India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் நேற்று (ஏப்.25) 104 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மே 1ஆம் தேதி முதல் திருச்சியில் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
காவிரியின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் திருவானைக்காவல் ஜம்புகேசுவர்ர கோவில் பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாகும். 60ஆவது தேவரப்பாடல் பெற்ற இத்தலத்தில் புராணகாலத்தில் வெண்நாவல் மரங்கள் நிறைந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கவேரி வறண்டிருந்தாலும், மூலவர் இருக்கும் இடத்திற்கு கீழ் தண்ணீர் கசிவு இருந்து கொண்டே இருக்கும். சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோவிலில் 156 கல்வெட்டுகள் இதுவரை கிடைத்துள்ளன
மண்ணச்சநல்லூர் அருகே கீழக்கருங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (32). இவர் சொந்தமாக முறுக்கு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் பலரிடம் கடன் வாங்கி, பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முசிறி மேல தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி தேர் வீதி உலா நேற்று நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ அம்மனை சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள செய்தனர். பின்னர் வேல் மற்றும் கரகத்துடன் முசிறி நகரின் முக்கிய வீதி வழியாக தேரில் அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாவித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பானது, மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக இந்திய அஞ்சல் துறை,திருச்சி கோட்டத்தின் இணைந்து ஆதார் பதிவு, திருத்தம் சேவை முகாமினை தனது கல்லூரி வளாகத்தில் கடந்த 3 நாட்களாக நடத்தியது.இறுதி நாளான இன்று புதிய ஆதார் பதிவு செய்தல், முகவரி (ம)புகைப்பட மாற்றம், கைவிரல் ரேகை திருத்தம் பணி நடைபெற்றது.
திருச்சி, கொடைக்கானல் பகுதியில் சார் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் சார் பதிவாளர் ஜானகிராமன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேத்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமனுக்கு ஐந்தாண்டு தண்டனையும் மற்றும் அவருடைய ரூ.100 கோடி மதிப்புடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவும் ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் அப்பகுதி பொதுமக்களிடம் பலகார சீட்டு, சிறுசேமிப்பு சீட்டு நடத்தி சுமார் 1 கோடி அளவில் பணம் வசூலித்துள்ளார்.இந்நிலையில் சீட்டு கட்டிய சிலர் பணத்தை திருப்பி கேட்டனர்.பணம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் மன விரக்தியில் இருந்த ராஜா நேற்று பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். தேர்வுகள் நடைபெறும் பள்ளி கல்லூரிகளுக்கு இது பொருந்தாது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் இன்று தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக தமிழகத்தில் உள்ள பொதுப்பணித்துறை, பஞ்சாயத்து ஏரி குளங்களையும், தூர்வாரி தடுப்பணைகளை புனரமைக்கப்பட வேண்டும். இலவச விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவினை முன்னிட்டு, வருகின்ற 06.05.2024 திங்கட்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக வருகின்ற 29.6.2024 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் பள்ளி,கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.