India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி – கொச்சி விமான சேவை வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி மே.7ஆம் தேதி முதல் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சி – கொச்சி இடையே தினசரி விமான சேவையை தொடங்க உள்ளது. திருச்சியில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு கொச்சி சென்றடையும். கொச்சியிலிருந்து மதியம் 1:40க்கு புறப்பட்டு மதியம் 2:40க்கு திருச்சி வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காலியாக உள்ள Seaman, Greaser, Tradesman போன்ற 14 குரூப்-சி காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.18000 முதல் ரூ.56900 வரை வழங்கப்படும். 10 th, ஐ.டி.ஐ முடித்த 18 – 25 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு www.cbic.gov.in என்ற இணையத்தை பார்க்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE செய்யவும்!
சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட கட்டுமான சங்க மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தவர் பூமாலை (53). இவர் கடந்த ஏப்.29 தனது டூவீலரில் துறையூர்-திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் பூமாலை டூவீலர் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த பூமாலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சியில் சமீப காலமாக கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருச்சி அருகே ஆளவந்தான்நல்லூரை சேர்ந்த பவுல்ராஜ் என்பவர் ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்து செலவு செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கள்ளநோட்டு அச்சிட அவர் பயன்படுத்திய பிரிண்டர், ஸ்மார்ட் போன், இங்க் பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திருச்சியில் சமீப காலமாக கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருச்சி அருகே ஆளவந்தான்நல்லூரை சேர்ந்த பவுல்ராஜ் என்பவர் ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்து செலவு செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கள்ளநோட்டு அச்சிட அவர் பயன்படுத்திய பிரிண்டர், ஸ்மார்ட் போன், இங்க் பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வரத்தினம் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், சமயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபரின் டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இதுபோல பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என அவர் எச்சரித்துள்ளார்.
திருச்சி மாநகரில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022 முதல் 28.04.2025 வரை 767 கால்நடைகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.19,88,500 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 51 கால்நடைகள் ஏலம் விடப்பட்டதன் மூலம் ரூ.3.45 லட்சம் கிடைத்துள்ளது. மொத்தத்தில் மாநகராட்சிக்கு ரூ.23,33,500 வருவாய் கிடைத்துள்ளது.
மத்திய பொதுத்துறை நிறுவனமான யூனியன் வங்கியில் உதவி மேனேஜர் பதவிக்கான 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் பட்டப்படிப்புடன் கூடிய CA/CS/CMA முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் www.unionbankofindia.co.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பேங்க் வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்!
பராமரிப்பு பணிகள் காரணமாக பாலக்காடு – திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக பாலக்காடு – திருச்சி தினசரி ரயில் மே.2ஆம் தேதி குளித்தலை – திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினம் குளித்தலை – திருச்சி இடையே முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Executive பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000-ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <
Sorry, no posts matched your criteria.