India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு முகமை சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி திருச்சி மேலப்புலிவார்டு ரோடு மத்வ சித்தாந்த சபாவில் ஆகஸ்ட் 8 முதல் 20 வரை 10 நாட்கள் நடக்கிறது. பயிற்சியில் தங்கத்தின் விலை. கணக்கிடும் முறை, கொள்முதல், உறை கல்லில் தம் அறிதல் போன்ற பயிற்சிகள் அளித்து சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சி கட்டணம் 7500 என்ற எண்ணை விவரங்களுக்கு 94437228438.தொடா்பு கொள்ளலாம். SHARE IT!
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்ட நிதியின் கீழ் “அங்கூரான் அறிவியல் மையம்” அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். மேலும் CSR திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில், அங்கூரான் பவுண்டேஷன் சார்பாக இந்த ஆய்வு மையம் அமையவுள்ளது.
திருச்சி கலையரங்கத்தில் இன்று ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், ரூ. 193.49 கோடி மதிப்பில் 6,205 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது, ரூ.25.05 கோடி மதிப்பில் 1747 முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கப்பட்டன. மேலும் 29,369 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
திருச்சி பாலக்கரையில் போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில் பாண்டி (எ) வீரமுத்து போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். இதேபோல, ஸ்ரீரங்கம் பகுதியில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் 2 நபர்களை கொலை செய்த வழக்கில் அஜய், சரண்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, திருச்சி கமிஷனர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
சூரியூரில் ஒலிம்பிக் அகாடமி மற்றும் சிப்காட் ஆகியவை அமைய உள்ள இடத்தை இன்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். இந்த நிகழ்வின்போது அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
முசிறி அடுத்த திருச்சி – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை, சமயபுரம் டோல்கேட் அருகில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் புதல்வர் விஜய பிரபாகரன் இன்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருச்சிக்கு வருகை தந்தார். இந்நிலையில் திருச்சி தேமுதிக வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே.எஸ்.குமார் ஆலோசனைப்படி பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருச்சியில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில், பள்ளி மாணவ, மாணவிகள் நடித்த வாக்காளர் விழிப்புணர்வு குறும்பட காணொளி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று இந்த குறும்பட காணொளியில் நடித்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேர்தல் ஆணையம் சார்பில், பாராட்டு சான்று விருதினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் சமீபத்தில் 2 இளைஞர்கள் கல்லூரி மாணவிகள் முன்பு சாலையில் பல்டி அடித்து ரீல்ஸ் வெளியிட்டனர். பின்னர், 2 மாணவிகள் பேருந்தில் ஏறுவது போல் சைகை காட்டி விட்டு பின்னர் ஏறாமல் ஏமாற்றி விட்டு சென்றது போன்ற ரீல்ஸ் வெளியானது. இந்நிலையில், 2 கல்லூரி மாணவர்களை கோட்டை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.
துறையூர் பச்சமலையில் நாளை (ஆக.1) இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளும் அரசு விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருக்கவும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவும் அறிவுரை வழங்கினார்.
திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இன்று முழுமையாக நீர் திறந்து விடப்பட உள்ளது. இதனால், கரையோர பகுதிகள், ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சலவை தொழிலாளர்கள், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ பொது மக்களுக்கு அனுமதி இல்லை. மேலும்,கரையோரங்களில் இருந்து செல்பி எடுக்கவும் அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.