Tiruchirappalli

News March 7, 2025

திருச்சி காவல்துறை எச்சரிக்கை

image

முதலீடுகள் செய்யும்போது எச்சரிக்கையுடன் இருக்க திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், முதலீடு செய்யும் நிதி நிறுவனம் RBI-யால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும். அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களின் பெயர்கள், முகவரி RBI-ன் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும். டெபாசிட் செய்ய பரிசு பொருட்கள் தரும் நிறுவனங்கள் போலியானவை என்பதை நினைவில் கொள்ள கூறியுள்ளது.

News March 7, 2025

திருச்சி விமான பயணிகளுக்கு ஓர் நற்செய்தி

image

திருச்சி எம்.பி துரைவைகோ கடந்த (பிப்.14) டெல்லி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிலைய அதிகாரிகளை சந்தித்து திருச்சி -மும்பைக்கு நேரடி விமான சேவையை கேட்டிருந்தார். அதன்படி வரும் மார்ச் 30ந்தேதி முதல் தினசரி திருச்சி -மும்பை விமான போக்குவரத்து இரவு 10:30 மணிக்கு மும்பையிலிருந்து இரவு12:35 க்கு திருச்சிக்கு வரும், பின்னர் இரவு 01:05க்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு அதிகாலை 03:10 க்கு மும்பை சேர உள்ளது.

News March 6, 2025

துறையூரை சேர்ந்த பெண் ஏற்காட்டில் கொலை

image

துறையூர் பகுதியை சேர்ந்தவர் அல்பியா (32). இவரும் அப்துல் ஹபீஸ் (22) என்ற நபரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில்  ஹபீஸுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அல்பியா தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு வறுபுறுத்தியதால் அவரை ஏற்காடு பகுதிக்கு அழைத்து சென்று தனது 2 தோழிகள் உதவியுடன் ஹபீஸ் கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

News March 6, 2025

திருச்சி: நீட் தேர்விற்கு நாளையே கடைசி நாள்

image

MBBS, BDS படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயம். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை தேசிய தேர்வு நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இதற்கு விண்ணப்பிதற்க்கான கடைசி நாள் நாளை இரவு 11.50 மணி வரை மட்டுமே. எனவே விண்ணப்பிக்காத மாணவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தேர்வு மே மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

News March 6, 2025

திருச்சியில் “ChatGPT”: இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு

image

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன நடத்தும் ஒருநாள் பயிற்சி வகுப்பு. இதில் தொழில்முனைவோருக்கான “ChatGPT”பயிற்சி வகுப்பு வரும் மார்ச் 08 ஆம் தேதி அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற உள்ளது. தொழில்முனைவோர். சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் இந்த பயிற்சி வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

News March 6, 2025

வங்கி மோசடி : திருச்சி காவல்துறை எச்சரிக்கை

image

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி KYC புதுப்பிப்பதற்காக வங்கிக் கணக்கு விபரம், OTP, கடவுச்சொற்கள் போன்றவற்றை கேட்டால் கொடுக்க வேண்டாம் என திருச்சி காவல்துறை இன்று அறிவித்துள்ளது. மேலும் அவர்கள் சைபர் குற்றவாளிகளாக இருக்கலாம். எந்த ஒரு வங்கியில் இருந்தும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு KYC விபரங்கள் கேட்கமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவும், சைபர் குற்றங்கள் புகார்கள் தெரிவிக்க அழைக்க 1930 கூறியுள்ளது.

News March 5, 2025

பேருந்து நிலையத்திற்குள் பயணியிடம் கைவரிசை – நான்கு பேர் கைது

image

புதுவாடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா நேற்று மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து தனது ஊருக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறிய போது மர்ம நபர் ஒருவர் இவரது பாக்கெட்டில் பணத்தை எடுப்பதைப் பார்த்து திருடன் திருடன் என கத்தினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து அவனுடன் சேர்ந்த மேலும் மூன்று நபர்களை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

News March 5, 2025

திருச்சி: சமணத் துறவி தவமிருந்த ஊர்

image

திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் ‘சிரா’ என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. இந்த “சிரா” துறவியின் பள்ளியான ‘சிராப்பள்ளி’ என்றாகி அதுவே காலப்போக்கில் திருச்சிராப்பள்ளி என அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..

News March 5, 2025

திருச்சியில் 32,094பேர் பிளஸ்-1 தேர்வு

image

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-1 தேர்வு தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 106அரசு பள்ளிகள், 71அரசு உதவி பெறும் பள்ளிகள் 81தனியார் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 258பள்ளிகளிலிருந்து 15,357மாணவர்களும், 16,737மாணவிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை பெற்று 392மாணவர்களும் தனித்தேர்வர்களாக 271மாணவர்களும், 176மாணவிகளும் தேர்வு எழுத உள்ளார்கள்.

News March 5, 2025

நில மோசடியை தவிர்க்க காவல்துறை எச்சரிக்கை

image

அண்மையில் நில மோசடி வழக்குகள் அதிகமாகி வரும் நிலையில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்ட காவல் துறை இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் நில மோசடியை தவிர்க்க, நிலம் வாங்கும் முன் சொத்தின் கடந்த 20 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றிதழை (Encumbrance certificate) பெற்று, அதை முழுமையாக சரி பார்த்துக்கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது…

error: Content is protected !!