India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக நேப்பியர் பாலத்தில் பாதுகாப்பு நலன் கருதி இன்று போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி வழியே வரும் வாகனங்கள் அனைத்தும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் திருச்சி மாவட்டத்தில் கலைஞர் நூலகம் கட்டப்படும் என்று அறிவித்தார். தற்போது திருச்சி மாவட்டத்தில் அமைய இருக்கும் நூலகம் தொடர்பான மாதிரி புகைப்படங்கள் அரசின் அனுமதிக்காக வெளியாகி உள்ளது. இந்த மாதிரிகள் பிரபல தனியார் நிறுவனம் சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருச்சி முக்கொம்புவிற்கு இன்று 1 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கொம்புவில் நீர்வரத்தை பார்வையிட்டார். இதில், அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ் சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் அருகே உள்ள அள்ளூர் பகுதியில் செயல்பட்டு வரும் பாரதி தொடக்கப்பள்ளியில் இன்று காலை உணவு திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் தரையில் அமர்ந்து மாணவர்களுடன் சேர்ந்து உணவருந்தினர்.
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு முகமை சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி திருச்சி மேலப்புலிவார்டு ரோடு மத்வ சித்தாந்த சபாவில் ஆகஸ்ட் 8 முதல் 20 வரை 10 நாட்கள் நடக்கிறது. பயிற்சியில் தங்கத்தின் விலை. கணக்கிடும் முறை, கொள்முதல், உறை கல்லில் தம் அறிதல் போன்ற பயிற்சிகள் அளித்து சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சி கட்டணம் 7500 என்ற எண்ணை விவரங்களுக்கு 94437228438.தொடா்பு கொள்ளலாம். SHARE IT!
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்ட நிதியின் கீழ் “அங்கூரான் அறிவியல் மையம்” அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். மேலும் CSR திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில், அங்கூரான் பவுண்டேஷன் சார்பாக இந்த ஆய்வு மையம் அமையவுள்ளது.
திருச்சி கலையரங்கத்தில் இன்று ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், ரூ. 193.49 கோடி மதிப்பில் 6,205 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது, ரூ.25.05 கோடி மதிப்பில் 1747 முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கப்பட்டன. மேலும் 29,369 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
திருச்சி பாலக்கரையில் போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில் பாண்டி (எ) வீரமுத்து போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். இதேபோல, ஸ்ரீரங்கம் பகுதியில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் 2 நபர்களை கொலை செய்த வழக்கில் அஜய், சரண்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, திருச்சி கமிஷனர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
சூரியூரில் ஒலிம்பிக் அகாடமி மற்றும் சிப்காட் ஆகியவை அமைய உள்ள இடத்தை இன்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். இந்த நிகழ்வின்போது அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
முசிறி அடுத்த திருச்சி – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை, சமயபுரம் டோல்கேட் அருகில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் புதல்வர் விஜய பிரபாகரன் இன்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருச்சிக்கு வருகை தந்தார். இந்நிலையில் திருச்சி தேமுதிக வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே.எஸ்.குமார் ஆலோசனைப்படி பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.