Tiruchirappalli

News April 27, 2024

செல்போன் வாங்க பணம் தராததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

பழையூரை சேர்ந்த கார்த்திக் (25) தனது தந்தையிடம் செல்போன் வாங்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கார்த்திக் கடந்த 23ஆம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். பின் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 27, 2024

திருச்சி விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

image

முக்கிய விமான நிலையங்களுக்கு நேற்று மர்மநபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி விமான நிலையத்தில் இன்று முதல் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் தீவிர சோதனை நடந்து வரும் நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை இந்த சோதனை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 27, 2024

திருச்சியில் வீசும் வெப்ப அலையால் மக்கள் அவதி,

image

திருச்சியில் வீசும் வெப்ப அலையால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். காலை பொழுதே கடும் வெப்பத்துடன் தான் விடிகிறது .பகல் 11 மணி முதல் மதியம் மூன்று மணி வரை வெப்ப அலை வீசுகிறது. மாநகர பஸ்களில் பயணிக்கும் பயணிகள் வியர்வையில் குளித்தபடி செல்வதை நேற்று காண முடிந்தது. மேலும் வாகன ஓட்டி களுக்காக ,சிக்னல்களில் துணி பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியில் செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர்.

News April 27, 2024

திருச்சி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

திருச்சியில் நேற்று (ஏப்.26) 104.18 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று திருச்சி மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் திருச்சி மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 27, 2024

திருச்சி:பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது

image

திருச்சி கருமண்டபம் நகரில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக புகார் வந்தது, இதை அடுத்து கன்டோன்மென்ட் போலீசார், நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில், திருப்பத்தூரை சேர்ந்த செந்தில்குமார் (48) மூன்று பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசாரின் அறிக்கையை புலனாய்வு செய்த கமிஷனர் காமினி செந்தில்குமாரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

News April 27, 2024

திருச்சி அருகே சித்திரை தேர் திருவிழா

image

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, நேற்று தேரில் முகூர்த்தக்கால் நடு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்தகாலில், புனித நீர் தெளித்து மங்களப் பொருட்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து, முகூர்த்த கால் நடப்பட்டது.

News April 26, 2024

திருச்சி: விபத்தில் 2 பேர் மரணம்

image

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள பாத்திமா நகர் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்தில் இரண்டு பேர் இன்று உயிரிழந்தனர். திருவள்ளூரை சேர்ந்த கணேஷ்பாபு(58), சென்னையை சேர்ந்த ரவி(47) ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். மேலும் பாலமுருகன்(44), மதன்குமார்(42) ஆகியோர் படுகாயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News April 26, 2024

திருச்சி: நர்சிங் மாணவி மாயம் 

image

மணப்பாறையை அடுத்த கருத்த கோடாங்கிபட்டியை சேர்ந்த பழனிச்சாமி. இவருக்கு அனிதா, ஜோதிகா என்ற 2 மகள்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகள் ஜோதிகா மணப்பாறை ஜெயம் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதிகா நேற்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதையறிந்த மணப்பாறை இன்று போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News April 26, 2024

திருச்சியில் லாரி மோதி வாலிபர் பலி.!

image

திருச்சி அண்ணா சிலை சிந்தாமணி அருகே இன்று செல்வராஜ் என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.அப்போது, திருச்சியில் சிமெண்ட் இறக்கிவிட்டு கண்டெய்னர் லாரி ஒன்று உசிலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக டூவீலரில் மோதியது. இதில் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே வாலிபர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 26, 2024

2ம் கட்ட தண்ணீர் பந்தல் திறப்பு விழா அழைப்பு

image

திருச்சி அதிமுக மாஜி அமைச்சர்
மு.பரஞ்சோதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியில் கோடைகால தண்ணீர் பந்தல் 2ம் கட்டமாக நாளை  ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியிலும், 28ம் தேதி மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியிலும், 29ம் தேதி துறையூர் சட்டமன்ற தொகுதியிலும், மே1ம் தேதி முசிறி சட்டமன்ற தொகுதியில் திறக்கப்பட உள்ளதால், இதில் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!