Tiruchirappalli

News February 22, 2025

தர்கா இடத்தை அபகரிக்கும் முயற்சி

image

திருச்சி தென்னூரில் மீர் ஹசனுல்லா ஷா தர்காவிற்கு சொந்தமான வக்ஃபு நிலத்தைப் பூங்கா அமைப்பதாக கூறி வக்ஃபு தீர்ப்பாய உத்தரவை மீறி திருச்சி மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பது கண்டனத்துக்குரியது. தர்கா இடத்தை மாநகராட்சி மூலம் அபகரிக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தை தர்கா நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.

News February 22, 2025

பாதயாத்திரைக்கு சென்றவர் பலி

image

கீழப்பளுவஞ்சியை சேர்ந்த வெள்ளையம்மாள். இவர் இதே பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்டவர்களுடன் இன்று மாலை அணிந்து சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற போது பஞ்சப்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வெள்ளையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிந்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 22, 2025

நியாய விலை கடை ஒரு நாள் விடுமுறை

image

தொட்டியம் தாலுகாவில் இயங்கும் நியாய விலை கடை இன்று ஒரு நாள் விடுமுறை என்று வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்குமார் இன்று. தெரிவித்துள்ளார். பொங்கல் தொகுப்பு வழங்கியதற்கு கடந்த 10 ஆம் தேதி பணி செய்தால் இன்று நியாய விலை கடை ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை என்பதால் நியாய விலை கடை இயங்காது என்று செய்தியில் தெரிவித்துள்ளார்

News February 22, 2025

முக்கொம்பு பகுதியில் பிடிபட்ட முதலை

image

முக்கொம்பு, கொடியாளம் கிராமம் திண்டுகரை பகுதியில் பதுங்கியிருந்த முதலையை நேற்று பிடித்து கண்காணிப்பில் வைப்பட்டு, பிறகு அந்த முதலை பாதுகாப்பான வாழ்விடத்தில் விடப்பட்டது. தற்சமயம் ஆறுகளில் நீரோட்டம் குறைந்து வருவதால் ஆறு மற்றும் வாய்க்கால்களில் உள்ள முதலைகள் அடிக்கடி வெளியே வருவது வழக்கமாக உள்ளது. ஆகையால் எங்காவது முதலை தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

News February 21, 2025

மீண்டும் ஒரு மொழிப்போர்-அமைச்சர் மகேஷ் எச்சரிக்கை

image

பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டம் குறித்து ஆராயும் போது அதில் புதிய கல்வித் கொள்கைகள் புகுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி இடைநிற்றலை 16 சதவிகித்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்துள்ளோம். மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாக ஒன்றிய அரசு காரணமாக இருக்கக் கூடாது. பி.எம்.ஸ்ரீ பள்ளி போன்ற திட்டங்களை கொண்டு வந்தோம் என மத்திய அமைச்சரின் கருத்து ஏற்புடையது அல்ல என அமைச்சர் அன்பில் தெரிவித்துள்ளார்.

News February 21, 2025

திருச்சி: பரபரப்பாகும் தமிழ் வாழ்க போஸ்டர்

image

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு இன்று திருச்சி மாநகரத்தின் தென்னூர், தில்லைநகர், புத்தூர், உறையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ் வாழ்க என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் ஹிந்தி எழுத்துக்களால் எழுதப்பட்டவை அடிக்கப்பட்டு மேலே தமிழ் வாழ்க என்ற போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளது.

News February 21, 2025

வீடு மனை தோஷங்களை நீக்கும் மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி!

image

திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் மன்னச்சநல்லூரில் அமைந்துள்ளது பூமிநாத சுவாமி கோயில். இங்கு சிவபெருமான் வாஸ்து கடவுளாக அருள்பாலிக்கிறார். சொந்த வீடு வாங்க,புதிய வீடு கட்டுமானம் தொடங்கியதும் வாஸ்து குறைகளால் ஏற்படும் தடங்கள்,நிலம் மனை விற்பதில் தடை,சொத்து வழக்கு பிரச்சனை உள்ளிட்ட 16 விதமான மண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வதற்கு சக்தி வாய்ந்த ஸ்தலமாக இது விளங்குகிறது.

News February 21, 2025

திருச்சி காவல் ஆணையர் தலைமையில் உறுதிமொழி

image

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு திருச்சி காவல் ஆணையர் தலைமையில், உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம். தமிழோசை உலகமெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். வளர்ப்போம் எனக் கூறப்பட்டது.

News February 21, 2025

வெளிநாட்டு வேலை மோசடி: காவல்துறை எச்சரிக்கை

image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் பற்றி திருச்சி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் முகவர்களால் வழங்கப்படும் விசாவை சரி பார்த்து, உன் விசாரணையோடு அணுக கூறியுள்ளது. மேலும் புகார் தெரிவிக்க 8939146100 தொலைபேசி எண்களை தொடர்புகொண்டோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குற்றப்பிரிவு (District Crime Branch) அலுவலகத்தில் நேரடியாகவோ புகார் தெரிவிக்கலாம்.

News February 21, 2025

வீட்டிற்குள் சடலமாக கிடந்த பெயிண்டர்

image

தெற்கு காட்டூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் ஜனகராஜ் (40) என்பவர் இருந்த வாடகை வீட்டின் கதவு கடந்த 2 நாட்களாக உள்பக்கமாக பூட்டப்பட்ட நிலையிலிருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் செல்வராஜ் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜனகராஜ் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!