India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அண்மையில் நில மோசடி வழக்குகள் அதிகமாகி வரும் நிலையில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்ட காவல் துறை இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் நில மோசடியை தவிர்க்க, நிலம் வாங்கும் முன் சொத்தின் கடந்த 20 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றிதழை (Encumbrance certificate) பெற்று, அதை முழுமையாக சரி பார்த்துக்கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது…
ரயில்வே தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படுகின்றன. அதன்படி, எர்ணாகுளம் – கண்ணூர், திருச்சி – திருவனந்தபுரம், திருவனந்தபுரம் – குருவாயூர் (பெட்டி எண்- 16305, 22627, 16342) இடையே இயக்கப்படும் விரைவு ரயில்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 18ஆம் தேதி வரை கூடுதலாக 2ஆம் வகுப்பு பொதுப் பெட்டி சேர்க்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீ ரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் என பல்வேறு பிரசித்த பெற்ற தளங்கள் அமைந்துள்ளன. அந்த வரிசையில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலும் அடங்கும். சுமார் 1,800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலானது சுமார் 275 பாடல் பெற்ற தலமாகவும், ‘பஞ்ச பூத ஸ்தலங்களில்’ ஒன்றாகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கது. SHARE NOW!
திருச்சி கௌத்தரசநல்லூர் வயல் பகுதியில் கடந்த மே மாதம் ஆடு மேய்த்து கொண்டிருந்த 11 வயது சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த சின்னதம்பி, மதன் குமார் ஆகியோர் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட சின்னத்தம்பி, மதன் குமார் இருவர் மீது எஸ் பி உத்தரவின் படி இன்று குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட்டது.
கவிஞர் நந்தலாலா ஓசூர் அருகில் உள்ள நாராயணா இருதய சிகிச்சை மருத்துவமனையில் பை பாஸ் ஆபரேஷன் செய்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த நிலையில் இன்று காலை இயற்கை எய்தினார். அவரது உடல் இன்று இரவு திருச்சி வந்து சேரும். நாளை இறுதிக் காரியங்கள் நடைபெறும். பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகர் பகுதியில் உள்ள அவரது குடியிருப்பில் வைக்கப்படும்.
திருச்சி வயலூர் சாலையில் வசித்து வந்த பிரபல பட்டிமன்ற பேச்சாளர் இலக்கியவாதி கவிஞர் நந்தலாலா சற்றுமுன் உடல் நலக்குறைவால் பெங்களூர் மருத்துவமனையில் காலமானார். அவரது இறப்புக்கு அரசியல்வாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் இன்று இரவு திருச்சிக்கு எடுத்து வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நேற்று தொடங்கியது. இதில் திருச்சி மாவட்டத்தில் தேர்வு எழுத மொத்தம் 31,337 மாணவர்கள், மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். முதல் நாளான நேற்று நடைபெற்ற தமிழ் தேர்வை 31,075 மாணவர்கள், மாணவிகள் எழுதியுள்ளனர். 262 பேர் தேர்வு எழுதவில்லை. தனித்தேர்வர்களில் 323 பேர் விண்ணப்பித்ததில் 290 பேர் எழுதினர். 33 பேர் தேர்வு எழுதாத நிலையில் மொத்தமாக 295 பேர் ஆப்சண்ட் ஆகியுள்ளனர்.
வீட்டை பூட்டிவிட்டு நீண்ட நாட்கள் வெளியூர் செல்லுவோர் குறித்து காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வெளியே செல்வோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவும். பணம், நகை போன்ற பொருட்களை வங்கி லாக்கரில் வைத்துவிட்டு செல்வது பாதுகாப்பானது. சாவியை வீட்டில் உள்ள இடங்களிலேயே வைத்துவிட்டு செல்வதை தவிர்க்கவும் என்று பொது மக்களுக்கு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000/- வீதம் பண முடிப்பு வழங்க உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவத்தை www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் ஏப்ரல் 15 விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் ஆட்சியர் என்று அறிவித்துள்ளார்
திருச்சி மாவட்டத்தில் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை வரும் மே 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.