Tiruchirappalli

News July 29, 2024

அதிக விளைச்சல் பெற எளிய வழி

image

விதை மாதிரிகளை பகுப்பாய்வு செய்து, விதைகளின் தரத்தினை உறுதி செய்து கொள்ள, திருச்சி விதை பரிசோதனை அலுவலர் அறிவழகன் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார், “தமிழகத்தில், ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் மிதமான மழை பொழியும். இந்த மாதங்கள் தான் விவசாயத்திற்கான மாதங்களாக கருதப்படுகிறது. விவசாயிகள் விதைகளை வாங்கும்போது, விதை பரிசோதனை நிலையத்தில் அவைகளில் தரம் அறிந்து பரிசோதித்து வாங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

News July 29, 2024

கொலைகளுக்கு அரசை குறை கூட கூடாது: அமைச்சர் ரகுபதி

image

தமிழகத்தில் நடக்கும் கொலைகளுக்கு அரசை கூறுவது ஏற்புடையதல்ல என திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், வன்முறை சம்பவங்களுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. திமுக ஆட்சியில் நடக்கும் சம்பவங்கள், அரசியல் குற்றச் சம்பவங்கள் அல்ல” என தமிழகம் கொலை மாநிலமாக மாறியுள்ளதாகக் கூறிய இ.பி.எஸ். கருத்துக்கு விளக்கம் அளித்தார். உங்கள் கருத்து என்ன?

News July 29, 2024

திருச்சி வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு

image

அகமதாபாத்-திருச்சி இடையேயான வாராந்திர ரயில் சேவை ஆக.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆக.1, 8,15 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக திருச்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் இயக்கப்படும். தொடா்ந்து ஜூலை 28, 4, 11, 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும்.

News July 29, 2024

திருச்சியில் அதிமுக பிரமுகர் உட்பட 8 பேர் கைது

image

பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரை தாக்குவதற்காக நேற்று கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கரண், ராம், தினேஷ் உள்ளிட்ட 8 பேர் ஆயுதங்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். தகவலறிந்து அங்கு வந்த அமர்வு நீதிமன்ற காவல் நிலைய போலீஸார் விசாரித்ததை தொடர்ந்து 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News July 28, 2024

அரசியலுக்கு வருவேன்: இயக்குநர் அமீர்

image

நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயரை நிராகதித்ததைவிட, அதற்கு அரசியல் கட்சிகள் ஆதரவளிப்பது வருத்தமாக உள்ளது. வாக்களித்தவர்கள், வாக்களித்தவர்கள் இருவருக்குமே அரசு ஒன்று தான். அப்படி எல்லா மாநிலங்கலையும் அரசு சமமாக பார்க்க வேண்டும்” எனக் கூறினார்.

News July 28, 2024

புறநகர் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

image

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, திருச்சி மாநகரில் பணியாற்றும் பல்வேறு காவல் நிலைய ஆய்வாளர்களையும், தேர்தல் நேரத்தில் வெளி மாவட்டமான திருவாரூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட சிந்துநதி, அரியலூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட ராமராஜன் உள்ளிட்ட பலரை மீண்டும் திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

News July 28, 2024

திருச்சி அணி அதிர்ச்சி தோல்வி

image

திருச்சி – திருப்பூர் இடையேயான TNPL போட்டி நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய திருப்பூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களம் புகுந்தது. இந்நிலையில் 16.5 ஓவர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி தோல்வியடைந்தது.

News July 27, 2024

திருச்சி – தாம்பரம் வரை ஒரு நாள் சிறப்பு ரயில்

image

திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு பண்ருட்டி வழியாக 12 முன்பதிவில்லாத புகார் பெட்டிகள் கொண்ட ஒரு நாள் சிறப்பு ரயில் இயக்கம் நாளை (ஜூலை 28) இரவு 11 மணிக்கு திருச்சியிலிருந்து திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், பண்ருட்டி, விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக 29ஆம் தேதி காலை 6.05க்கு தாம்பரம் செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News July 27, 2024

காவிரி கரையோர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

கர்நாடகா கேரளாவில் பெய்து வரும் மழையினால் மேட்டூர் அணை நாளை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உபரி நீர் காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காவிரி கரையோர கிராமங்களில் உள்ள மக்கள், சலவை தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று (ஜூலை 27) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News July 27, 2024

திருச்சியில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல், தென்காசி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், நெல்லை மற்றும் குமரி மாவட்டத்திற்கு லேசான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!