Tiruchirappalli

News August 2, 2024

துறையூர் மாணவிக்கு அமைச்சர் அறிவுரை

image

துறையூர் சின்னஇழுப்பூரில் ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்று திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் தேர்வாகியுள்ள பழங்குடியினர் மாணவி ரோகினியை, அவரது இல்லத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கே.என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று சந்தித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் கல்வி சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சொல்லும்படி அறிவுரை வழங்கினர்.

News August 2, 2024

பேரிடர் மீட்பு உபகரணங்களை ஆய்வு செய்த அமைச்சர்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகள் துறையின் சார்பில், அமைக்கப்பட்டிருந்த அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும், உபகரணங்களின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

News August 1, 2024

பச்சைமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்

image

துறையூர் பச்சைமலை பகுதியில் நீண்ட நாட்களாக பேருந்து வசதி வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 2 புதிய பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் கோரிக்கையை நிறைவேற்றிய அரசுக்கும் அமைச்சர்களுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

News August 1, 2024

கொள்ளிடம் பாலத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு

image

திருச்சி நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகே உள்ள மின்சார டவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. டவர் இடிந்து விழும்போது கொள்ளிடம் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இரும்பு சாரம் அமைக்கப்பட்டு வருகிறது. அதனை, திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் தற்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். மேலும், போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

News August 1, 2024

காவிரி ஆற்றில் நீராட தடை

image

காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவு செல்வதால் ஆகஸ்ட் 3ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 4ஆம் தேதிகளில் ஆடி 18 மற்றும் ஆடி அமாவாசை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் முன்னோர்களுக்கு திதி கொடுக்க செல்லும் நபர்கள் காவிரியில் இறங்கி நீராட தடை செய்யப்பட்டுள்ளது என திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News August 1, 2024

மின்கோபுரம் அகற்றம்: பொதுமக்கள் எதிர்ப்பு

image

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் சாயும் நிலையில் உள்ள மின்கம்பத்தை கரையின் அருகிலுள்ள அழகியபுரம் கிராமத்தில் 200 மீட்டர் தொலைவில் சாய்க்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதையடுத்து மின் கோபுரத்தில் குழிதோண்டி கயிறு கட்டும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

News August 1, 2024

திருச்சியில் சாலை மறியல்: 300 பேர் கைது

image

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் திருச்சி மாநகர் தெப்பக்குளம் தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 150 பெண்கள் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

News August 1, 2024

திருச்சியில் திடீர் போக்குவரத்து நிறுத்தம்

image

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக நேப்பியர் பாலத்தில் பாதுகாப்பு நலன் கருதி இன்று போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி வழியே வரும் வாகனங்கள் அனைத்தும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

News August 1, 2024

திருச்சியில் வெளியான முக்கிய வரைபடம்

image

தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் திருச்சி மாவட்டத்தில் கலைஞர் நூலகம் கட்டப்படும் என்று அறிவித்தார். தற்போது திருச்சி மாவட்டத்தில் அமைய இருக்கும் நூலகம் தொடர்பான மாதிரி புகைப்படங்கள் ​​​அரசின் அனுமதிக்காக வெளியாகி உள்ளது. இந்த மாதிரிகள் பிரபல தனியார் நிறுவனம் சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News August 1, 2024

முக்கொம்பில் நீர்வரத்தை பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி

image

திருச்சி முக்கொம்புவிற்கு இன்று 1 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கொம்புவில் நீர்வரத்தை பார்வையிட்டார். இதில், அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ் சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!