India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மன்னார்புரம் பகுதி, சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் “மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையம்”விரைவில் அமைய உள்ளது. இந்த நூலகம் அமைப்பதற்கான இடத்தை இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் தேர்வு செய்து, ஆய்வு மேற்கொண்டனர்.
சமயபுரம் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஓதுவார் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் பயிற்சி பெற விரும்புபவர்கள் ஜூலை 19 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோவில் ஆணையர் கல்யாணி நேற்று அறிவித்துள்ளார்.
திருச்சியில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வரும் 15ஆம் தேதி காலை 10 மணி அளவில் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் திருச்சியை சேர்ந்த சிறு, குறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய சான்றிதழ் வழங்கப்படும். எனவே இந்த முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 13/7/2024ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருச்சி கிழக்கு,மேற்கு,திருவெறும்பூர் ஸ்ரீரங்கம்,மணப்பாறை லால்குடி,முசிறி, மணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை அங்காடிகளில் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.எனவே பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு,ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்கும்படி ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து 2024ஆம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப படிவத்தினை தமிழ் வளர்ச்சி துறையின் இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை தொடர்பு கொள்ளவும் அல்லது 0431-2401031 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.
திருச்சி நவல்பட்டு மற்றும் கொணலை பகுதிகளில் இன்று நடைபெற்ற “மக்களுடன் முதல்வர் முகாம்”களில்பொதுமக்களிடமிருந்து 1384 மனுக்கள் பெறப்பட்டது.மேலும் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மனு பெறப்பட்ட 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருச்சி ஊரக வளர்ச்சித்துறை முகமை அலுவலகத்திற்கு சொந்தமான கழிவு செய்யப்பட்ட ஈப்புகளை வரும் 16ஆம் தேதி காலை 11.30 மணிக்கு ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் பகிரங்க ஏலம் விடப்பட உள்ளது.ஏலம் கோர முன்வருவோர் மேற்கூறிய தேதியில் நேரில் ஆஜராகி ஏலம் கேட்கவும்.ஏலம் கோரியவர்கள் தங்களது சொந்த செலவில் வாகன ஆவணங்களை தங்கள் பெயருக்கு மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்
திருச்சி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி என்கிற துரை. இவர் மீது 4 கொலை வழக்குகள் உள்ள நிலையில்,ஒரு வழக்கில் விடுதலையாகி உள்ளார். இந்நிலையில், இன்று புதுக்கோட்டை காட்டுப்பகுதியில் ரவுடி துரையை பிடிக்க சென்ற போலீசாரை துரை தாக்கியதால் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ரவுடி துரையால் தாக்கப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமைச்சர் நேரு நேற்று பேஸ்புக் பக்கத்தில் லால்குடி நகராட்சியில் நலத்திட்ட உதவி வழங்கிய படங்களை பதிவிட்டார்.அமைச்சர் பதிவிட்ட பேஸ்புக் பதிவின் கமெண்ட் பகுதியில் லால்குடி எம்எல்ஏ சவுந்திர பாண்டியன் அமைச்சரிடம் லால்குடி நகராட்சிக்கு பாதாள சாக்கடை திட்டம் குறித்து கோரியிருந்ததை பதிவிட்டார்.சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் பேஸ்புக் பக்கத்தின் கமெண்டில் தான் இறந்ததாக பதிவிட்டது சர்ச்சையை கிளப்பியது.
திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண் குமார் ஜாதி வெறுப்புடன் செயல்படுவதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ஐ.பி.எஸ். அதிகாரி வருண் குமார் ஜாதி வெறுப்புடன் செயல்படுகிறார் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. அவர் தேவர், நாடார், கோனார், தேவேந்திரர்களுக்கு எதிராக செயல்படுகிறார். சாட்டை துரைமுருகனை குறிவைத்து தான் இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது” எனத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.