Tiruchirappalli

News August 5, 2024

திருச்சி அருகே மினி திரையரங்கம்

image

திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் 1.63 ஹெக்டேர் நிலப்பரப்பில் ரூ.13.70 கோடி செலவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொழுது போக்கு பூங்காவுடன் பறவைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 50 பேர் தங்கும் வகையில் மினி தியேட்டர், பூங்கா, உணவகம், ஓய்வறைகள், வாகனம் நிறுத்தும் வசதி உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இம்மாதத்தில் அனைத்து பணிகளும் முடிந்து திறக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2024

திருச்சி பாஜக துணைத் தலைவர் ராஜினாமா

image

தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற தகவல் வேகமாக பரவி வரும் நிலையில், திருச்சி மாவட்ட பாஜக துணைத் தலைவர் ஜெயகர்ணா, தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாகவும், இன்று காலை அதிரடியாக அறிவித்துள்ளார். பாஜகவில் உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் உரிய அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை இந்த குற்றச்சாட்டை முன்னிறுத்தி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

News August 5, 2024

திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

image

புத்தாநத்தம், மணப்பாறை, 33 கே.வி. E.B.ரோடு, தொட்டியம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.6) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. அதன்படி, புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி, கருமலை, காந்தி மார்க்கெட், மணிமண்டபசாலை, சின்னக்கடைவீதி, பெரியகடைவீதி, மலைக்கோட்டை உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 4, 2024

திருச்சி எஸ்பி சீமானுக்கு எச்சரிக்கை

image

சென்னையில் காவல் துறையினரை கெட்ட வார்த்தையால் சீமான் திட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி எஸ்பி வருண்குமார் தனது வழக்கறிஞர் மூலம், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இன்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் அவரது X-தள பதிவில் பொதுமேடையில் சீமான் இப்படி தகாத வார்த்தையில் பேசினால், கடும் தண்டனை வாங்கி தருவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து உங்களின் கருத்துக்களை பதிவிடவும்.

News August 4, 2024

காய்கறி வியாபாரிகளிடம் ரூ.40 லட்சம் கொள்ளை

image

திருச்சி பெட்டவாய்த்தலை அருகே இன்று கும்பகோணத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற காய்கறி வியாபாரிகள் தங்கள் வண்டியை நிறுத்தி டீ குடித்துக் கொண்டிருந்தபோது காரில் வந்த அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் பட்டா கத்தியை காட்டி மிரட்டி, லாரியில் வைத்திருந்த ரூ.40 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவலறிந்த போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News August 4, 2024

தொட்டியத்தில் பட்டாசு வெடித்த இருவர் கைது

image

தொட்டியம் அருகேயுள்ள முதலிப்பட்டியில் நேற்று பட்டாசு வெடித்ததில் ஒருவர் காயம் அடைந்து நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பட்டாசு விற்பனை செய்த ஏலூர்பட்டி கண்ணன், பட்டாசு வாங்கிய கோபால் ஆகிய இருவரை தொட்டியம் போலீசார் கைது செய்து சிறையில் நடத்தினர். மேலும் போலீசார் பட்டாசு விற்பனை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News August 4, 2024

திருச்சியில் 720 பேர் இறப்பு

image

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் நடந்த 2,426 விபத்துகளில் 720 பேர் இறந்துள்ளதாகவும், 736 பேர் படுகாயம் அடைந்ததாகவும் பயனீட்டாளர்கள் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாரப்பன் தெரிவித்துள்ளார். இதில் திருச்சி மாநகரில் இந்தாண்டு மட்டும் 83 பேர் உயிரிழந்துள்ளனர், 202 பேர் காயமடைந்தனர். மேலும் முசிறி, லால்குடி, மனப்பாறை பகுதிகளில் கடந்த 7 மாதத்தில் மட்டும் 72 பேர் இறந்துள்ளனர்.

News August 4, 2024

ஜூலை மாதம் ரேஷனில் பொருள் வாங்கலையா

image

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, திருச்சியில் உள்ள 8,28,526 அட்டைதாரர்கள் ஜூலை மாதத்துக்கான பொருட்களை இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்

News August 4, 2024

திருச்சி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

image

திருச்சி மாவட்டம் மாவட்ட எஸ்பி வருண் குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், 1.50 லட்சம் கன அடி நீர் வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தொட்டியம் புத்தூர், நத்தம் காடுவெட்டி, ஸ்ரீ ராம சமுத்திரம், சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள் விடுத்தார்.

News August 4, 2024

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாதிரித் தேர்வு

image

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2 மற்றும் 2ஏ போட்டி தேர்வுக்கான மாதிரித் தேர்வு ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆர். விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும் என திருச்சி மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!