட்டுள்ளது.

News February 11, 2025

திருச்சி: பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று செயல்படும்

image

அசையா சொத்து பத்திரப் பதிவுகளை மங்களகரமான நாட்களில் செய்ய மக்கள் விரும்புகின்றனர். எனவே பொது விடுமுறை நாளான இன்று (பிப்.11) தைப்பூசம் நாளில் பத்திரப்பதிவு செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் திருச்சியில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்கள் இன்று காலை 10 மணியில் இருந்து பத்திரப்பதிவு முடியும் வரை செயல்படும் என பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News February 11, 2025

இந்திய ராணுவத்தில் சேர ஆட்சேர்ப்பு பேரணி

image

5.2.2025 முதல் 15.2.2025 வரை இந்திய ராணுவத்தில் சேர ஆட்சேர்ப்பு பேரணி,காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா விளையாட்டு திடலில் நடைபெற உள்ளது.இதில்,சிப்பாய், மருத்துவ உதவியாளர் காலி இடங்களுக்கு 2024 பிப்ரவரி மாதத்தில் வெளியான அறிக்கை வாயிலாக நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.இது தொடர்பான தகவல்களுக்கு 0431-2413510 என்ற எண்ணை தொடர்பு கொள்ள ஆட்சியர் இன்று தெரிவித்தார்.

News February 11, 2025

திருச்சி: வெளிநாட்டு பணம் பறிமுதல்

image

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் இன்று 10.02.25 திருச்சி விமான நிலையம் வந்த பெண் பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் ₹.3.95 லட்சம் மதிப்புடைய 271 வெளிநாட்டு நோட்டுகள் மற்றும் ₹.4.50 லட்சம் இந்திய ரூபாய் என ₹.8.45 லட்சம் பணத்தை உரிய அனுமதியின்றி எடுத்து வந்தது தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!