Tiruchirappalli

News July 2, 2024

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

ஆதிதிராவிடர் நல துறையின் கீழ் செயல்படும் துறையூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள 1 பொருளியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படவுள்ளது. எனவே இதற்கு விண்ணப்பிப்பவர்கள் வரும் 8ஆம் தேதி மாலை 5 மணிக்குள் திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.

News July 2, 2024

திருச்சிக்கு கூடுதல் விமானங்களை இயக்க வலியுறுத்தல்

image

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடுவை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் துரைவைகோ, அருண்நேரு, ஜோதிமணி, முரசொலி மற்றும் மாநிலங்களவை உறுப்பினா் அப்துல்லா ஆகியோர் திருச்சி விமான நிலையத்தில் விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை நேற்று வழங்கினர். இதற்கு அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.

News July 1, 2024

திருச்சி: பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் ரத்து

image

திருச்சி ரயில்வே கோட்ட நிறுவனம் நேற்று அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மானாமதுரை-ராமநாதபுரம் பிரிவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சி-ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் மானாமதுரையோடு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதன்படி  இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் திருச்சி-ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் மானாமதுரையோடு ரத்து செய்யப்படுகிறது.

News July 1, 2024

கரும்பு சாகுபடி: வேளாண்துறை அறிவுறுத்தல்

image

1.கரும்பு நடுவதற்கு முன் குளத்து மண் இட்டால் அதிக மகசூல் பெறலாம்; 2.ஆட்டு புழுக்கையை உரமாக பயன்படுத்தினால் சக்கரை தன்மை அதிகரிக்கும்; 3.கரும்பு வளர வளர சோகையை உரிப்பதால் செதில், மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 4. அடிக்கடி நீர் பாச்சுவதால் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 5. பயிர் செய்து 3 மாதங்களில் சூளை சாம்பல், வேப்பங்கொட்டை தண்ணீர் தெளித்தால் இளந்தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.

News June 29, 2024

சத்திரம் அருகே காவலருக்கு அரிவாள் வெட்டு

image

திருச்சி கலைஞர் அறிவாலயம் பகுதியில் இன்று காலை மர்ம நபர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக வந்த தகவலையடுத்து, கோட்டை காவல் நிலைய காவலர் அப்துல் காதர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இந்நிலையில் போலீசார் அண்ணாசிலை அருகே சென்ற போது மூன்று ரௌடிகளில் ஒருவன், அப்துல் காதர் வலது கன்னத்தில் வெட்டினான்.இதில் அவர் காயமடைந்தார்.இத்தாக்குதலில் ஈடுபட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

News June 29, 2024

விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் தனியார் காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்யலாம் என ஆட்சியர் பிரதீப் குமார் நேற்று அறிவித்துள்ளார். எனவே விவசாயிகள் www.pmfby.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

News June 28, 2024

வார்னிங் கொடுத்த திருச்சி கமிஷனர்

image

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இரவு காவல் பணியில் அசால்ட்டாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 88 பேருக்கு வார்னிங் மெமோ கொடுத்து நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கை ஒரு எச்சரிக்கையாகும். இனியும் அலட்சியமாக இருந்தால் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

News June 28, 2024

திருச்சி: 3 நாள் சோதனை; 56 கடைகளுக்கு சீல்

image

திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் மாவட்டத்தை சுற்றி தீவிர சோதனை நடைபெற்றது. இதில், ஜூன் 25, 26, 27 ஆகிய தேதிகளில் அமைக்கப்பட்ட 8 குழுக்களின் மூலம் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 56 கடைகளில் ஆய்வு நடத்தி, சுமார் ரூ.16,60,000 அபராதம் விதித்து சீலிடப்பட்டது.

News June 28, 2024

திருட்டு வழக்கில் 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்.!

image

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ஓட்டுநரின் இருசக்கர வாகனத்தை திருடியதாக சரித்திர பதிவேடு குற்றவாளி வினோத்குமார் மற்றும் இம்ரான்கான் என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் விசாரணையில் ரவுடி வினோத்குமார் மீது 10 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இம்ரான்கான் மீது 7 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததால், 2  இருவரையும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி கமிஷனர் உத்தரவிட்டார்.

News June 28, 2024

திருச்சியில் போலீசாரிடம் சிக்கிய 2 பேர்.!

image

திருச்சி காந்தி மார்க்கெட் பால் பண்ணை பகுதியில் இன்று லாட்டரி சீட்டுகள் விற்றதாக கதிரவன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அதேபகுதியில், கார்த்திகேயன் என்கிற பேக் வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறித்ததாக அர்ஜுன் என்ற வாலிபரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பணம், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!