Tiruchirappalli

News October 14, 2024

திருச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

திருச்சி மாவட்டத்தில் வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் பெண்களை பல்வேறு தனியார் துறைகளில் பணியமரத்த செய்யும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 18ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்களை கலந்து கொண்டு பயன்பெற ஆட்சியர் இன்று அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 14, 2024

திருச்சியில் மயிலாடுதுறை எம்பிக்கு பாராட்டு

image

தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங்கை மயிலாடுதுறை எம்பி ஆா்.சுதா கடந்த 1ஆம் தேதி நேரில் சந்தித்து மனு அளித்தாா். அதில் திருச்சி-மயிலாடுதுறை வழித்தடத்தில் பகல் நேரத்தில் கூடுதலாக ரயில் சேவை வேண்டி கோரிக்கை இருந்தது. இதனையடுத்து கடந்த திருச்சி – மயிலாடுதுறை வழித்தடத்தில் இண்டர் சிட்டி சேவை துவங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆா்.சுதாவுக்கு ரயில் பயணிகள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.

News October 14, 2024

கழிப்பறை விவகாரம்: பெண் எஸ்ஐ அதிரடி மாற்றம்

image

துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த எஸ்ஐ லதா காவல் நிலையத்தில் உள்ள பெண்களுக்கான கழிப்பறையை பூட்டி அதன் சாவியை தானே வைத்துக் கொண்டு அவர் மட்டும் பயன்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்து எஸ்பி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த மனிதத் தன்மையற்ற செயலால் பெண் எஸ்ஐ, பெண்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். COMMENTIT

News October 14, 2024

திருச்சி மாவட்ட மக்களுக்கு இலவச பயிற்சி

image

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு வழிகாட்டல் நிகழ்வு நடைபெறுகிறது. இதில் தேர்வு எழுதுவோருக்கான பாடத்திட்டம், புத்தகங்கள், தயார் செய்யும் உத்திகள் குறித்து விளக்கப்படவுள்ளது. மேலும் தேர்வுகளுக்கு தயார் செய்பவர்கள் தங்களது சந்தேகங்கள் குறித்து நேரடியாக விளக்கம் பெற்றுக்கொள்ளலாம். இவை அனைத்தும் இலவசம் என மாவட்ட மைய நூலகர் தனலட்சுமி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 14, 2024

திருச்சியில் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரபரப்பு

image

ஆப்ரேஷன் அகழியில் சிக்கிய திருச்சி, அரியமங்கலத்தை சேர்ந்த மோகன் பட்டேல் என்ற நிலவணிகர் வீட்டில் எஸ்பியின் தனிப்படையினர் எஸ்.ஐ.ரெஜி தலைமையில் 20க்கும் மேற்பட்ட பெண் போலீசாருடன் சோதனை இட முயற்சி செய்த நிலையில், பட்டேல் எஸ்கேப் ஆனதாலும், மோகன் பட்டேல் குடும்பத்தினர் வீட்டை பூட்டிக்கொண்டு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும் திருச்சி அரியமங்கலத்தில் பரபரபரப்பு நிலவுகிறது.

News October 13, 2024

திருச்சி நட்சத்திர ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

திருச்சியில் உள்ள 4 நட்சத்திர ஹோட்டல்களுக்கு இன்று மர்ம நபர்கள் ஈமெயில் மூலம் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளனர். தொடர்ந்து இந்த மாதத்தில் மட்டும் 4ஆவது முறையாக ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கண்டோன்மென்ட் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 13, 2024

திருச்சியில் செல்போன் திருடியவர் கொலை

image

திருச்சி தில்லைநகர் அண்டகுண்டானை சேர்ந்த இசார் அலியின் மொபைல் போனை சதாம் உசேன் என்பவர் திருடி தலைமறைவாகி உள்ளார். அதனை தொடர்ந்து இசார் அலி, சதாம் உசேனை தேடி வந்த நிலையில், நேற்று சதாம் உசேனை சந்தித்த இசார் அலி மொபைல் போனை கேட்ட போது ஏற்பட்ட தகராறில் இசார் அலி சதாம் உசேனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 12, 2024

பலத்த மழையால் மின்வெட்டு

image

மருதாண்டா குறிச்சி பகுதியில் இன்று காலை 5மணியில் இருந்து இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் பிரேக் டவுன் ஏற்ப்பட்டுள்ளது. பல முறை முயன்றும் பவர் நிக்கவில்லை. இதனால் காலையில் இருந்து அப்பகுதியினர் மின்சாரம் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர். மின் பழுதை மின்சார ஊழியர்கள் சரிசெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News October 11, 2024

141 பயணிகளை காப்பாற்றிய விமானிக்கு குவியும் பாராட்டு

image

திருச்சியில் வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 141 உயிர்களை காப்பாற்றிய விமானி டேனியல் பெலிசோவுக்கு அதிகாரிகள் மற்றும் பயணிகள் பெரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இரண்டு மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் பயணிகளும் அதிகாரிகளும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News October 11, 2024

திருச்சியில் வட்டமிடும் விமானத்தால் பரபரப்பு

image

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருச்சியில் இருந்து இன்று மாலை சார்ஜா புறப்பட்ட விமானத்தில் சக்கரங்கள் உள்ளே செல்லாததால் விமானம் மீண்டும் விமான நிலையத்திலேயே தரையிறக்க முயற்சி செய்யப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறால் வானத்தில் வட்டமடிக்கும் விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!