India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி நச்சிலிப்பட்டியைச் சேர்ந்த வசந்தா(55) கடந்த 3ம் தேதி தனது வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார்.அப்போது திடீரென அவரது ஆடையில் தீ பற்றியது.பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி ஜிஹெச்இல் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உப்பிலியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெண் காவலர்கள் குறித்து, அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோயம்புத்தூர் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று நண்பர்கள் 12 மணி அளவில் திருச்சி மாவட்ட கூடுதல் மகிலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார். எனவே கோயம்புத்தூரில் இருந்து வாகன மூலம் பெண் காவலர்கள் சவுக்கு சங்கரை இன்று திருச்சி அழைத்து வந்தனர்.
திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று விருந்து உபசரிப்பு நடைபெற்றது. இதற்காக இரண்டுக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகளை கொண்டு சமையல் பணி நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தீயை அணைத்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
திருச்சி காட்டூரில் உள்ள 2 ஆவின் பால் விற்பனை நிலையங்களை அதன் உரிமையாளர்கள் நேற்று திறக்க வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து உள்ளே சென்று பாா்த்தபோது, கடைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.20ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதையறிந்த திருவெறும்பூர் போலீஸாா் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ என்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.இந்த பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் பாஜகவிற்கு எதிராக மக்கள் தீர்ப்பளிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மேலும் மேலும் பிரகாசமாகிக் கொண்டே வருகிறது.அது மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறது என்பது உறுதியாகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சியில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் விபரத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். அதில் அரசு பள்ளிகள் 6 ஆதிதிராவிடர் நல பள்ளி 1, பழங்குடியினர் நலப் பள்ளிகள் 1,நிதி உதவி பெறும் பள்ளிகள் 8,பகுதி நிதி உதவி பெறும் பள்ளிகள் 8, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 1, சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் 44 என மொத்தம்69 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை திருச்சி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திருச்சி மாவட்டம் 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 90.41% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 85.56 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.70 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி திருச்சி மாவட்டத்தில் மாணவர்கள் 90.31% பேரும், மாணவியர் 97.25% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 94.00% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
திருச்சி விமான நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையில் 23-24-ம் நிதியாண்டில் 13.05 லட்சமாக இருந்தது.இதுதற்போது 15.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே 22-23-ம் ஆண்டு காலகட்டத்தில் 3.80 லட்சமாக இருந்தது.23-24 நிதியாண்டில் திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் ஒட்டுமொத்த அதிகரிப்பு 16.5% ஆக சாதனை படைத்து இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.