Tiruchirappalli

News September 10, 2024

சமயபுரம் கோயில் காணிக்கை ரிசர்வ் வங்கியில் முதலீடு

image

சமயபுரம் கோயில் காணிக்கைகள் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி துரைசாமி ராஜூ தெரிவிக்கையில், சமயபுரத்தில் காணிக்கையாக செலுத்தும் தங்கம் அனைத்தும் ஒரே தரத்துடன் இருக்காது. இவற்றைத் தரம் பிரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி முடிந்த பின், பாரத ஸ்டேட் வங்கி மூலமாக மும்பையில் உள்ள அரசின் உருக்காலையில் 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றி, ரிசர்வ் வங்கியில் முதலீடு செய்யப்படும் என்றார்.

News September 10, 2024

திருச்சியில் ரயில் டிக்கெட் முன்பதிவு அறிவிப்பு

image

பொங்கல் பண்டிகைக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ஆம் தேதி முதல் தொடங்குவதாக திருச்சி ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 10 ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர், செப். 12 ஆம் தேதியும், ஜனவரி 11ஆம் தேதி பயணம் செய்ய செப். 13ஆம் தேதியிலும், ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்ய செப். 14ஆம் தேதியும் ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்ய செப்.15ஆம் தேதி தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம்.

News September 10, 2024

திருச்சி மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வு: சீமான் எச்சரிக்கை

image

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது X-தளத்தில், திருச்சி சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் மற்றும் அவர்களது நண்பர்கள் சேர்ந்து கல்லூரி மாணவி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி அதனை காணொளி பதிவு செய்து மிரட்டியுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று அவர் கூறியுள்ளார்.

News September 10, 2024

திருச்சியில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

image

அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்கா சென்று உள்ள தமிழக முதல்வரின் முயற்சியால் “மணப்பாறை தொகுதிக்குட்பட்ட சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் JABIL தொழிற்சாலை அமையவுள்ளது” என அறிவித்துள்ளார். இதன் மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளதாகவும் அதற்காக திருச்சி மக்கள் சார்பில் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

News September 10, 2024

கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

image

வாத்தலை அடுத்த கொள்ளிடம் ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக வாத்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அடையாளம் தெரியாத பெண் சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த பெண் யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News September 9, 2024

திருச்சி கலெக்டரிடம் குவிந்த மனுக்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 514 மனுக்கள் வழங்கப்பட்டது. இதில், இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ், இதர சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, அரசின் நலத்திட்ட உதவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டது.

News September 9, 2024

திருச்சியில் 1700 போலீசார் பாதுகாப்பு பணி

image

திருச்சி மாநகரில் இன்று விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வு காவிரி ஆற்றில் கொண்டாடப்பட உள்ளது. இதனால், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படாதவாறு பாதுகாப்பு பணியில் 1700 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இன்று தெரிவித்துள்ளார்.

News September 9, 2024

திருச்சி அருகே கார் மோதி 8 வயது சிறுமி பலி

image

புதுக்கோட்டை மாவட்டம், கலிங்கிப்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகள் ரெஜினா (8).மணப்பாறை அருகே வளநாடு கைகாட்டி மேற்கு களத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு சிறுமி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை (செப்.8) வீட்டின் அருகே சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதியதில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News September 9, 2024

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நாளை குரூப்-2 மாதிரித்தேர்வு

image

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 மற்றும் 2ஏ போட்டித்தேர்வுக்கான மாதிரி தேர்வு நாளை பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. மாதிரி தேர்வில் முதல் 5 இடங்களை பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.3000, இரண்டாம் பரிசாக ரூ.2000, மூன்றாம் பரிசாக ரூ.1500, நான்காம் பரிசாக ரூ.1000, ஐந்தாம் பரிசாக ரூ.500 வழங்கப்படும் என மாவட்ட மைய நூலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News September 8, 2024

திருச்சி அருகே வாகன விபத்து: வாலிபர் பலி

image

திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில், முத்தரசநல்லூர் அடுத்த கணவனூர் பகுதியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கரத்தில் வந்த காமநாயக்கன் பாளையத்தை சேர்ந்த வாலிபர் பிரசன்னா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!