India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி உய்யக்கொண்டான் திருமலையை சேர்ந்த லோகநாதன் (35).இவர் நேற்று அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சேக் தாவூத் பீமா நகரை சேர்ந்த ரஞ்சித் குமார் லோகநாதனிடம் பணம் கேட்டுள்ளனர். லோகநாதன் மறுத்ததையடுத்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
திருச்சி மத்திய சிறை வளாக நுழைவாயில் அருகே உள்ள இடத்தில் பெட்ரோல் பங்க் கட்டுமானங்களுக்கு சுமார் 300 சதுரஅடி பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.1.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில் 20 ஆயிரம் லிட்டர் பெட்ரோல்,20 ஆயிரம் லிட்டர் டீசல் கொள்ளளவு உள்ள டேங்க்குகள் வைக்கப்பட உள்ளது.இதனை,கண்காணிக்க ஆண் சிறை கைதிகளே 3 சுழற்சி முறையில் பணியமர்த்த படுவார்கள்.இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அஞ்சல் வாக்குகளை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு, வாக்குகளை பிரித்து அனுப்பும் பணியில் தீவிரம் அடைந்துள்ளனர்.
திருச்சி தென்னக ரயில்வே நிர்வாக கோட்டம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருச்சி உத்தமர்கோவில் ரயில் நிறுத்தத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதனால்,திருச்சி– திருப்பாதிரிப்புலியூர் டெமு ரயில், திருச்சி-விருத்தாசலம் டெமு சிறப்பு ரயில்கள் (29.04.2024) முதல் 01.05.2024 வரை 3 நாட்கள் உத்தமர்கோவில் ரயில் நிறுத்தத்தில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் நேற்று (ஏப்.29) 104.54 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் திருச்சி மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்.
அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடைகள் தயாரித்து வழங்கும் பணியில் திருச்சி மாவட்ட 3 கூட்டுறவு சங்கங்களில் உள்ள பெண் தையல் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்தாண்டு சீருடை தயாரிக்கும் பணியை தனியாா் நிறுவனங்களுக்கு வழங்குவதைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெண் தையல் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியரகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடைகள் தயாரித்து வழங்கும் பணியில் திருச்சி மாவட்ட 3 கூட்டுறவு சங்கங்களில் உள்ள பெண் தையல் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்தாண்டு சீருடை தயாரிக்கும் பணியை தனியாா் நிறுவனங்களுக்கு வழங்குவதைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெண் தையல் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியரகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
திருச்சி பயணிகளின் வசதிக்காக மன்னார்குடி பக்தி கோதி ரயில் பெட்டிகள் நவீன மயமாக்கப்பட்டுள்ளது என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் எண் 22 673 சூப்பர் பாஸ்ட் வாராந்திர எக்ஸ்பிரஸ் ஏப் 29ஆம் தேதி முதல். ரயில் பெட்டிகளில் படுக்கை வசதிகள் .ரயில் செல்லும் வேகம் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் இருக்கைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று தென்னக ரயில்வே நேற்று அறிவித்தது.
திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மதியம் 1 மணிக்கு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து உஷாரான விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியம் உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருச்சி விமான நிலையம் முழுவதும் சோதனை செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் மதுரை, தஞ்சை, கரூர், சேலம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் சென்னை- தஞ்சை பகுதிகளுக்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவறையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.