India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில், நேற்று 104 டிகிரி வெயில் வெளுத்து வாங்கியது. வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமல் தவியாய் தவித்தனர். மேலும் சாலைகளில் செல்வோர், குடை பிடித்த படியும் துணிகளால் முகத்தை மூடிய படியும் சென்றனர். இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர் .திருச்சி மாநகரின் சாலைகளில் போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியில் வந்தனர்.
திருச்சியில், நேற்று 104 டிகிரி வெயில் வெளுத்து வாங்கியது. வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமல் தவியாய் தவித்தனர். மேலும் சாலைகளில் செல்வோர், குடை பிடித்த படியும் துணிகளால் முகத்தை மூடிய படியும் சென்றனர். இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர் .திருச்சி மாநகரின் சாலைகளில் போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியில் வந்தனர்.
திருச்சி ரயில்வே கோட்டத்தில், ஒப்பந்த அடிப்படையில் முன்னாள் ராணுவ வீரர்கள் ரயில்வே கேட் கீப்பர் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரயில்வே கேட் களை இயக்குதல் மற்றும் பராமரித்தல் குறித்த அடிப்படை பயிற்சி வகுப்பு திருச்சி குட்செட் பகுதியில் உள்ள, ரயில்வே கேட் பகுதியில் ,நேற்று. நடைபெற்றது .அப்போது புதிதாக தேர்வானவர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் இன்று தற்போது பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது.
துவரங்குறிச்சி அருகே திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யாகபுரம் என்ற இடத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மணப்பாறை யூனியன் அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரியும் விஜயலட்சுமி மற்றும் அவரது கணவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவெறும்பூர் அருகே காட்டூர் அண்ணா நகர் குருவி மண்டபம் பகுதியில் போதை மாத்திரை இருப்பதாக திருச்சி எஸ்பி தனிப்படை போலீசருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர், ரியாஸ்கான் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது அரியமங்கலத்தை சேர்ந்த நஸ்ருதீன் போதை மாத்திரைகளை விற்றது தெரிந்தது. அவரிடமிருந்து 26,250 மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, நஸ்ருதீனை கைது செய்தனர்.
மருங்காபுரி அருகே திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யாகபுரம் என்ற இடத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் காயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் உயிரிழந்த இருவரின் உடல்களை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை.
திருச்சியில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர்,திருச்சி,அரியலூர் மாவட்டங்களில் நேற்றும் இன்றும் வெப்ப அலை வீசக் கூடும் . எனவே பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்து பகல் 12 மணிக்கு மேல் வெளியில் செல்ல வேண்டாம் என்று திருச்சி மாவட்ட மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ் தலைமை வகித்து பேசியதாவது, திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கூட்டங்கள் மாநகர் பகுதியில் தனித்தனியாக வரும் ஜூன் 3ந்தேதிக்குள் நடத்த வேண்டும். இதில், பல்வேறு பிரிவுகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
சோமரசன் பேட்டை லிங்கம்(55). இவர் நாடார் சத்திரத்தில் பழக்கடை நடத்தி வருகிறார்.இவரது மனைவி கொடிமலர்(48). இவர்களுக்கு ராஜ குமரன் என்ற மகன் உள்ளார். நேற்று காலையில் பழம் வாங்க சென்று விட்டு, வீடு திரும்பியபோது கொடி மலர் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணையில் காதலுக்கு குறுக்கே நின்றதால் மகனே தாயை கொன்றது தெரியவந்ததையடுத்து போலீசார் ராஜகுமாரனை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.